*இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.*
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
*06.06.2026 (சனி)*
*⚜️மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்⚜️*
*🌿🌹1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,*
இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் பல்லவி திருப்பாடல் (71:15)-ல், *"என் வாய் நாள்தோறும் உமது மீட்பை எடுத்துரைக்கும்."* என கூறப்பட்டுள்ளது.
ஆண்டவரின் வார்த்தையை, நற்செய்தியை நம்மால் இயன்ற வழிகளில் எல்லாம் அறிவிக்க இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*🌿🌹2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,*
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
*"இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்."* என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
உள்ளதில் இருந்து கொடுப்பது காணிக்கையல்ல மாறாக உள்ளத்திலிருந்து கொடுப்பதே காணிக்கை என்பதை நாம் அனைவரும் உணர இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*🌿🌹3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,*
புதிய கல்வியாண்டு துவங்கும் நிலையில் மாணவ மாணவியருக்கு நல்ல ஆரோக்கியத்தையும், ஞானத்தையும், படிப்பில் ஆர்வத்தையும் இறைவன் தந்தருள வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*🌿🌹4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,*
இந்த ஆண்டு இறைவன் நல்ல பருவ மழையைத் தந்தருள வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*🌿🌹5. காணமற் போன குழந்தை இயேசுவைக் கண்டு பிடித்ததைத் தியானித்து,*
தனது திருப்பலி பிரசங்கத்தின் நடுவில் எண்ணற்ற புதுமைகளைப் புரிந்த ஆயரான இன்றைய புனிதர் நோர்பர்ட், கர்ப்பிணி பெண்களுடைய பாதுகாப்பான பிரசவத்தின் பாதுகாவலராவார்.
பிரசவத்தை எதிர் நோக்கியிருக்கும் எண்ணற்ற பெண்களின் சுக பிரசவத்திற்காக இப்புனிதர் வழியாக வேண்டுவோம்.
கர்ப்பிணி பெண்களின் சுகப்பிரசவத்திற்காக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*🙏🏻ஆமென்.🙏🏻* #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன்


