தமிழ்சீயான்43
5K views • 14 days ago
🌿 இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.
09.07.2026 (வியாழன்)
ஒளி நிறை மறையுண்மைகள்.
முதலாவது. ஆண்டவர் இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் பல்லவியில் "கடவுளே, எம்மை மீட்குமாறு உம் முக ஒளியைக் காட்டியருளும்!" (திருப்பாடல் 80:3) என்று கூறப்பட்டுள்ளது.
தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்த இயேசுவின் ஒளிமிக்க முகம் நம் அனைவரையும் மீட்டிட வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
இரண்டாவது. ஆண்டவர் இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்
"நீங்கள் சென்று ‘விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது’ எனப் பறைசாற்றுங்கள்." என்று இயேசு கூறினார். நற்செய்தி பணியை பல்வேறு வழிகளில் நாம் செயல்படுத்திட தேவையான ஞானத்தையும், துணிவினையும் இறைவன் அளித்திட வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
மூன்றாவது. ஆண்டவர் இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,
இந்த ஆண்டு இறைவன் நமக்கு நல்ல பருவ மழையைத் தந்தருள வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
நான்காவது. ஆண்டவர் இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,
தங்கள் குடும்பத்தினரால் மறக்கப்பட்டு பல ஆண்டுகளாக, வேண்டுதல்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் அனைத்து உத்தரிய ஸ்தலத்தில் இருக்கும் ஆன்மாக்களும் இறைவனின் மோட்ச பாக்கியத்தை விரைவில் அடைய வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஐந்தாவது. ஆண்டவர் இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,
குழந்தை இயேசுவுக்கும், புனித யூதா ததேயுவிற்கும் ஒப்புக் கொடுக்கப்பட்ட வியாழக்கிழமையான இன்று நோயுற்ற குழந்தைகள் அனைவரையும் நம் குழந்தை இயேசு தொட்டுக் குணமாக்கிட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
பெர்னதெத்துக்கு 18 முறை தரிசனமளித்த தூய லூர்து அன்னை, திருக்காட்சிகளில் செபமாலையின் மகிழ்ச்சி, துயரம், மகிமை மறைபொருள்களில் 15 மறையுண்மைகளை நாளுக்கு ஒன்றாக தியானித்து செபிக்க வலியுறுத்தினார்.
(மற்றும்)
பாத்திமா அன்னை காட்சியில் மக்கள் மனமாற்றத்திற்காக செபமாலை செபிக்கச் சொன்னதை நாம் அனுதினமும் பின்பற்ற மக்கள் குடும்பமாக இல்லங்களில் செபமாலை செபிக்கும் பழக்கத்தை இன்னும் அதிகரிக்க வேண்டுவோம்.
Zoom Online வழியாக, வருடம் முழுவதும் 24 மணி நேரமும் தொடர்ந்து ஜெபமாலை சொல்லும் வாய்ப்பு உள்ளது.
மேலும், லூர்து மாதா பெர்னதெத்துக்கு 18 முறை மாதா காட்சி அளித்த இடத்திலிருந்து நேரடி ஒளிபரப்பு காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நடைபெறும்.
விருப்பமுள்ள அனைவரும் இதில் கலந்து கொண்டு, அன்னையின் அருளும் ஆசீர்வாதமும் பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.
🙏 அன்னை மரியாவின் அருளும் ஆசிகளும் அனைவருக்கும் கிடைக்க இறைவனை வேண்டுகிறோம். 🙏
அன்னை மரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ✨🙏🌼🍃🌸🍂🌼✨️✞✨️🌼🍃🌸🍂🌼 #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #infant Jesus💕 ( குழந்தை இயேசு)💕
114 likes
5 comments • 104 shares