*இடபாந்திக மூர்த்தி*
(*ரிஷபாரூடர்*)*தரிசன* *ரகசியம்*!
உலகில் உள்ள எல்லா பொருட்களுக்கும் அழிவு உண்டு.
ஆனால் தர்மத்திற்கு மட்டும் அழிவு என்பது இல்லை.
இதனை உணர்த்தவே சிவபெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி உள்ளார்.
சிவனின் ரிஷப வாகன தத்துவம்
ஒருமுறை தர்மதேவதை..
இந்த உலகில் தான் அழியாமல் இருக்க வேண்டும் என்று எண்ணினாள்.
இதற்காக பரம்பொருளாகிய சிவபெருமானை வேண்டி
கடும் தவம் இருந்தாள்.
சிவபெருமானும் தர்மதேவதையின் தவத்தால் மனம் மகிழ்ந்தார்.
பின்னர் அவள் முன்
தோன்றிய சிவபெருமான், தர்மதேவதையிடம்
தவம் இருந்ததற்கான
காரணத்தைக் கேட்டார்.
அப்போது தர்மதேவதை சிவபெருமானை நோக்கி இரு கரம் கூப்பி வணங்கினாள்.
பின்னர், ‘எம்பெருமானே! எல்லா உயிரின் தேவ வடிவமானவரே! நான் தங்களின் வாகனமாக தங்களுக்கு பயன்பட வேண்டும்’ என்றாள்.
இறைவனும் அந்த வரத்தை அவருக்கு அருளினார்.
தர்மதேவதை ரிஷப உருவம் கொண்டவள்.
இதனால் சிவ பெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார்.
இது சாதாரண கருத்தை உணர்த்தவில்லை.
இதனுள் மாபெரும் உண்மை உள்ளடங்கியுள்ளது.
சிவன் வீற்றிருக்கும் வாகனம் சிவனுடைய பொருள் ஆகும்.
எனவே தர்மதேவதையின் ரிஷப வாகனமும் சிவபொருளாகி விடுகிறது.
அதனால் அதற்கு அழிவு என்பது கிடையாது.
உலகில் உள்ள எல்லா பொருட்களுக்கும் அழிவு உண்டு.
ஆனால் தர்மத்திற்கு மட்டும் அழிவு என்பது இல்லை. இதனை உணர்த்தவே சிவபெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி உள்ளார்.
இடபாந்திக மூர்த்திக்கு வள்ளலார் தந்த விளக்கம்!
"கற்ப பேதமென்பது கடவுள் இடபவாகனா ரூபராய் உலகத்திலெழுந்தருளிக் காட்சி கொடுத்தருளுங் காலம்."
வள்ளலார் வாக்கு
'கற்பபேதம்' என்பதின் விளக்கம் உலக அழிவாகும்.
ஆனால் 'கற்பபேதம்' என்பதன் பொருள் நம்மிடையே உள்ள
மல அழிவை குறிக்கும்.
'கடவுள்' என்பதின் விளக்கம் சிவபெருமான்.
ஆனால் 'கடவுள்' என்பதன் பொருள் நமக்குள்ளே எழுகின்ற அனுபவ ஞானத்தை குறிக்கும்.
'இடப வாகனம்' என்பதின் விளக்கம் தர்மதேவதை.
ஆனால் 'இடபம்' என்பதின் பொருள் சத்தியத்திற்கு கட்டுப்பட்டு நடப்பதைக் குறிக்கும்.
'உலகம்' என்பதின் விளக்கம் புற உலகம்.
ஆனால் 'உலகம்' என்பதின் பொருள் நமது உடலினைக் குறிக்கும்.
அருள் வடிவமாகவும் நமது ஆன்மா குடி கொண்டிருக்கும் உலகமாகவும் இருப்பது நமது உடல் ஆகும்.
'எழுந்தருளி காட்சி கொடுத்தல்' என்பதின் விளக்கம் கடவுள் புறவுலகில் காட்சி கொடுத்தல் என்பதாகும்.
ஆனால் 'எழுந்தருளி காட்சி கொடுத்தல்' என்பதின் பொருள் ஞானம் தோன்றுதல் என்பதைக் குறிக்கும்.
இடப வாகனத்தில் கடவுள் காட்சி கொடுப்பது என்பதன் பொருள்
ஆன்மா வசிக்கக்கூடிய
தயவே வடிவான நமது
உடலில் அனுபவ ஞானம் தோன்றுதல்.
அனுபவ ஞானம் என்பது
ஆன்ம அறிவினைக்குறிக்கும்.
எனவே நாம் புராணக்கதைகளின் விளக்கமாக அமைந்திருக்கும் புற உலக ஜோடனைகளை முற்றிலும் தவிர்த்து அதன் பொருளை உணர்ந்து நமக்குள்ளே அதன் தத்துவத்தை உணர்வதே
சுத்த சன்மார்க்கம் நெறியாக வள்ளலார் கூறுகிறார்.
தர்ம தேவதை விளக்கம்!
உலகில் உயிர்கள் தோன்றி மறைவதாலேயே உலக இயக்கம் நடைபெறுகிறது.
அச்சை ஆதாரமாக கொண்டு சக்கரம் சுழல்வதை போல உயிர்கள் தோன்றி மறைய ஆதாரமாக உள்ள நீதி நெறிகளின் மொத்த உருவமே தர்ம தேவதை ஆகும்.
