ShareChat
click to see wallet page
search
ஸ்ரீ (969)🏹🚩#மரண ஓலம், கதறல் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும் உடற்கூறாய்வு கட்டிடம் சுமார் 300 பேர் இருப்பார்கள். இடம் கரூர் மருத்துவக் கல்லூரி பின்புறம். முன்புறமும் 700 லிருந்து 800 நபர்கள் பதட்டத்துடனும் அதிர்ச்சியிலும் அலை மோதிக் கொண்டிருந்தார்கள். காவல்துறையோ அவர்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் இருந்தார்கள். அந்தப் பகுதியே சோகத்திலும் பதட்டத்திலும் இருந்தது. #ஆனால் அதில் வட்டமாக ஒரு பத்து பதினைந்து பேர் நிதானமாக பேசிக் கொண்டிருந்தார்கள் அருகிலே சென்று பார்த்தபோது அவர்கள் பேசிக் கொண்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது. அதில் ஒருவர் முதலில் நாம் செய்ய வேண்டியது என்ன என்கிறார். இன்னொருவர் முதலில் தண்ணீர் மிக முக்கியம் என்கிறார். மற்றொருவர் கடைகள் அடைத்திருக்கும் என்றார். சரி தெரிந்தவர்கள் கடை இருந்தால், அவர்களை வீட்டிற்கு சென்று அழைத்து வந்து கடைகளை திறந்து தண்ணீர் பாட்டில்கள் எவ்வளவு கிடைக்கிறதோ அவ்வளவு அள்ளிக் கொண்டு வருவோம் என்றார். சற்று நேரத்தில் அங்கிருந்து நகர தொடங்கினார்கள். #மருத்துவமனை முன்புறம் இருந்த தனியார் உணவகத்திற்கு சென்று சில நூறு தண்ணீர் பாட்டில்களை கூட்ட நெரிசலில் கொண்டு வந்து கொடுத்தார்கள். பின்புறமோ கதறி அழுது நிலைமறந்த தருவாய் அது. மயங்கி விழுந்த சிலருக்கு தண்ணீர் பயன்பட்டது. முன்புறம் இருந்த காவலர்கள் மற்றும் ஊடகத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு தண்ணீர் பயன்பட்டது. #காலையில் எட்டு மணிக்குமேல் சென்று பார்த்த போது இரவில் தண்ணீர் கொடுத்தவர்கள் உணவு வழங்கிக் கொண்டிருந்தார்கள். மேலும் அவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது, கரூரின் வெய்யிலால் தண்ணீரின் தேவை அதிகமானது. அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் தண்ணீர் தேவைப்பட்டது. ஒவ்வொரு அரசியல் தலைவர்கள் வரும்பொழுதும் அங்கு கூடும் கூட்டங்களை கட்டுப்படுத்த முயற்சிக்கும் காவல்துறையினர், வெளியே வெயிலில் நிற்கும் காவலர்கள் என அனைவருக்கும் தண்ணீர் வழங்கினார்கள். தண்ணீரின் தேவையை அவர்கள் முகத்தில் பார்த்து தண்ணீர் கொடுப்பதை தீவிர படுத்தினர். #அதில் பலர் நன்றியும் சிலர் நீங்கள் யார் என்றும் கேட்டார்கள் தாங்கள் யார் என்று சொல்லிக் கொண்டே தண்ணீர் கொடுப்பதில் கவனம் செலுத்தி நகர்ந்து சென்றார்கள். பொதுமக்கள், காவலர்கள், ஊடகத்தினர், பாதிக்கப்பட்டவர்கள் தேநீர் கடையில் பேசிக் கொண்டவர்கள் கூறியது என்னவென்றால் யார் இவர்கள்? தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று இவர்களுக்கு எப்படி தோன்றியது? வேறு யாரும் இதை செய்யவில்லையே.. அரசாங்கமும் இதை செய்யவில்லை,, அவர்களைப் பற்றிய ஆவல் அதிகமானது. #சுயநலமாக யோசிக்கும் இந்த சமுதாயத்தில் இரவு பகலாய் சேவையை செய்யும் இவர்கள் யார்? அவர்கள் முகத்தில் சுயநலம் இல்லை.. இந்த சோக சம்பவத்திற்கு யார் காரணம் கேட்கவில்லை.. அரசியல் பேசவில்லை.. அவர்கள் கேட்டது தண்ணீர் வேண்டுமா? உணவு வேண்டுமா? வேறு என்ன உதவி வேண்டும்? என்று மட்டுமே ஒட்டுமொத்த மக்களின் கேள்வி இவர்கள் யார் ? #ஆம் அந்தக் கேள்விக்கு பதில் #RSS #ஸ்வாரஸ்யம் என்னவென்றால் சம்பந்தப்பட்ட இரு கட்சிகளும் எதுவும் செய்யவில்லை பிற தன்னார்வலர்கள் பிற சேவை அமைப்புகளும் இதை செய்யவில்லை. ஆனால் ஆர்எஸ்எஸ் செய்தது. RSS என்னுடைய கருத்தியலுக்கு இனியும் எதிரானதுதான் ஆனால் RSS ஐ நேசிக்கிறேன் என்று சொல்லி சென்றார் ஒரு கட்சிக்காரர்... #rss
rss - ஆர்எஸ்எஸ் 1925-2025 100 ஆர்எஸ்எஸ் 1925-2025 100 - ShareChat