ShareChat
click to see wallet page
search
#ulaviyal sinthanay தெரியாததை சுட்டிக் காட்டினால், அப்படி ஒரு கோபம் வருகிறது. இது மட்டுமா?, தெரியாததை தெரியாது என்று ஒப்புக் கொள்ளவும் மனம் வருவதில்லை...*_ _தெரியாது என்பது வெளியில் தெரிந்தால்,_ _*●வெட்கமாம்,*_ _*●அழகிற் கேடாம்,*_ _*●இழிவாம்,*_ _*●அவமானமாம்,*_ _*●மானக்கேடாம்...*_ _ஆனால்!, இப்படி இல்லவே இல்லை. எல்லாம் தெரியும் என்று பச்சைப் பொய்யை பல்லாண்டுகளாக கூறி, புளுகு மூட்டைகளாகவும், அறியாமையின் குவியல்களாகவும் வாழ்கின்றனர் பலர்..._ _*அறியாமை வெட்கப்பட வேண்டியதல்ல;*_ _*அதை ஒப்புக் கொள்ளாமல் இருப்பதுதான் வெட்கப்பட வேண்டியது...*_ _பொய் சொல்லிப் பெருமை தேட முயற்சிப்பது. கைப் பைக்குள் நெருப்புத் துண்டுகளை வைத்து மூடிக்கொண்டு செல்வது போன்றதாகும்..._ _*வாழ்க்கை என்பது அனுபவங்களானது. ஒவ்வொரு மணித்துளிகளும் நாம் கற்றுக் கொள்ளவும், வருவதை ஏற்றுக் கொள்ளவும், வேண்டாததை மாற்றிக் கொள்ளவும், கூடிய அறிவையும் அனுபவங்களையும் கொடுத்துக் கொண்டிருப்பதுதான் வாழ்க்கையாகும்...*_ _ஆகவே!, உள்ள நிலையை அறிவதிலும், உணர்ந்து அனுபவங்களைப் பெறுவதிலும் உள்ள திறமையே உற்சாகத்தையும் உண்மையான மகிழ்ச்சியையும் அளிக்கிறது..._ _*எல்லாம் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும், எல்லாவற்றிலும் நாம் திறமை மிக்கவராக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதில் தவறில்லை...*_ _ஆனால்!, அப்படி இருக்கத்தான் வேண்டும் என்பது அவசியமுமில்லை. அப்படி இருக்கவும் முடியாது..._ _*நமக்குத் தெரிந்ததை தெரியும் என்போம்.*_ _*தெரியாததை தெரியாது என்போம். இது தவறொன்றும் இல்லை.*_ _*அவமானமில்லை...*_ _நம்மால் செய்ய முடிகின்ற செயலை முடியும் என்போம். முடியாததை என்னால் இயலாது என்போம்..._ _*அப்படி ஒப்புக்கொள்வது என்பது மோசமான தன்மை அல்ல, நேர்மையான பண்பாகும்...*_
ulaviyal sinthanay - 1 క్రీ 1 క్రీ - ShareChat