ShareChat
click to see wallet page
search
ஸ்ரீ (969)🏹🚩இன்று ஐப்பசி மாதம் ஹஸ்தம். கூரம் என்னும் ஊரில், ஹாரீத கோத்ரம், வடமான் குலத்தைச் சேர்ந்த அனந்தர், பெருந்தேவி நாயகி தம்பதியருக்குப் பிறந்தார். கலி யுகம் 4111 சௌம்ய ஆண்டு (1009ஆம் ஆண்டு) தைத் திங்கள், அஸ்த நட்சத்திரம், தேய்பிறை, பஞ்சமி திதி, வியாழனன்று அவதரித்தார். பெருமாளுக்கு ஏற்றம் தருவது, அவரது திருமார்பில் விளங்கும் திருமறு. இதன் அம்சமாகப் பிறந்தவர் கூரத்தாழ்வார். இவரும் தனது மார்பில் திருமறு கொண்டி ருந்தார். இவர் காஞ்சிக்கு அருகே உள்ள கூரம் என்ற கிராமத்தில் பிறந்ததால், கூரேசர் என்று அழைக்கப்பட்டார். ஆழ்வானுடைய தனியன் ஸ்ரீவத்ஸ சிந்ந மிஸ்ரேப்யோ நம உக்திம தீமஹே: யதுக்தயஸ் த்ரயி கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம். இவரது இயற்பெயர் ஸ்ரீ வத்சாங்கமித்சர். தமிழில் இதன் பொருள் திருமறுமார்பன். ஸ்ரீ வைணவ நெறிகளில் சிறந்து விளங்கியதால், கூரத்துக்கு அரசர் எனப் பொருள்படும் வகையில் கூரேசர் என்ற பெருமைப் பெயரும் பெற்றார். சரணாகதி நிஷ்டைக்கு மிகச்சிறந்த உதாரணம் கூரத்தாழ்வான். புருஷ குணங்கள் எல்லாவற்றிலும் சிறந்து விளங்கியவராய், ஜீவகாருண்யம், ஆச்சார்ய பக்தி, வைராக்கியம் , பாண்டித்தியம் பெற்றவராய் விளங்கிய கூரத்தாழ்வான், வைணவத்துக்காகத் தன் கண்களையே இழந்தவர். இவர் பெருமாளைப் பற்றியும், அவரின் சிறப்புகள் பற்றியும் உலகம் முழுவதும் எடுத்துரைக்கும், நல்ல பல நூல்களை எழுதினார். அவர் காட்டிய வழியில் நாமும் செல்வதே, அவருக்கு நாம் செய்யும் தொண்டாகும். இவரின் அவதாரத் தலமான கூரம், காஞ்சியிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மொழியைக் கடக்கும் பெரும் புகழான் வஞ்சமுக் குறும்பாம் குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண் கூடிய பின் பழியைக் கடந்து மிஇராமானுசன் புகழ் பாடி அல்லா வழியைக் கடத்தல் எனக்கினி யாதும் வருத்தம் அன்றே“ இவ்வாறு ராமானுஜ நூற்றந்தாதி யில் சொல்லப்பட்டுள்ளது.. கூரத்தாழ்வான் , ஸ்ரீ அதிமானுஷ ஸ்தவம், சுந்தர பாஹு ஸ்தவம், வரதராஜ ஸ்தவம், வைகுண்ட ஸ்தவம், ஸ்ரீ ஸ்தவம், தாடி பஞ்சகம் மற்றும் பிரார்த்தன பஞ்சகம் என ஏழு வடமொழி நூல்களை இவர் இயற்றியுள்ளார்.. அவர் கண்பார்வை இல்லாத காலத்தில் இயற்றப்பட்ட ஸ்தவம், சுந்தர பாஹூ ஸ்தவம்..” ஸ்தவம்” என்றால் துதி என்று தமிழில் பொருள்.. பெருமாளை வேண்டும் முன், தாயாரின் கருணையும், கடாக்ஷமும் தேவை..