ShareChat
click to see wallet page
search
ஆட்சியரை சந்திக்க அவர்களை காவல் ஆணையர் அனுமதிக்கவில்லை. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் செல்லும் அனைத்து வழிகளையும் அடைத்தனர். ஆட்சியர் அலுவலக மதில் சுவருக்கும் தாமிரபரணி ஆற்றங்கரைக்கும் நடுவே பொதுமக்கள் செல்ல முயன்றனர். அப்பொழுது போலீஸ் வானத்தை நோக்கி சுட்ட துப்பாக்கிச் 11/nசத்தம் கேட்கவே, மக்கள் என்ன செய்வது என்று குழம்பிய நேரத்தில், காவல்துறை மக்கள் மீது தடியடி நடத்தி துரத்த ஆரம்பித்தது. உயிர் தப்பிப்பதற்கு வேறு வழி இல்லாமல் தாமிரபரணி ஆற்றில் மக்கள் இறங்கி மறுபுறம் செல்ல முயன்றனர். இதைக் கவனித்த காவல்துறையும் ஆற்றின் மறுபக்கம் சென்று மக்களைச் 12/n சுற்றி வளைத்து கரை ஏற விடாமல் அடித்தனர். அடிப்படை உரிமைக்காக போராடிய மக்களிடம் காவல்துறை கண்மூடித்தனமாக தடியடியில் ஈடுபட்டது. உயிருக்கு பயந்து ஓடிய மக்ககளை கண்ணீர் புகை குண்டுகள் கொண்டும் காவல்துறை தாக்குதலில் ஈடுபட்டது. அடித்து ரத்தக் காயங்களுடன் உடல்களை ஆற்றில் வீசியது. 13/n ##கேவலமான_ஆட்சி_திமுகவுக்கு_மாஞ்சோலை_சாட்சி ##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி
#கேவலமான_ஆட்சி_திமுகவுக்கு_மாஞ்சோலை_சாட்சி - ShareChat