ShareChat
click to see wallet page
search
#🕉️🔱சர்வம் சிவா மாயம்🔱 . 🟨. 🕉️🟨 *சர்வம் சிவமயம்* *ஆன்மீக பயணம்* *✶⊷⊷❍ 𝑴K ❍⊶⊷✶* 🟨🦚. 🟨. 🦚🟨 கும்பகோணம் நாச்சியார்கோயில் ஸ்ரீ வஞ்சுளவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ திருநறையூர் நம்பி பெருமாள் திருவடிகளே சரணம் ... !!! . மேதாவி முனிவருக்கு வாக்களித்தபடி, திருமால், இத்தலத்தில் தாயாருக்கே முன்னுரிமை அளித்து அருள்பாலிக்கிறார். அதன்படி தாயரை மையப்படுத்தியே கருவறை அமைக்கப்பட்டுள்ளது. பெருமாளைவிட சற்று முன்புறம் தாயார் நின்ற கோலத்தில் அருள்கிறார். . வீதியுலா செல்லும்போதும் தாயாருக்குப் பின்னரே பெருமாள் எழுந்தருள்கிறார், தாயாருக்கே முதலில் திருமஞ்சனம் நடைபெறுகிறது. அனைத்தையும் தாயாரே நிர்வாகம் செய்கிறார் என்பதை உணர்த்தும் விதமாக, கையில் கிளி, இடுப்பில் சாவிக்கொத்து வைத்தபடி தாயார் அருள்பாலிக்கிறார். . திருமாலுக்கும் வஞ்சுளவல்லிக்கும் கருடாழ்வார் முன்னிலையில் திருமணம் நடைபெறுகிறது. அப்போது திருமால், தான் இத்தலத்தில் மனைவி சொல் கேட்டு நடப்பவராக இருப்பதால், கருடாழ்வாரே முன்னின்று பக்தர்களுக்கு அருள வேண்டும் என்று அவரிடம் கூறுகிறார். அதை ஏற்ற கருடாழ்வார், இத்தலத்தில் பிரதான மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பிராட்டி பெயரால், இத்தலம் ‘நாச்சியார் கோவில்’ என்று அழைக்கப்படுகிறது. . ஆண்டுதோறும் இத்தலத்தில் நடைபெறும் கல்கருட சேவை, புகழ் பெற்றதாகும். 🟨🕉️. 🟨. 🕉️🟨 *சர்வம் சிவமயம்* *ஆன்மீக பயணம்* *✶⊷⊷❍ 𝑴K ❍⊶⊷✶* 🟨🦚. 🟨. 🦚🟨
🕉️🔱சர்வம் சிவா மாயம்🔱 - சிவமயம்  சர்வம்  வாட்ஸ்அப்குரூ ) Sri Vanjulavalli Thayar Samedh Sri Thirunarayur Nambiz JR Nachiyar Kovil Thanjavur Dt சிவமயம்  சர்வம்  வாட்ஸ்அப்குரூ ) Sri Vanjulavalli Thayar Samedh Sri Thirunarayur Nambiz JR Nachiyar Kovil Thanjavur Dt - ShareChat