ShareChat
click to see wallet page
search
வரலாற்றில் இன்று - #ஜூன்_22, 1992 -வாச்சாத்தி வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்ட நாள் தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராம மக்கள் சந்தனமரக் கடத்தலில் ஈடுபடுவதாகவும், ஆற்றுப் படுகையில் சந்தனக் கட்டைகளைப் பதுக்கி வைத்திருப்பதாகவும் கூறிக்கொண்டு, 1992 ஜூன் பத்தாம் நாள் வாச்சாத்தி பழங்குடி கிராமத்திற்கு நூற்றுக்கணக்கில் வந்திறங்கினர், போலீஸ் , வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளும் ஊழியர்களும். காட்டுமிராண்டித்தனமாகப் பாய்ந்து, 13 வயது பள்ளிச் சிறுமி உட்பட 18 இளம்பெண்களை நிர்வாணப்படுத்திக் கும்பல் பாலியல் வன்முறை செய்தார்கள். ஆண்களில் பலர் உயிருக்கு அஞ்சி காடுகளுக்குள் ஓடி ஒளிந்துகொள்ள, கையில் சிக்கியவர்களையும் பெண்களையும் அடித்து நொறுக்கினார்கள். ஆடு, மாடு, கோழிகள் உட்பட அவர்களின் உடமைகளைக் கொள்ளையடித்ததோடு, உணவு தானியங்களைத் தீ வைத்துக் கொளுத்தியும், குடிநீர்க் கிணற்றில் மண்ணெண்ணெயைக் கொட்டியும் காவல் துறையினர் நாசப்படுத்தினர். வாச்சாத்தி வன்முறைகள் வழக்கில் சி.பி.ஐ உட்பட பல்வேறு விசாரணைகளுக்குப்பிறகு மொத்தம் உள்ள 269 குற்றவாளிகளில் உயிரோடு உள்ள 215 பேரும் குற்றவாளிகள் எனத் (2011 செப்டெம்பர் 29) தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் பலாத்காரம் செய்ததாக 17வனத்துறையினர் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. 17 பேரில் 12 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் 5 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவலும் விதிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு ஓர் ஆண்டு முதல் மூன்று ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது வாச்சாத்தி வன்கொடுமை நிகழ்வுகளை கள ஆய்வு செய்து ஆவணங்களை திரட்டியவர். பெண்களுக்கு எதிரான பல்வேறு பிரச்சினைகளுக்காக போராடியவர். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பக்கபலமாக இருந்து சட்ட போராட்டம் நடத்தியவர் தோழர் மைதிலி சிவராமன். #lifes #life
lifes - Ananre Pradeth Kratak Rcrela வாச்சாத்தி  Ananre Pradeth Kratak Rcrela வாச்சாத்தி - ShareChat