இன்று இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாள் - நவம்பர் 19, 1917. இந்திரா காந்தி இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார்.
அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார்
இவர் ஒரு சிறந்த அரசியல் திட்டமிடலாளரும், சிந்தனையாளரும் ஆவார். அரசியல் அதிகாரத்துக்கான அசாதாரண பற்றை அவர் கொண்டிருந்தார்.
ஆணாதிக்க மனப்பாங்கைக் கொண்ட இந்திய சமுதாயத்தில் துணிச்சலுடனும் வலுவான அதிகார பலத்துடன் மிகவுயர்ந்த பதவியிலிருந்து நாட்டை வழி நடத்தினார். இவரது ஆட்சிக்காலத்தில் பல சாதனைகளும் பல சறுக்கல்களும் உண்டு.
பிரஞ்சு மொழியில் சரளமாகப் பேசும் ஆற்றல் பெற்றிருந்த இந்திரா காந்தி பிரான்ஸ் விஜயத்தின்போது அந்நாட்டு பாராளு மன்றத்தில் பிரெஞ்சு மொழியிலேயே உரையாற்றி ஆரவாரமான கைதட்டல்களைப் பெற்றார்.
பிரஞ்ச் பொது மக்கள் கருத்து நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பு/வாக்குபதிவின்படி 1967 மற்றும் 1968 ஆம் ஆண்டுகளில் பிரஞ்ச் மக்களால் மிகவும் ரசிக்கப்பட்ட நபராக இருந்தார்
1971ல் அமெரிக்காவின் சிறப்பு கேலப் வாக்கெடுப்பின்படி திருமதி இந்திரா காந்தி உலகிலேயே மிக அதிக மக்களால் விரும்பப்பட்ட பெண்மணி ஆவார்.
#முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி


