ShareChat
click to see wallet page
search
அங்காளி பார்த்து கொள்ளவாள் பார்த்துக்கொண்டே உள்ளார் "ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி!"...பொன்னேடுகள்- திருவாசகம் #மாணிக்கவாசகர் அருளிய #திருவாசகத்தில் உள்ள #சிவபுராணத்தின் புகழ்பெற்ற வரிகள் ஆகும். ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி தேச னடிபோற்றி சிவன்சேவடிபோற்றிநேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி சீரார் பெருந்துறைநந் தேவன் அடிபோற்றி ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி #பதவுரை ஈசன் என்றதனால் தன் வயத்தனாதலும், எந்தை என்றதனால் பேரருளுடையனாதலும், தேசன் என்றதனால் தூய உடம்பினனாதலும், சிவன்# என்றதனால் இயற்கை உணர்வினனாதலும், நிமலன் என்றதனால் இயல்பாகவே பாசங்களின் நீங்கினவனாதலும், பிறப்பறுக்கும் மன்னன் என்றதனால் முடிவிலா ஆற்றலுடையனாதலும், தேவன் என்றதனால் முற்றுணர்புடையனாதலும், ஆராத இன்பம் அருளுமலை என்றதனால் வரம்பில் இன்பமுடையனாதலுமாகிய இறைவனது எட்டுக் குணங்களையும் #மாணிக்கவாசகர் எம்பெருமானை நெஞ்சார வணங்குகின்றார். #ஓம் #நமசிவாய" என் கொள்கையிலும் என் பெருமையிலும் நான் உறுதியாக இருக்கிறேன் என்று உங்கள் உள்ளம் உணர்த்தி விட்டால் ஒருவராலும் உங்களை அசைத்து விட இயலாது 🥰 சொன்ன ஓவ்வொரு வார்த்தைகள் உன்னை திரும்ப காண வரும் போது தெரியும் >>>"கண்ணாடியாய் இரு அன்பே... நீ காட்டும் மற்றவர்களின் முகம் வெறும் உருவ பிரதிபலிப்பு இல்லை உணர்வின் பிரதிபலிப்பு".... >>> நன்மையோ! தீமையோ! காட்டிவிடு...... புரியட்டும் சிலருக்கு நிழலுக்காக ஏங்கும் ஓர் உயிருக்கு வெயிலை மட்டும் பரிசாக விட்டுச்செல்லாதீர்கள். ஆற்றங்கரையில் ஒரு மரமாவது இருக்கட்டும்; பறவைகள் திரும்பிவர ஒரு கிளையாவது கையசைக்கட்டும். நாளை நாம் இல்லாவிடிலும் நாம் காத்த ஒருமரம் நம்முடைய பெயருக்குப் பதிலாக நிழல் தரட்டும்! செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் எத்தனையோ பெரிய சகாப்தம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார் நீ மட்டும் எம்மாத்திரம் எப்படி வந்தது அப்படியே போகும் உனது தாத்தா செய்து பாவம் உனது அப்பா செய்த குற்றத்திற்கு நீங்கள் செய்த துரோகம் உனது மகன் செய்த அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை அன்னதானம் செய்தலும் தீராது எத்தனை உதவிகள் செய்தாலும் தீராது எத்தனையோ யாகம் செய்தாலும் ஆலயங்களுக்கு சென்றாலும் தீராது எத்தனை முறை கங்கையில் நீராடினால் தீராது ஏழு ஏழ் தலைமுறை இல்லாமல் போகும் சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான்.... சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்..... ஆடும் சிதம்பரமோ.. அய்யன் கூத்தாடும் சிதம்பரமோ.. ஆடும் சிதம்பரம் அன்பர் களிக்கவே.. நாடும் சிதம்பரம் நமச்சிவாயவென்று.. ஆடும் சிதம்பரமோ.. அய்யன் கூத்தாடும் சிதம்பரமோ.. யாரும் அறியாமல் அம்பலவாணன் சீரடியார் பார்க்கச் சேவடி தூக்கி நின்று ஆடும் சிதம்பரமோ.. அய்யன் கூத்தாடும் சிதம்பரமோ.. பாலகிருஷ்ணன் போற்றும் பனிமதிச் சடையினன் தாள மத்தளம் போட தாத்தத்தை யெனவே ஆடும் சிதம்பரமோ.. அய்யன் கூத்தாடும் சிதம்பரமோ.. சகிப்புத் தன்மை உங்களில் எத்தனை பேருக்கு இருக்கிறது என்பது ஒருபுறமிருக்கட்டும். எத்தனை பேருக்கு 'சகிப்புத்தன்மை' என்ற வார்த்தையின் முழு அர்த்தம் தெரியும். இந்த உலகில் சகிப்புத்தன்மை' என்ற ஒன்றை மட்டும் மனிதர் கற்றுக்கொள்ளவில்லை என்றால் நம்மில் ஒருவர் கூட வாழ முடியாது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா. சகிப்புத்தன்மையும் பொறுமையும் இரட்டைப் பிறவிகள். ஒன்று இல்லையென்றால் அந்த இடத்தில் மற்றொன்று இருக்காது. #பொறுமையும் #சகிப்புத்தன்மையும் இல்லாத மனிதர்கள் தாம் கடந்து செல்ல மேம்பாலம் இருந்தும் அதைத் தவிர்த்துவிட்டு, தண்டவாளத்தைக் குறுக்கே கடந்து விபத்துக்கு ஆளாகிறார்கள்.' காலை நேரக் கூட்ட நெரிசலில் பேருந்தில் பயணம் செய்யும்போது, சகிப்புத்தன்மை இல்லாத மனிதர்கள்தாம், தம் காலை மிதித்துவிட்ட, தம்மேல் சாய்கிற பிற மனிதர்களின்மேல் வெறுப்பை உமிழ்ந்து ஏகத்துக்கும் சண்டை போட்டுப் பிரச்சனைக்கு ஆளாகிறார்கள். சகிப்புத்தன்மையற்ற மனிதர்கள்தாம் பெரும்பாலும் அடுத்த வீட்டுக்காரர்களின் மீது சதா புறம் கூறி, வீண் வம்பையும் சண்டையையும் விலைக்கு வாங்குகிறார்கள். சகிப்புத்தன்மையற்ற_ மாமியாருக்கும் சகிப்புத்தன்மையற்ற மருமகளுக்கும் இடையில்தான் பிரச்சனை நேர்கிறது. பேருந்து, இரயில் முன்பதிவு மையங்களிலும், ரேஷன் கடைகளிலும், இன்னும் பிற இடங்களிலும் வரிசையில் நிற்கச் சகிப்புத்தன்மையற்ற மனிதர்கள்தாம் குறுக்கு வழியைக் கையாண்டு, தவறான பாதைக்குப் போகிறார்கள். சகிப்புத்தன்மையின் தேவை ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் தவிர்க்க முடியாத ஓர் அம்சமாகப் பின்னிப் பிணைந்து கிடக்கிறது. "கோபமாகப் பேசுகிறவரிடம் நிதானமாகப் பேசுங்கள். உங்கள் சமிப்புத்தன்மையே எதிராளியை மாற்றிவிடும்." 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #தெய்வீக சிந்தனைகள் #🙏🌹பாரதபூமி🌹🙏🌹சித்தர்கள் பூமி🌹🙏புண்ணியபூமி🌹🙏
🙏🏼ஓம் நமசிவாய - ShareChat