ஆங்கிலேயர் வெடிமருந்து கிடங்கைத் தகர்த்து அழிக்க,
அத்தை மகள் வடிவுடன் இன்னுயிரைத் தீயிக்கு இரையாக்கி,
இணையராகத் தற்கொடை தந்த உலகின் முதல் ஈகியர்!
தான் உயிரோடு இருந்த நாள் வரை
பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தின் கோட்டை வீழாமல் கண்ணின் இமைபோல காத்து நின்ற
தன்னிகரில்லா படைத்தளபதி!
தாயகம் காக்க விடுதலை நெருப்பாய்
வெடித்துச் சிதறிய மாவீரன்
சுந்தரலிங்கனாரின்
இணையில்லா வீரத்தையும்,
ஈடில்லா ஈகத்தையும்
போற்றுகின்ற இந்நாளில்
அவரைப்போலவே தன்மானத்தோடு நின்று
தாய்மண்ணைக் காப்போம் என்ற
உறுதியினை ஏற்போம்!
வீரமிகு நமது பாட்டனார் சுந்தரலிங்க குடும்பனார் அவர்களுக்குப் பெருமிதத்தோடு நம் வீரவணக்கத்தைச் செலுத்துவோம்!
#நாம்தமிழர்!
- செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி #📺செப்டம்பர் 08 முக்கிய தகவல்📢


