#🙏🏻சரணம் ஐயப்பா ♦️♦️
♦️♦️கார்த்திகை மாதம் முதல் நாள்.
🌹 சபரிமலை= சிறப்புத் தகவல்கள்.
🚩ஐயப்பன் படையில் சேனாதிபதியாக இரு ந்த கடுத்த சுவாமி (கருப்பசாமி) பதினெட்டு படிக்கு அருகில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள் ளார். அவருக்கு முந்திரி மற்றும் திராட்சை படைத்து வழிபட்டால் தோஷங்கள் விலகி நன்மை உண்டாகும்.
🚩சபரிமலை ஐயப்பனுக்கு மாலை நேரத்தில் அர்ச்சனை செய்வார்கள். அர்ச்சனை சீட்டு பின்பக்கத்தில் உங்கள் ராசி, நட்சத்திரத்தை ஆங்கிலத்தில் எழுதி கொடுத்தால் அர்ச்சனை செய்து தருவார்கள்.
🚩சபரிமலையில் பக்தர்கள் கொடுக்கும் பொருட்கள், சன்னிதானம் அருகே வாரம் இருமுறை ஏலம் விடப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் ஏலம் எடுக்கலாம்.
🚩நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று அகந்தைகளையும் விரட்டவே சபரிமலை பதினெட்டாம் படியில் மூன்று கண் களை உடைய தேங்காயை உடைக்கிறார்கள்.
🚩சபரிமலை ஐயப்பன் கோவில் ஒவ்வொரு மாதமும் 5 நாட்கள் திறந்து இருக்கும். அந்த நாட்களை தெரிந்து கொண்டு பக்தர்கள் சென்று வரலாம்.
🚩சபரிமலையில் தினமும் அதிகாலை 3 மணி க்கு கோவில் திறந்ததும் சுப்ரபாதம் பாடப்படும்.
🚩ஐயப்பனுக்கு தினமும் இரவு 8 மணிக்கு புஷ்பாஞ்சலி நடத்தப்படும். பக்தர்களே பூக்க ளை கூடையில் எடுத்து வந்து கொடுக்கலாம்.
🚩ஐயப்பனுக்கு விபூதி, சந்தனம், பால், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் இளநீர் ஆகியவற்றுடன் 108 ஒரு ரூபாய் நாணயம் என எட்டும் கொண்டு செய்யப்படும் அபிஷே கத்திற்கு அஷ்டாபிஷேகம் என்று பெயர்.
🚩ஐயப்பன் சிவனின் உடுக்கையை படுக்க வைத்த நிலையில் உள்ள பீடத்தில், சிவனைப் போல் தியான கோலத்திலும் (முக்தி தருவது), விஷ்ணுவை போல் விழித்த நிலையிலும் (காத்தல் தொழில்) அருள்பாலிப்பது மிகவும் விசேஷமாகும்.
🚩சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர சங்கராந்தி அன்று தோன்றும் ஜோதியை அப்பாச்சிமேடு, பம்பை, பெரியானை வட்டம் மற்றும் புல்மேடு ஆகிய இடங்களில் இருந்து ம் காணலாம். புல்மேடு பகுதியில்தான் இந்த ஜோதி நன்றாக தெரியும்.
🚩சபரிமலை ஐயப்பன் உற்சவர் ஆண்டுக்கு ஒரு தடவை பம்பை ஆற்றுக்கு கொண்டு வரப் பட்டு ஆராட்டு உற்சவம் நடைபெறும். பிறகு ஐயப்பனை அலங்கரித்து பம்பா விநாயகர் கோவில் முன்பு மக்கள் தரிசனத்திற்காக 3 மணி நேரம் வைப்பார்கள். சபரிமலை வர இயலாதவர்கள் இந்த சமயத்தில் ஐயப்ப உற்சவரை தரிசிக்கலாம்.
🚩சபரிமலை ஐயப்பன் கோவிலில் 'தத்துவமசி" எனும் தத்துவம் எழுதப்பட்டுள்ளது. தத்துவமசி என்றால், 'நீ எதை நாடி வந்தாயோ, அது நீயாக உள்ளாய்" என்று பொருள்.
🚩சபரிமலை செல்லும் வழியில் ஒரு பள்ளி வாசல் உள்ளது. பக்தர்கள் இங்கு சென்று தங்கள் விரதத்தையும், பிரம்மச்சரியத்தையும் முழுமையாக கடைபிடித்தோம் என்று உறுதி செய்துவிட்டுதான் சபரிமலைக்கு செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.
🚩பந்தளத்தில் இருந்து சபரிமலை வரை ஐயப்பனின் ஆபரண பெட்டியை சுமந்துவர 15 சங்கங்கள் உள்ளன.
🚩திருப்பதி லட்டு, பழனி பஞ்சாமிர்தம் என்ப தை போல சபரிமலை அரவணை பாயசம் புகழ் பெற்றது. அரிசி, நெய், சர்க்கரை மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை கலந்து அரவணை பாயசம் தயாரிக்கப்படுகிறது.
🚩வாழும் காலத்தில் நல்லவனாய் வாழ்ந்து விட்டால் மீண்டும் இந்த பிறவி பெருங்கடலை நீந்த வேண்டாம் என்ற அரிய தத்துவங்களை உணர்த்தும் தலம் சபரிமலை.
🙏🙏🌹சுவாமியே சரணம் ஐயப்பா....
🌹

