#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #வீரப்பன் கவுண்டர் 🔥 'ஒரு லட்சம் வீரப்பன்களை உருவாக்குவோம்' என்று பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் விடுத்த எச்சரிக்கை, தமிழ் மக்களின் உரிமைகளைச் சட்டப்பூர்வமாக அணுக மறுக்கும் கர்நாடக மற்றும் மத்திய அரசுகளுக்கான ஒரு தெளிவான செய்தியாகும். ஆரம்பத்தில் கிராமப்புற நலனுக்காகச் சந்தனக் கடத்தலில் ஈடுபட்ட வீரப்பன், பிற்காலத்தில் தமிழர்களின் உரிமைகளுக்காகவும், நீதிக்காகவும் போராடியவர் என்ற உண்மையைச் சிலர் வசதியாக மறைக்கிறார்கள். ஒரு மைனர் பெண்ணைத் துன்புறுத்தியதற்காக ஒரு காவல் நிலையத்தையே நிலைகுலையச் செய்தவர் அவர். இவரை ஒரு தீவிரவாதியைப் போலச் சித்தரிப்பது திராவிட அரசியலின் பாணியாக உள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) தேவையின்றி இழுத்துவிட ஒரு அமைச்சர் முயற்சி செய்கிறார். கடந்தகாலப் பாமகவின் வரலாறு தெரியாமல் சிலர் பேசுகிறார்கள். ஒரு காலத்தில் லாரிகளில் சென்று கர்நாடகத்திற்குள் நுழைந்து, தமிழக உரிமைக்காகப் போராடிய வரலாறு பாமகவிற்கு உண்டு. அன்புமணி அவர்கள் குறிப்பிட்டது போல, உரிமைக்காகப் போராட வேண்டிய சூழல் வந்தால், ஒரு லட்சம் மட்டுமல்ல, இரண்டு கோடி மக்களும் வீரப்பன்களாக எழுந்து நிற்போம்!
14 likes
13 shares

More like this