ShareChat
click to see wallet page
search
கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகளை கேட்டதால்தான், அவர்களுக்கு அத்தனை ஆத்திரம். 'பாவ மன்னிப்பு' படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம் அது. அதற்கான பாடல்களை எழுதியவர் கண்ணதாசன். படப்பிடிப்பு நல்லபடியாக முடிந்து சென்சாருக்கு போனது. படத்தில் ஆரம்பத்தில் சிவாஜி பாடுவதாக வரும் 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை..' பாடலைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் பதறிப் போனார்கள். "இல்லை . இந்த பாடல் வரியை அனுமதிக்க முடியாது." "ஏன் ?" "அந்தப் பாடலின் இடையில் கண்ணதாசன் எழுதிய வரியில் மாபெரும் தவறு இருக்கிறது." "தவறா ?" "ஆமாம். அது என்ன 'எதனைக் கண்டான் மதங்களை படைத்தான்' என்று எழுதி இருக்கிறார் ? அதை மாற்றி எழுதித் தர சொல்லுங்கள். இல்லாவிட்டால் இந்தப் பாடலை அனுமதிக்க முடியாது." படக் குழுவினர் கண்ணதாசனிடம் போய் சொன்னார்கள். சென்சார் கண்டித்து அனுப்பிய தன் பாடலை கண்ணதாசன் வாசித்துப் பார்த்தார். "பறவையை கண்டான் விமானம் படைத்தான் பாயும் மீன்களில் படகினை கண்டான் எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான் எதனைக் கண்டான் மதம்தனைப் படைத்தான்." கண்ணதாசன் புன்னகையுடன் சொன்னார்: "நான் சரியாகத்தானே எழுதி இருக்கிறேன். சென்சாரிடம் போய் சொல்லுங்கள் #கவிஞர் கண்ணதாசன்
கவிஞர் கண்ணதாசன் - ShareChat