சிருஷ்டி சுழற்சி நிகழ வேண்டுமெனில் அதற்கு
தர்ம தேவதை வகுத்த நியதிகளின் படி வாழும் உயிர்களின் வாழ்க்கை முறையை பொறுத்தே ஒரு ஆத்மாவின் விதி தீர்மானிக்கப் படுகிறது.
அந்த தர்ம தேவதை இல்லை எனில் யுகம்,சதுர்யுகம்,
மன்வந்திரம்,கல்பம், பரார்த்தம் என கால மாற்றங்களுக்கு தகுந்தவாறு உயிர்கள் தோற்றம் சிருஷ்டி செய்ய இயலாது.
உலக சிருஷ்டியை வழி நடத்த தர்ம தேவதைக்கு அருளி அதனை தன் ரிஷப வாகனமாக்கி அருள் புரிந்து காட்சியளித்த கோலமே இடபாந்திக மூர்த்தமாகும்.
இடபாந்திக மூர்த்தியாக காட்சியளித்தல்!!
சதுர்யுகங்கள் இரண்டாயிரம் நான்முகனுக்கு ஒரு நாளாகும்.
அது நூறு கொண்டது நான்முகனது ஆயுட்காலமாகும்,
நான்முகனின் நூறு வயது கழிந்தால் உலகிலுள்ள அனைத்து உயிர்களும் உலகமும் அழியும் என்பது கணக்கு.
அழியும் ஊழிகாலத்தில் உமையுடன் சேர்ந்து
திருநடனம் புரிவார் சிவபெருமான்.
மீண்டும் சிருஷ்டி துவங்கும் போது உயிர்கள் சிருஷ்டி செய்ய தாம் இன்றி இயலாது.தானும் அழிந்து விட்டால் என்ன செய்வது என தர்மதேவதை வேதனை கொண்டது.
தானும் அழிய வேண்டி வந்தால் புதிய உலகில் உயிர்கள் சிருஷ்டியை ,அதன் வாழ்க்கை விதியை யார் தீர்மானிப்பது என்ற குழப்பத்தில் என்ன செய்வது என்று வேதனை கொண்டது.
சிவபெருமானை சரணடைவதுத் தவிர தனக்கு வேறு வழியில்லை என்று சிவனை சரணடைந்தது.
இடபமாக மாறி தர்மதேவதை சிவனின் முன்பு நின்றது.
ஐயனே நான் இறவாமலிருக்க வேண்டும்.
உலகில் உயிர்களை வழிநடத்தும் ஆதார சக்தியாகிய உங்களை
தாங்கி நின்று காலத்தால் அழியாதிருக்க வரம் வேண்டும் என்று கேட்டது.
கேட்ட வரம் கொடுக்கும் அருட்கடலான சிவபெருமானும் இடபத்தில் தலை மேல் தனது கை வைத்து தர்மதேவதையே உன் விருப்பம் நிறைவேற்றப்படும்
என்று தர்மதேவதையின் வேண்டுதலை அங்கீகரித்து தர்மதேவதையை வாகனமாக ஏற்றுக்கொண்டு சிவபெருமான் இடபாந்திக மூர்த்தியாக காட்சியளித்தார்.
அப்போது " தர்ம தேவதையே நீ தருமத்தினை உலகிற்கு உணர்த்த கிருதயுகத்தில் நான்கு கால்களுடனும், திரேதாயுகத்தில் இரண்டு கால்களுடனும் கடைசியாக கலியுகத்தில் ஒரு காலுடனும் தோன்றி தர்மத்தினை நிலைநாட்டுவாய்.
மேலும் எப்பொழுதும் என்னை நீ பிரியாமல் இருப்பாய் எனது வாகனமாகும் பேற்றையும் நீயேப் பெறுவாய் " என்று திருவாய் மலர்ந்தருளினார்.
தனது அடியார்களுக்கு காட்சியளிக்கும் சிவபெருமானின் இடபாந்திகமூர்த்த தரிசன ரகசியம் இதுவேயாகும்,
இடபாந்திக மூர்த்தி தரிசன ஸ்தலம்!
இடபாந்திக மூர்த்தியை தரிசிக்க நாம் செல்ல வேண்டிய தலம் திருவாடு துறை ஆகும்.
இத்தலம் மயிலாடுதுறையருகே அமைந்துள்ளது.
இங்குள்ள மாசிலா மணிஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள இடபாந்திக மூர்த்தியை வணங்குவோமானால் ஊழிக்காலத்தில் நம்முடைய ஆன்மா சிவபெருமானை தஞ்சமடையும் என்பது ஐதீகம்.
இவருக்கு திங்கள்,
வியாழக்கிழமைகளில் வெண்தாமரை அர்ச்சனையும், பசுவின் பால் நைவேத்தியமும் கொடுக்க குரு தோஷ நிவர்த்தியுண்டாகும்.
மேலும் சிவபெருமானுக்கு வில்வ நீரால் அபிசேகம் செய்தால் மறுபிறவியிலும் சிவனருள் கிடைக்கும்.
இடபாந்திக மூர்த்தி
(ரிஷபாரூடர்)படம் கீழே! 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏கோவில் #ஓம் நமசிவாய #தினம் ஒரு கோயில் #🙏ஆன்மீகம்



