ShareChat
click to see wallet page
search
ஆசிரியர்: "உலகம் தோன்றியது முதல் இப்போது வரை மிக நீண்ட ஆயுளுடன் வாழ்ந்த உயிரினம் எது"? மாணவர்: "டைனோசர் சார்" ஆசிரியர்: "இல்லை" மாணவர்: "யானை"? ஆசிரியர்: " நோ...நோ" மாணவர்: "ஆங்...ஆமை சார். அது தான் 150 வருஷம் வரை வாழும்னு ஸ்கூல் புக்ல போட்டுருக்கு". ஆசிரியர்: "அதெல்லாம் இல்லடா" மாணவர்: "சரி சார். நீங்களே பதில் சொல்லுங்க" ஆசிரியர்: "இந்த உலகில் உயிரினங்கள் தோன்றியது முதல் தற்போது வரை மிக நீண்ட ஆயுளுடன் வாழ்ந்த ஒரே உயிரினம் 'ராமர்'. இவர் பூமியில் பிறந்தது முதல் இறந்தது வரை 11,000 ஆண்டுகள் ஆயுளுடன் வாழ்ந்திருக்கிறார்" மாணவர்: "ராமரா? 11,000 வருஷம் ஆயுளா? இது பற்றி ஸ்கூல் புக்ல எதுவும் இல்லையே சார்?" ஆசிரியர்: "ஸ்கூல் புக்ல கிடையாது. கி.மு.400-ல் வாழ்ந்த வால்மீகின்னு ஒரு முனிவர் எழுதிய ராமாயணம் புத்தகத்தில் அவரே சொல்லியிருக்கார்" மாணவர்: "ராமர் எப்போது சார் வாழ்ந்தார்"? ஆசிரியர்: "சுமார் 12 லட்சம் ஆண்டுகளுக்கு முன் பூமியில் வாழ்ந்த ஒரு அரசன்" மாணவர்: "சார், பூமியில் நாகரீக மனிதன் ஒரே இடத்தில் தங்கி விவசாயம் கற்றுக்கொண்டதே 12,000 ஆண்டுகளுக்கு முன்னாடி தான்னு ஸ்கூல் புகல போட்டுருக்கு. அப்புறம் எப்படி சார் 12 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னாடி நாகரீக அரசனும், மக்களும் வாழ்ந்திருக்க முடியும்? இதுக்கு தொல்லியல் ஆதாரங்கள் எதுவும் இருக்கிறதா சார்?" ஆசிரியர்: "அப்படி எதுவும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால், ஸ்கூல் புத்தகங்களை விட ராமாயணப் புத்தகம் உயர்ந்ததாக கருதப்படுவதால், அவற்றில் ஆதாரமே இல்லாமல் எது கூறப்பட்டிருந்தாலும் அதை நாம் அப்படியே ஏற்க வேண்டும்" மாணவர்: "சரி சார். 12 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராமரைப் பற்றியும், அவரது வாழ்க்கை வரலாறுகளை பற்றியும் சமீபத்தில் வாழ்ந்த வால்மீகிக்கு எப்படி தெரியும்? ராமரைப் பற்றி தொல்லியல் கண்டுப்பிடிப்புகள், கல்வெட்டுகள் என எதுவும் இல்லாதபோது ராமரைப் பற்றி வால்மீகிக்கு சொன்னது யார் சார்"? ஆசிரியர்: "நான் தான் சொன்னே.. இப்படி எல்லாம் கேட்க கூடாது.." மாணவர்: "சரி சார்..மொத்தத்தில் ராமர் என்பவர் யார் சார்"? ஆசிரியர்: "பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் எப்படி ஒழுக்கத்துடனும், அறநெறிகளுடனும் வாழ வேண்டும் என்பதை எடுத்துக்காட்டவே மனிதனாகவே அவதாரம் எடுத்து வாழ்ந்தவர்" மாணவர்: "சார், மனிதனாகவே பிறந்தார்..மனிதனாகவே வாழ்ந்தார்னு சொல்றீங்க. ஆனா, ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம் சுமார் 80-100 வரை தானே. இவர் மட்டும் ஏன் அந்த விதிமுறையை மீறி 11,000 ஆண்டுகள் மனிதனாக பூமியில் வாழ்ந்தார்"? ஆசிரியர்: இப்படிலாம் எக்குதப்பாலாம் கேள்வி கேட்க கூடாது... மாணவன்: சார்...நாம் சங்க காலம் முதல் இப்போது வரையிலான இந்த 2025 ஆண்டுகளிலேயே எவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளோம்...ஏ கே 47 முதல் AI வரை கண்டுபிடித்து விட்டோம். ஆனால், 11,000 ஆண்டுகள் வாழ்ந்த ராமர் காலத்தில் எந்த வளர்ச்சியும் அடையவில்லையா...? அவர் கையில் ஏன் அம்புகள் மட்டுமே உள்ளன...? ஏன் குதிரை தேரில் பயணம் செய்தார்...? ஒரு காரை கூட கண்டுபிடிக்காமல் அப்படி என்ன ஆட்சி செய்தார்...? ஆசிரியர்: "இது சரிப்படாது...இன்னிக்கு வகுப்பு முடிந்தது...நாளை சந்திப்போம்" #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - தந்த THANTHTV பிரம்மாண்ட ராமர் சிலை தெற்கு கோவாவின் கனகோனாவில் அமைக்கப்பட்டுள்ள அடி உயர வெண்கலத்தால் 77 சிலையை பிரதமர் மோடி ஆன பிரம்மாண்ட ராமர் திறந்து வைத்தார் 28.11.2025 | IHAIIHIINEIV IHAIIHIIV தந்த THANTHTV பிரம்மாண்ட ராமர் சிலை தெற்கு கோவாவின் கனகோனாவில் அமைக்கப்பட்டுள்ள அடி உயர வெண்கலத்தால் 77 சிலையை பிரதமர் மோடி ஆன பிரம்மாண்ட ராமர் திறந்து வைத்தார் 28.11.2025 | IHAIIHIINEIV IHAIIHIIV - ShareChat