ShareChat
click to see wallet page
search
ஆசு என்றால் குற்றம்;  இரியர்  என்றால் அகற்றுபவர். ஆசு + இரியர் = ஆசிரியர் என்றால் குற்றங்களைக் களைபவர் என்று பொருள். நாம் படிக்கும் பாடங்களில் மட்டுமல்ல; நம் எண்ணங்களில், சொற்களில், செயல்களில் உண்டாகும் குற்றங்களைக் களைந்து நம் வாழ்வை நேர்வழிப் படுத்தும் உன்னதப் பணிபுரியும் உயர்ந்த உள்ளங்கள்தான் ஆசிரியப்பெருமக்கள்! கல்வி அறிவு சிறந்ததுதான்; ஆனால், அதைவிடவும் சிறந்தது கேள்வி அறிவு! ஏனென்றால், கல்வி என்பது உள்ளதை உள்ளபடி நம் அறிவைக் கொண்டு நாம் கற்பது; ஆனால் கேள்வி என்பது ஆசிரியர் தம் அறிவையும், அனுபவத்தையும் கலந்து நம் ஒவ்வொருவருக்கும் ஊட்டுவது! அதனால்தான் நமது பாட்டன் வள்ளுவப்பெருமகனார், ‘செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை’ என்றார்.  ஒரு தாய் தன் பிள்ளையைப் பத்து மாதங்கள்தான் கருவறையில் சுமக்கிறாள். ஆசிரியப்பெருமக்கள் அறிவுக்கருவறையில் பல ஆண்டுகள் சுமக்கிறார்கள். தாய் தன் குழந்தைக்கு இந்த உலகைக் காட்டுகிறார். ஆசிரியப்பெருமக்கள்தான் அந்தக் குழந்தையை இந்த உலகிற்கே காண்பிக்கிறார்கள். அறிவின் விழிகொண்டு அனைத்தையும் தரிசிக்க கற்றுக்கொடுத்த நல் ஆசிரியர்கள் தான் உலகம் இயங்குவதற்கான அச்சாணிகளாக அமைகிறார்கள். எங்கோ வான் பார்த்துக் கிடக்கும் வறண்ட பூமியில், எளிய கிராமத்தில் பிறந்த என்னையெல்லாம் உருவாக்கித் தந்த என்னுடைய ஆசிரியப் பெருமக்கள் அனைவரையும் நன்றியோடும், மதிப்போடும் என் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் நான் நினைத்து நெகிழ்கிறேன். நம் தேசத்தின் வருங்காலமான இளைய சமூகத்தை உருவாக்கித் தரும் அறிவுக் கருவறையாகத் திகழும் ஆசிரியப் பெருமக்களை ஆசிரியர் நாளில் வணங்கி மகிழ்கிறேன். அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்! - செந்தமிழன் #சீமான்  தலைமை ஒருங்கிணைப்பாளர்  #நாம்தமிழர்கட்சி  #teachersday2024 #👨‍🏫ஆசிரியர் தின வாழ்த்துக்கள்💐
👨‍🏫ஆசிரியர் தின வாழ்த்துக்கள்💐 - அறிவுக் கருவறையாகத் திகழும் அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் ! ஆசு என்றால் குற்றம் ; இரியர் என்றால் அகற்றுபவர் . ஆசு + இரியர் = ஆசிரியர் என்றால் குற்றங்களைக் களைபவர் என்று பொருள் . நாம் படிக்கும் பாடங்களில் மட்டுமல்ல ; நம் எண்ணங்களில் , சொற்களில் , செயல்களில் உண்டாகும் குற்றங்களைக் களைந்து நம் உ வாழ்வை நேர்வழிப் படுத்தும் உன்னதப் பணிபுரியும் உயர்ந்த உள்ளங்கள்தான் ஆசிரியப்பெருமக்கள் ! கல்வி அறிவு சிறந்ததுதான் ; ஆனால் , அதைவிடவும் சிறந்தது கேள்வி அறிவு ! ஏனென்றால் , கல்வி என்பது உள்ளதை உள்ளபடி நம் அறிவைக் கொண்டு நாம் கற்பது ; ஆனால் கேள்வி என்பது ஆசிரியர் தம் அறிவையும் , அனுபவத்தையும் கலந்து நம் ஒவ்வொருவருக்கும் ஊட்டுவது ! அதனால்தான் நமது பாட்டன் வள்ளுவப்பெருமகனார் , ‘ செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை ' என்றார் . ஒரு தாய் தன் பிள்ளையைப் பத்து மாதங்கள்தான் கருவறையில் சுமக்கிறாள் . ஆசிரியப்பெருமக்கள் அறிவுக்கருவறையில் பல ஆண்டுகள் சுமக்கிறார்கள் . தாய் தன் குழந்தைக்கு இந்த உலகைக் காட்டுகிறார் . ஆசிரியப்பெருமக்கள்தான் அந்தக் குழந்தையை இந்த உலகிற்கே காண்பிக்கிறார்கள் . அறிவின் விழிகொண்டு அனைத்தையும் தரிசிக்க கற்றுக்கொடுத்த நல் ஆசிரியர்கள் தான் உலகம் இயங்குவதற்கான அச்சாணிகளாக அமைகிறார்கள் . எங்கோ வான் பார்த்துக் கிடக்கும் வறண்ட பூமியில் , எளிய கிராமத்தில் பிறந்த என்னையெல்லாம் உருவாக்கித் தந்த என்னுடைய ஆசிரியப் பெருமக்கள் அனைவரையும் நன்றியோடும் , மதிப்போடும் என் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் நான் நினைத்து நெகிழ்கிறேன் . நம் தேசத்தின் வருங்காலமான இளைய சமூகத்தை உருவாக்கித் தரும் அறிவுக் கருவறையாகத் திகழும் ஆசிரியப் பெருமக்களை ஆசிரியர் நாளில் வணங்கி மகிழ்கிறேன் . அனைத்து ஆசிரியப்பெருமக்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள் ! செந்தமிழன்'சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி ( Seeman4TN Seeman4TN_Official SenthamizhanSeeman - ShareChat