பெண்களின் ஆடைகளை உருவி அவமானப்படுத்தியது. மேலும் அடிபட்டு அருகில் இருந்த வீடுகளில் தஞ்சம் புகுந்தவர்களையும் வீடு புகுந்து தாக்கியது. கிராமத்து மக்கள் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி இறந்ததாக இரத்தக் காயத்தோடு கரையொதுங்கிய உடலுக்கு பொய்க் கதையை போலீசார் ஜோடித்தனர்.
15/nபிரேதப் பரிசோதனையிலும் மக்கள் நீரில் மூழ்கி இறந்ததாக மருத்துவர்கள் சான்று வழங்கினர். இறந்தவர்களின் உடலை வாங்க மறுத்த மக்கள் மறுபரிசோதனை செய்யக் கூறினர். இதற்கு மறுப்பு தெரிவித்த அரசு, 5 நாட்கள் கழித்து வெவ்வேறு இடத்தில் அரசே பிணங்களை புதைத்தது. யாரை எங்கு புதைத்தோம் என்று
16/nஅரசின் அறிக்கை:
அப்பொழுது ஆட்சியில் இருந்த கருணாநிதி திமுக அரசு, ஓய்வுபெற்ற நீதிபதி மோகன் அவர்கள் தலைமையில் தனி நபர் கமிஷனை அமைந்தது. இதை விசாரித்த நீதிபதி மோகன் அவர்கள், 11 பேர் தண்ணீரில் மூழ்கியும் மற்றவர்கள் காயத்தால் இறந்ததாகவும் அரசுக்கு சாதகமாகவே குறிப்பிட்டிருந்தார்.
17/nமேலும், இந்தப் பேரணியில் வந்தவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதே இந்த சம்பவத்திற்கு காரணம் எனவும் அறிக்கை சமர்ப்பித்தார். கருணாநிதியும் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் மட்டுமே காவலர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் இந்த திட்டமிட்ட படுகொலையை நியாயப்படுத்தினார்.
18/n ##கேவலமான_ஆட்சி_திமுகவுக்கு_மாஞ்சோலை_சாட்சி #manjolai1999


