#உலக_மகளிர் தினம்
#மார்ச்_8
1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்றும் பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பாரிஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டனர். புயலாகக் கிளம்பிய பூவையரைத் துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன் இடியென முழங்கி, இவர்களை என் அதிகாரம் கொண்டு அடக்குவேன் என்றும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்வேன் எனவும் அறிவித்தான்.ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம். அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்ள உற்சாகம் கரைபுரள கோஷங்கள் வானைப் பிளக்க அரச மாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது. அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர். இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்தவர்களைச் சமாதானப் படுத்தினான். இயலாது போகவும், அரசன் லூயிஸ் பிலிப் முடி துறந்தான். இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது. இத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848 ஆம் ஆண்டு மார்ச் 8ம் நாளாகும். அந்த மார்ச் 8 ஆம் நாள் தான் அனைத்துலகப் பெண்கள் நாள் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது. #life #lifes
#மார்ச்_7,
தத்துவ மேதை அரிஸ்டாட்டில் அவர்களின் நினைவு தினம் இன்று(கி.மு.322)
அரிஸ்டாட்டில் கி.மு.384இல் பிறந்தார். இவர் பண்டைய உலகின் தத்துவஞானி, விஞ்ஞானி மற்றும் பல்துறை வல்லுநர் ஆவார். இவர் 170 புத்தகங்களுக்குமேல் எழுதிக் குவித்த ஒரு சிறந்த எழுத்தாளர். அரிஸ்டாட்டில் என்றால் சிறந்த நோக்கம் என்று பொருள். அவருடைய நூல்கள் அவர் காலத்தில் அறிவியல் செய்திகள் அடங்கிய கலைக்களஞ்சியமாகத் திகழ்ந்தன. வானவியல், விலங்கியல், கருவியல், புவியியல், இயற்பியல், உடலியல் ஆகியவை குறித்தும், பண்டைய கிரேக்கர்கள் அறிந்திருந்த அறிவுத்துறைகள் அனைத்தையும் பற்றி இவர் எழுதியிருந்தார்.அத்துடன் கவிதை, நாடகம், இசை, தர்க்கம், சொல்லாட்சி, மொழியியல், அரசியல்,ஒழுக்கவியல் ஆகியவையும் இவரின் எழுத்துகளில் இடம் பெற்றிருந்தன.
பூமி உருண்டை வடிவமானது என்பதை தனது ஆய்வின் மூலம் கூறியவர் அரிஸ்டாட்டில். விலங்கியல் அறிவியலைப் பொருத்தவரை துல்லியமாக இருப்பதை 19 ஆம் நூற்றாண்டில் சில அறிவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். அரிஸ்டாட்டிலின் தத்துவங்கள் நவீன முறைப்படி 19 ஆம் நூற்றாண்டில் இணைக்கப்பட்டன.மாவீரன் அலெக்சாண்டர் அவர்கள் அரிஸ்டாட்டிலின் மாணவராவார்.அரிஸ்டாட்டில் ஏதென்ஸ் நகரில் உலாப் பள்ளியை நிறுவினார்.
"நம்முடைய நற்பண்புகளுக்கும், நம்முடைய
அறிவாற்றலுக்கும் ஏற்றபடிதான் நாம்
அடையும் மகிழ்ச்சி இருக்கும்"__ அரிஸ்டாட்டில்) #life #lifes
#மார்ச்_6,
#மைக்கேல்ஏஞ்சலோ
இத்தாலிய நாட்டைச் சேர்ந்த ஓவியர், சிற்பி, கட்டிடக் கலைஞர், கவிஞர் என்று பன்முகத் தன்மைகொண்ட மைக்கேல் ஏஞ்சலோவின் பிறந்த நாள் (மார்ச்-6, 1475) இன்று.
