ஸ்ரீ (969)🏹🚩ஸ்ரீ மதே ராமானுஜாய நம 🙏🙇♂️✨
ஸ்வாமி எம்பெருமானாரின் வாழி திருநாமம் 🙏🙇♂️✨
அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே 🙏🙇♂️✨
அருட்கச்சி நம்பியுரை ஆறுபெற்றோன் வாழியே 🙏🙇♂️✨
பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே 🙏🙇♂️✨
பதின்மர்கலை உட்பொருளைப் பரிந்துகற்றான் வாழியே 🙏🙇♂️✨
சுத்தமகிழ் மாறனடி தொழுதுய்ந்தோன் வாழியே 🙏🙇♂️✨
தொல் பெரிய நம்பி சரண் தோன்றினான் வாழியே 🙏🙇♂️✨
சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே 🙏🙇♂️✨
சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே 🙏🙇♂️✨
எண்டிசையெண் இளையாழ்வார் எதிராசன் வாழியே 🙏🙇♂️✨
எழுபத்து நால்வருக்கும் எண்ணான்குரைத்தான் வாழியே 🙏🙇♂️✨
பண்டை மறையைத் தெரிந்த பாடியத்தோன் வாழியே 🙏🙇♂️✨
பரகாலன் அடியிணையைப் பரவுமவன் வாழியே 🙏🙇♂️✨
தண்டமிழ் நூல் நம்மாழ்வார் சரணானான் வாழியே 🙏🙇♂️✨
தாரணியும் விண்ணுலகும் தானுடையோன் வாழியே 🙏🙇♂️✨
தெண்டிரை சூழ்பூதூர் எம்பெருமானார் வாழியே 🙏🙇♂️✨
சித்திரையில் செய்யதிருவாதிரையோன் வாழியே 🙏🙇♂️✨
சீராருமெதிராசர் திருவடிகள் வாழி 🙏🙇♂️✨
திருவரையிற்சாத்திய செந்துவராடை வாழி 🙏🙇♂️✨
ஏராரும் செய்யவடிவெப்பொழுதும் வாழி 🙏🙇♂️✨
இலங்கிய முன்னூல்வாழி இணைத் தோள்கள் வாழி 🙏🙇♂️✨
சோராத துய்யசெய்ய முகச்சோதி வாழி 🙏🙇♂️✨
தூமுறுவல் வாழி துணை மலர்க் கண்கள் வாழி 🙏🙇♂️✨
ஈராறு திருநாமம் அணிந்த எழில் வாழி 🙏🙇♂️✨
இனிதிருப்போடு எழில் ஞானமுத்திரை வாழியே 🙏🙇♂️✨
அறுசமயச் செடியதனை அடியறுத்தான் வாழியே 🙏🙇♂️✨
அடர்ந்து வரும் குதிருட்டிகளை அறத்துறந்தான் வாழியே 🙏🙇♂️✨
செறுகலியைச் சிறிதுமறத் தீர்த்துவிட்டான் வாழியே 🙏🙇♂️✨
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்திவைத்தான் வாழியே 🙏🙇♂️✨
மறை அதனில் பொருளனைத்தும் வாய் மொழிந்தோன் வாழியே 🙏🙇♂️✨
மாறனுரைசெய்த தமிழ்மறை வளர்த்தோன் வாழியே 🙏🙇♂️✨
அறமிகு நற்பெரும்பூதூர் அவதரித்தான் வாழியே 🙏🙇♂️✨
அழகாருமெதிராசர் அடியிணைகள் வாழியே 🙏🙇♂️✨
அடியார்கள் வாழ! அரங்க நகர் வாழ!
சடகோபன் தண்டமிழ் நூல் வாழ!
கடல் சூழ்ந்த மண்ணுலகம் வாழ!
மணவாள மாமுநியே இன்னுமொரு நூற்றாண்டிரும் 🙏🙇♂️✨ #ராமாநுஜர்

