கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அருகே குளத்தில் தவறி விழுந்து பள்ளி மாணவன் உயிரிழந்துள்ளார்.
நாகர்கோவில் கணபதிநகர் சின்னத்துரையின் மகன் ஆரோன் (14), 9-ம் வகுப்பு படித்து வந்தார். நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக 5 பேர் குளிக்கச் சென்ற போது, ஆரோன் மற்றும் மற்றொருவர் தவறி விழுந்தனர்.
அருகிலிருந்தோர் மீட்டும் ஆரோன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். ஆசாரிபள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #விபத்து #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்