16-ஆம் நூற்றாண்டில் மைக்கேல் ஏஞ்சலோ வரைந்த ஓவியங்கள் மேற்கத்திய கலை வரலாற்றில் ஒர் ஈடு இணையற்ற தாக்கத்தை ஏற்படுத்தியது. மைக்கலாஞ்சலோவின் நீண்ட கால வாழ்க்கையில், அவர் படைத்தவைகள் அனைத்தும் அவரது அதிசயிக்கத்தக்க திறமைக்குச் சான்றாக அமைகின்றன. மைக்கலாஞ்சலோவின் புகழ் பெற்ற படைப்புக்களான, பியேட்டா (Pietà), டேவிட் ஆகியவை 16ஆம் நூற்றாண்டின் இருபதுகளின் பிற்பகுதியிலும், முப்பதுகளின் ஆரம்பத்திலும் உருவாக்கப்பட்டவை. ஒவியம் தொடர்பாக இவருக்கு பெரிய பெயர் இல்லாதபோதும், மேற்கத்திய ஓவியக் கலைத் துறையில் பெரும் செல்வாக்குச் செலுத்திய இரண்டு ஓவியங்களையும் இவர் படைத்துள்ளார். இவை ரோம் நகரிலுள்ள சிசுடைன் சிற்றாலய உட்கூரையிலும் அதன் பீடத்தின் பின்னுள்ள சுவரில் வரையப்பட்டுள்ள "கடைசித் தீர்ப்பு" ஓவியங்களாகும். இவருடைய வாழ்வின் பிற்பகுதியில் வாடிகன் நகரின் புனித பேதுரு பேராலயத்தின் குவிமாடத்தை (dome) வடிவமைத்தார். #life #lifes
#ஜோசப்_ஸ்டாலின்
#மார்ச்_5
#நினைவு_தினம்
ஜோசப் ஸ்டாலின் என்று அனைவராலும் அறியப்படுகிற இவரின் ரஷ்ய மொழி உச்சரிப்பின் முழுப்பெயர் ஜோசிப் விசாரியோனவிச் ஸ்தாலின் (Iosif Vissarionovich Stalin, 18 டிசம்பர், 1878[- மார்ச் 5, 1953) லெனின் மறைவுக்குப் பின், சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக்குழு பொதுச் செயலாளராக 1922 முதல் அவர் மறைந்த 1953 வரை, தலைவராக விளங்கினார். இவருடைய திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கை, புதிய பொருளாதார கொள்கையுன் கூடிய ஐந்தாண்டுத் திட்டங்களால் ரஷ்யா மிகப்பெரிய தொழில்புரட்சியை கண்டது; அதன் பொருளாதாரம் மேம்பட்டது. ஸ்டாலின் காலத்தில் செய்யப்பட்ட பொருளாதாரச் சீரமைப்புகள் குறுகிய கால நோக்கிலும் தொலை நோக்கிலும் பல உணவுப் பட்டினி போன்று பல பாதகமான விளைவுகளையும் தோற்றுவித்தது என்று சொல்லப்படுகிறது. இவரது ஆட்சியில் சோவியத் ஒன்றியம் இரண்டாம் உலகப் போரில் வெற்றிபெற்று, வல்லரசு ஆனது. 1930 களில் இவர் ஏற்படுத்திய அரசியல் தூய்மைப்படுத்தல் கொள்கையை (Great Purge) பொதுவுடமைக் கட்சியின் அறிக்கையாக, கொள்கையாகக் கடைப்பிடித்ததால், ஒழுக்கமின்மை, நம்பிக்கைத் துரோகம், நயவஞ்சகம், ஊழல் என்று குற்றம்சாட்டி பல்லாயிரக் கணக்கானோரை படுகொலை செய்ததாகச் சொல்லப்படுகிறது.
ஜோசப் ஸ்டாலின் சோவியத் ஒன்றியத்தின் அதிபராகப் பல்லாண்டுகள் ஆட்சி செய்தவர் ஆவார். இயோசிப் விஸ்ஸாரி யோனோவின் டிலுகாஷ் விலி என்பது இவருடைய இயற்பெயராகும்.இவர் டிசம்பர் 6, 1878 இல் ஜார்ஜியாவில் கோரி என்னும் நகரில் கேகே மற்றும் பெசோ தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். இவருக்கு முன் பிறந்த இரண்டு குழந்தைகளும் இறந்துவிடவே, ஒற்றை மகனாக இவர் வளர்க்கப்பட்டு வந்தார். சிறுவயது முதலே இவரின் எதிர்காலம் குறித்து இவருடைய பெற்றோரிடம் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்திருக்கின்றன. இவருடைய தாயார் கேகே இவரை நன்றாகப் படிக்க வைக்க விரும்பியிருக்கிறார். ஆனால், இவருடைய தந்தை பெசோ கொடிய வறுமை காரணமாக, இவரை சுயமாக உழைக்கச் செய்து குடும்பத்தை வாழவைக்கப் பணித்திருக்கிறார்.
