ShareChat
click to see wallet page
search
ஆடி மாதம் விதைத்தவற்றை தை மாதம் அறுவடை செய்வதே நம் உழவர்களின் வழக்கமாகும். ஆண்டுதோறும் விவசாயத்துக்கு மிகவும் உறுதுணையாக இருக்கின்ற நம் இயற்கை கடவுளான சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படுவதே தைத்திருநாள் என்கிற பொங்கல் பண்டிகை ஆகும். இத்திருநாளில் வீடுகள் மற்றும் விளைநிலங்களில் வண்ண கோலமிட்டு சூரியனுக்கு மஞ்சக்கொத்து மற்றும் கரும்பு படைத்து மண்பானையில் பச்சரிசியால் செய்த பொங்கலை பொங்கவிட்டு "பொங்கலோ பொங்கல்" என்று கூக்குரலிட்டு அத்தகைய தித்திக்கும் பொங்கலை அனைவரும் உண்டு மகிழ்ந்து கொண்டாடுவோம். உங்கள் வீட்டுப் பொங்கல் கொண்டாட்டங்களை "🤗தைப்பொங்கல் வாழ்த்துக்கள்" என்ற டேக்-ல் போஸ்ட் செய்து நமது பாரம்பரிய பண்டிகையான தைப்பொங்கல் திருநாளை உலகறிய செய்யுங்கள் நண்பர்களே. #🤗தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
🤗தைப்பொங்கல் வாழ்த்துக்கள் - ShareChat
00:10