ShareChat
click to see wallet page
search
*அக்டோபர் 11,* *சாமுவேல் வேதநாயகம் பிள்ளை* புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளரும், மறுமலர்ச்சி கவிஞருமான சாமுவேல் வேதநாயகம் பிள்ளை 1826ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி திருச்சி மாவட்டத்திலுள்ள குளத்தூரில் பிறந்தார். இவர் மாயூரம் மாவட்ட முன்சீஃபாக 13 ஆண்டுகள் பணிபுரிந்ததால், மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்றே அழைக்கப்பட்டார். வாழ்க்கை நெறிகள், பொது நீதிகள், பெண் கல்வி, ஒற்றுமை உணர்வு, புதிய சிந்தனைகள், முற்போக்கு கருத்துகள் ஆகியவை இவரது கவிதைகளின் கருப்பொருளாக அமைந்தன. தமிழகத்தில் பஞ்சம் ஏற்பட்டபோது, தன் சொத்துகள் அனைத்தையும் தானமாக வழங்கினார். குழந்தை திருமணம், உடன்கட்டை ஏறும் வழக்கத்தை கடுமையாக எதிர்த்தார். தமிழின் முதல் புதினத்தைப் படைத்தவரும், மறுமலர்ச்சி கவிஞரும், சமூக சீர்திருத்தவாதியுமான சாமுவேல் வேதநாயகம் பிள்ளை 62வது வயதில் (1889) மறைந்தார். #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 #தெரிந்து கொள்வோம்
🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 - ஏதலம முதலிமூலி சவித்திறி மாபரம் Bupnluob (11 10-1826 > 217-1889) ஏதலம முதலிமூலி சவித்திறி மாபரம் Bupnluob (11 10-1826 > 217-1889) - ShareChat