ஜார்ஜியன் மொழி இவருடைய தாய்மொழியாகும். இது ரஷிய மொழியிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. எனினும், ரஷிய மொழியை இவர் பின்நாட்களில் கற்றுக் கொண்ட போதிலும், அதனை இவர் ஜார்ஜிய மொழிச்சாயலுடனேயே எப்போதும் பேசி வந்தார். தாயின் அரவணைப்பில் கோரி நகரிலுள்ள ஒரு மடாலயப் பள்ளியில் பல்வேறு உதவித் தொகைகளைப் பெற்றுக்கொண்டு இவர் கல்வி பயின்றார். அங்குப் படிக்கும் காலத்திலேயே, தன்முனைப்பும், மிகுதியான துணிச்சலும் இருந்த காரணத்தினால் பல்வேறு சமூகக் குழுக்களின் தலைமைப் பண்பை ஏற்று #lifes #life
இன்று தொலைபேசியைக் கண்டு பிடித்த அலெக்சாண்டர் கிரஹாம் பெல் பிறந்த தினம். மார்ச் 3, 1847. இவர் ஓர் அறிவியலாளர், பொறியாளர், கண்டுபிடிப்பாளர்,ஆசிரியர் மற்றும் அறிவியல் அறிஞர் ஆவார். இவரது தாயாரும் மனைவியும் காது கேளாதோர் ஆயினும் இவரது ஆய்விற்கு ர் உந்துசக்தியாக விளங்கினார்கள். இவரது ஆய்வுகள் காரணமாக 1876 ஆம் ஆண்டு தொலைபேசி உருவாக்கப்பட்டது. இவர் பெல் தொலைபேசி நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார். கிராமபோனைக் கண்டுபிடித்தவரும் இவரே ! #life #lifes
வரலாற்றில் இன்று மார்ச் 2, 1990 - ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக நெல்சன் மண்டேலா தெரிவு செய்யப்பட்டார்
மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1.2.1990 அன்று மாலையில் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார். மார்ச் 2, 1990 - ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக நெல்சன் மண்டேலா தெரிவு செய்யப்பட்டார் . 1994 மே 10 ந் தேதி அவர் தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஆனார்... உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கினார். #life #lifes
#உலக_சிவில்_பாதுகாப்பு_தினம்
#மார்ச்_1
உலக சிவில் பாதுகாப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. உலக சிவில் பாதுகாப்பு தினமான 2021 இன் கருப்பொருள், “சிவில் பாதுகாப்பு மற்றும் ஒவ்வொரு வீட்டிலும் முதல் உதவியாளர்.” மார்ச் 1, 2021 அன்று கொண்டாடப்பட்டது. இந்த நாள் 1990 இல் சர்வதேச சிவில் பாதுகாப்பு அமைப்பு (ஐசிடிஓ) இணைத்தது.
1-அணிவகுப்பு-உலக-சிவில்-பாதுகாப்பு-நாள்
1972 ஆம் ஆண்டில் ஐசிடிஓ அரசியலமைப்பை ஒரு அரசுகளுக்கிடையேயான அமைப்பாக அமல்படுத்திய நாள் குறிக்கிறது மற்றும் இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டுள்ளது:
சிவில் பாதுகாப்பின் முக்கிய முக்கியத்துவம் மற்றும் விபத்துக்கள் அல்லது பேரழிவுகள் ஏற்பட்டால் தடுப்பு மற்றும் சுய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான ஆயத்தத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் உலக மக்களின் கவனம்.
உலக சிவில் பாதுகாப்பு தினம் பற்றி
சர்வதேச சிவில் பாதுகாப்பு அமைப்பு (ஐ.சி.டி.ஓ) என்பது ஒரு அரசு-அமைப்பு ஆகும், இதன் நோக்கம் இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளுக்கு முகங்கொடுக்கும் மக்கள்தொகை மற்றும் பாதுகாப்பான பாதுகாப்பு சொத்து மற்றும் சுற்றுச்சூழலின் பாதுகாப்பு மற்றும் உதவியை உறுதி செய்யும் கட்டமைப்புகளின் மாநிலங்களின் வளர்ச்சிக்கு பங்களிப்பதாகும். இந்த கட்டமைப்புகள் பொதுவாக சிவில் பாதுகாப்பு, சிவில் பாதுகாப்பு, சிவில் பாதுகாப்பு என அழைக்கப்படுகின்றன, மேலும் இவை அனைத்தும் அவசரகால சூழ்நிலைகளை நிர்வகிப்பதில் அக்கறை கொண்டுள்ளன. இந்த நோக்கத்திற்காக மாநிலங்களால் நிறுவப்பட்ட தேசிய கட்டமைப்புகளை ஐ.சி.டி.ஓ கூட்டமைப்பு செய்கிறது, அவற்றுக்கிடையேயான ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர ஒற்றுமையை ஆதரிக்கும் நோக்கத்துடன். #life #lifes
#தேசிய_அறிவியல்_நாள்
#பிப்ரவரி_28
இந்த தினம் கொண்டாடப்படும் வரலாறு மற்றைய தினங்களைப் போல அல்லாமல் வழக்கத்துக்கு மாறானது ஆகும். பொதுவாக தேசத்தலைவர்களின் பிறந்த மற்றும் நினைவு நாட்களே சிறப்பு நாட்களாக அறிவிக்கப்படும். இந்த இரண்டு வகையிலும் அல்லாமல் இந்திய மண்ணில் பிறந்து உலகம் போற்றும் வகையில் பல அரிய கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து வெளியிட்டவரும் சிறந்த இயற்பியல் மேதையுமான சர். சி. வி ராமன் தன்னுடைய நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28 ம் தேதி தேசிய அறிவியல் தினம் என அறிவிக்கப்பட்டது.
