#sirappaana Eduthurayppu. சோறு போட_
_*ஒருவர் இருக்கும் வரை..*_
_சாப்பிட்டாயா எனக் கேட்க_
_*ஒருவர் இருக்கும் வரை..*_
_தாமதமாகும் இரவுகளில்_
_எங்கிருக்கிறாய் என விசாரிக்க_
_*ஒருவர் இருக்கும் வரை..*_
_நோய் வந்தால் இரவுகளில்_
_கண் விழித்துப்_ _பார்த்துக் கொள்ள_
_*ஒருவர் இருக்கும் வரை..*_
_குரல்_ _மாறுபாட்டில் மன_
_நிலையைக்_ _கணிக்க_
_*ஒருவர் இருக்கும் வரை..*_
_போய்ச்_ _சேர்ந்ததும்_ _அழைப்பெடு என_
_வழியனுப்ப_
_*ஒருவர் இருக்கும் வரை..*_
_வீட்டைக்_ _காத்திருந்து கதவு திறக்க_
_*ஒருவர் இருக்கும் வரை..*_
_தோற்றுப் போய்_ _திரும்புகையில்_
_தோள் சாய்த்துக் கொள்ள_
_*ஒருவர் இருக்கும் வரை..*_
_போ என்றாலும்_ _விட்டுப் போகாது_
_சண்டை போட்டுக் கொண்டேனும்_
_உடனிருக்க_
_*ஒருவர் இருக்கும் வரை..*_
_மனம் கனக்கும்_ _நினைவுகளைப்_ _பகிர்ந்து_
_கொள்ள _*ஒருவர் இருக்கும் வரை..*_
_நம் கனவுகளை_ _தம் கனவுகளாகத்_
_தோள்களில்_ _தூக்கி சுமக்க_
_*ஒருவர் இருக்கும் வரை..*_
_எதற்காகவும்_ _எவரிடமும்_
_நம்மை விட்டுக் கொடுக்காத_
_*ஒருவர் இருக்கும் வரை..*_
_கூட்டத்தின்_ _நடுவே தனித்துப்_
_போகையில்_ _கரங்கள் பற்றி_
_நானிருக்கிறேனென உணர்த்த_
_*ஒருவர் இருக்கும் வரை..*_
_தவறுகளைத் தவறென_
_சுட்டிக் காட்டித் திருத்தும்_
_*ஒருவர் இருக்கும் வரை..*_
_துயர் அழுத்தும்_ _கணங்களில்_
_அருகிருந்து கண்ணீர்த் துடைக்க_
_*ஒருவர் இருக்கும் வரை..*_
_மனக்_ _குறைகளைப் புலம்பித்_
_தள்ளுகையில் காது கொடுத்துக் கேட்க_
_*ஒருவர்*_ _*இருக்கும் வரை*_
_*மட்டுமே..*_
_*வாழ்வு வசந்தமானது!*_