எனவே தாயாரினை துதி செய்ய ஸ்ரீஸ்தவம் வகை செய்கிறது.. “ஸ்வஸ்தி ஸ்ரீர்திசதாத் அசேஷ ஜகதாம் ஸர்கோபஸர்க்க ஸ்திதி தீ: ஸ்வர்க்கம் துர்கதிமா பவர்க்கிக பதம் ஸர்வஞ்ச குர்வன் ஹரி:! யஸ்யா வீக்ஷ்ய முகம் ததீங்கிகித பராதீனோ விதத்தேகிலம் கிரீடேயம் கலு பார்ட் தாசஸ்ய ரஸதா ஸ்யாதை கரஸ்யாத்தயா!! இவ்வாறு துவங்கும் ஸ்ரீ ஸ்தவம் 11 ஸ்லோகங்களை கொண்டது.. இந்த முதல் ஸ்லோகத்தில் சொல்லப்பட்டது யாதென்றால், பகவான் ஹரி நாராயணன், படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று பணிகளையும் செய்யும்போது, பிராட்டியின் அழகான முகக்குறிப்பு என்ற இணக்கத்தின் காட்சியிலேயே இவைகளை செய்கிறார்.. இத்தகைய சக்தியுடைய, எல்லா காலங்களிலும், இடங்களிலும் அகலகில்லேன் இறையும் என்று “ஸ்ரியப்பதி” பகவானுடன் எப்போதும் சேர்ந்தே இருக்கின்ற விஷ்ணு பத்தினியான பிராட்டியே! மிகுந்த பக்தியும் ஞானமும் அளித்து என்னை ரக்ஷிப்பாயாக!!” தனியன் ஸ்ரீவத்ஸ சிந்ந மிஸ்ரேப்யோ நம உக்திம தீமஹே: யதுக்தயஸ் த்ரயி கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்: கூரத்தாழ்வான் அருளிய பஞ்சஸ்தவம் வேதத்திற்கு மங்கள சூத்திரமாக (திருமாங்கல்யம்) உள்ளது (அதாவது இது இல்லாமல் பரதேவதை யார் என்ற தெளிவு நமக்கு கிடைத்திருக்காது), அவரை நான் வணங்குகிறேன். ரித்ய பூர்வே மூர்த்நா யஸ்யாந்வயமுபகதா தேசிகாமுக்திமாபு: ஸோயம் ராமனுஜமுனிரபி ஸ்வீயமுக்திம் கரஸ்தாம் யத் ஸம்பந்தாதமநுத கதம் வர்ண்யதே கூரநாத: கூரத்தாழ்வானுடைய வைபவத்தை எப்படி நாம் வார்த்தையினால் சொல்லி முடிக்க முடியும் (மொழியைக் கடக்கும் பெரும்புகழான் / வாசா மகோசர)? ஒவ்வொருவருக்கும் எம்பெருமானார் மூலமாகவே மோக்ஷம் கிடைக்கிறது. சிலர் (எம்பெருமானாருக்கு முன்புள்ள ஆசார்யர்கள்) அவருடைய திருமுடி சம்பந்தம் மூலமாகவும், மற்றவர்கள் (எம்பெருமானாருக்கு பின்புள்ள ஆசார்யர்கள்) அவருடைய திருவடி சம்பந்தத்தின் மூலமாகவும் மோக்ஷத்தை அடைகிறார்கள். இத்தகைய எம்பெருமானாரே தனக்கு மோக்ஷம் கிடைத்தது கூரத்தாழ்வானாலே என்று கருதினார் வாழி திருநாமம் சீராரும் திருப்பதிகள் சிறக்கவந்தோன் வாழியே தென்னரங்கர் சீர் அருளைச் சேருமவன் வாழியே பாராரும் எதிராசர் பதம் பணிந்தோன் வாழியே பாடியத்தின் உட்பொருளைப் பகருமவன் வாழியே நாராயணன் சமயம் நாட்டினான் வாழியே நாலூரான் தனக்கு முத்தி நல்கினான் வாழியே ஏராரும் தையில் அத்தத்திங்கு வந்தான் வாழியே எழில் கூரத்தாழ்வான் தன் இணை அடிகள் வாழிய அடியேன் ராமானுஜ தாசன் #பெருமாள்
பெருமாள் - ShareChat