#anubathathuvam. தத்துவம்
வாழ்க்கை இப்படியே
இருந்து விட வேண்டும்
என்று சிலருக்கு
வாழ்க்கை இப்படியே
இருந்து விடுமோ
என்று பலருக்கு!
என்னையறியாமலே
என்னை "உற்சாகப்படுத்த "
முனைகிறேன்
உதடுகளை "ஈரப்படுத்தி "
உடையில் சுருக்கம் நீக்கி
"நெஞ்சு" நிமிர்த்தி
துள்ளல் நடையோடு
ஏன் "வினோதம்" ....
#ஓ_நீ_என்னை_கவனிக்கிறாய்
இன்று வேண்டுமானால் அவர்களுக்கு நீங்கள் எல்லாமுமாக இருக்கலாம்.
ஆனால்,
இன்றைய அத்தியாவசியம் தான் நாளைய அனாவசியம் என்பதே வாழ்வின் முரண் 🤷🏻♀️🤷🏻♀️
நேர்மை என்பது
பேச்சு மட்டுமல்ல செயல்.
கண்ணியம் என்பது
தோற்றம் மட்டுமல்ல நடத்தை.
கருணை என்பது
உதவி மட்டும் அல்ல அன்பு.
நாம் அனைவரிடமும்
நேர்மையாகவும் கண்ணியமாகவும் கருணையோடும்
இருக்க முயற்சி செய்வோம்!🩷🩵
குறள்:164
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.
தீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறாமையினால் தீச்செயல்களில் ஈடுபடமாட்டார்கள்
வாங்கபோறதென்னமோ ஒரு வெள்ளி மோதிரம் ..ஆனா கடைல இருக்க மொத்தத்தையும் போட்டுபாக்கமா வரமாட்டேன்..😁