சர். சி. வி. இராமன் தனது புகழ்பெற்ற ராமன் விளைவை (Raman Effect) இந்நாளிலேயே கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்ததுடன் உயரிய விருதான நோபல் பரிசும் (1930) இவருக்கு கிடைத்தது. அந்நிகழ்வின் நினைவாகவும் அறிவியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் இந்திய அரசு இந்நாளைத் தேசிய அறிவியல் நாளாகப் பிரகடனப்படுத்தியது. #life #lifes
#NGO
#பிப்ரவரி27
அரசு சார்பற்ற அமைப்பு அல்லது அரசு சாரா தொண்டு நிறுவனம் (Non-governmental organization NGO) என்பது தனியாரால் அல்லது அரச பங்களிப்பு அல்லது சார்பற்று சட்டப்படி உருவாக்கப்படுகின்ற அமைப்புக்களாகும். அரசினால் முழுமையாக அல்லது பகுதியாக நிதியளிக்கப்படும் அமைப்புக்கள் தங்கள் அரசு சார்பின்மையைக் காத்துக் கொள்வதற்காக அரசுக்குத் தமது அமைப்பில் எவ்வித உறுப்புரிமையும் அளிப்பதில்லை.
பல்வேறு நாடுகளில் தேசிய அளவிலும், உலக அளவிலும் பல அரசு சார்பற்ற அமைப்புக்கள் இயங்கி வருகின்றன. உலக அளவில் 40,00,000 அரசு சார்பற்ற அமைப்புக்கள் இயங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தேசிய அளவில் இயங்குபவை இவற்றைவிட மிகவும் கூடுதலாகும். ரஷ்யாவில் சுமார் 4,00,000 அரசு சார்பற்ற அமைப்புக்களும், இந்தியாவில் 32,00,000 (32 இலட்சம்) அமைப்புக்களும் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்தியாவின் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைளைவிட கூடுதலாக அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் இயகுவதாகவும், நகர்புறங்களில் 1,000 மக்களுக்கு 4 அரசு சார்பற்ற அமைப்புகளும்; கிராமப்புறங்களில் 1,000 நபர்களுக்கு 2.3 தொண்டு நிறுவனகள் இயங்குகிறது. அரசுத் துறை மற்றும் தனியார் துறைக்கு அடுத்து அரசு சார்பற்ற அமைப்புகள் மூன்றாம் துறையாக விளங்குகிறது. #life #lifes
#பிப்ரவரி26, 1991 -- வரலாற்றில் இன்று - உலகின் முதல் Internet Browser அறிமுகப்படுத்தப்பட்டது…!
உணவின்றி கூட இளைஞர்கள் இருந்து விடுவார்கள் ஆனால், இணையம் இன்றி இருக்கவே மாட்டார்கள். மொபைல், லேப்டாப், கணிணி, டேப்லட் என அனைத்திலும், இணையத்தை பயன்படுத்தும் ஒரு மூலம் தான் இணைய உலவி(Web Browser).
இந்த இணைய உலவி அறிமுகப்படுத்தப் பட்ட தினம் இன்று. இது ஒரு கணிணி மென்பொருளாகும். இதனை, டிம் பெர்னேர்ஸ்-லீ நெக்சஸ் என்பவர் கண்டுபிடித்தார். இந்த இணைய உலவி அவரது பெயரிலேயே நெக்சஸ் (Nexus) என அழைக்கப்பட்டது
இவர் தான் உலகம் பரவிய வலையை (WWW) இணையத்தையும் கண்டுபிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #life #lifes













