#NGO
#பிப்ரவரி27
அரசு சார்பற்ற அமைப்பு அல்லது அரசு சாரா தொண்டு நிறுவனம் (Non-governmental organization NGO) என்பது தனியாரால் அல்லது அரச பங்களிப்பு அல்லது சார்பற்று சட்டப்படி உருவாக்கப்படுகின்ற அமைப்புக்களாகும். அரசினால் முழுமையாக அல்லது பகுதியாக நிதியளிக்கப்படும் அமைப்புக்கள் தங்கள் அரசு சார்பின்மையைக் காத்துக் கொள்வதற்காக அரசுக்குத் தமது அமைப்பில் எவ்வித உறுப்புரிமையும் அளிப்பதில்லை.
பல்வேறு நாடுகளில் தேசிய அளவிலும், உலக அளவிலும் பல அரசு சார்பற்ற அமைப்புக்கள் இயங்கி வருகின்றன. உலக அளவில் 40,00,000 அரசு சார்பற்ற அமைப்புக்கள் இயங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தேசிய அளவில் இயங்குபவை இவற்றைவிட மிகவும் கூடுதலாகும். ரஷ்யாவில் சுமார் 4,00,000 அரசு சார்பற்ற அமைப்புக்களும், இந்தியாவில் 32,00,000 (32 இலட்சம்) அமைப்புக்களும் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்தியாவின் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைளைவிட கூடுதலாக அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் இயகுவதாகவும், நகர்புறங்களில் 1,000 மக்களுக்கு 4 அரசு சார்பற்ற அமைப்புகளும்; கிராமப்புறங்களில் 1,000 நபர்களுக்கு 2.3 தொண்டு நிறுவனகள் இயங்குகிறது. அரசுத் துறை மற்றும் தனியார் துறைக்கு அடுத்து அரசு சார்பற்ற அமைப்புகள் மூன்றாம் துறையாக விளங்குகிறது. #life #lifes
#பிப்ரவரி26, 1991 -- வரலாற்றில் இன்று - உலகின் முதல் Internet Browser அறிமுகப்படுத்தப்பட்டது…!
உணவின்றி கூட இளைஞர்கள் இருந்து விடுவார்கள் ஆனால், இணையம் இன்றி இருக்கவே மாட்டார்கள். மொபைல், லேப்டாப், கணிணி, டேப்லட் என அனைத்திலும், இணையத்தை பயன்படுத்தும் ஒரு மூலம் தான் இணைய உலவி(Web Browser).
இந்த இணைய உலவி அறிமுகப்படுத்தப் பட்ட தினம் இன்று. இது ஒரு கணிணி மென்பொருளாகும். இதனை, டிம் பெர்னேர்ஸ்-லீ நெக்சஸ் என்பவர் கண்டுபிடித்தார். இந்த இணைய உலவி அவரது பெயரிலேயே நெக்சஸ் (Nexus) என அழைக்கப்பட்டது
இவர் தான் உலகம் பரவிய வலையை (WWW) இணையத்தையும் கண்டுபிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #life #lifes
அமெரிக்க உயிரி வேதியியலாளர் போபஸ் லெவினி (Phoebus Levene) #பிறந்த_தினம்
#பிப்ரவரி25:
லிதுவேனியாவின் சகர் பகுதியில் யூதக் குடும்பத்தில் (1869) பிறந்தார். தந்தை ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் நடத்திவந்தார். குடும்பம் விரைவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் குடியேறியது. அங்கு பள்ளிப்படிப்பை முடித்தார். இம்பீரியல் மிலிட்டரி மருத்துவ அகாடமியில் மருத்துவம் பயின்றார்.
மாணவப் பருவத்தின்போது, கரிம வேதியியல் பேராசிரியரின் ஆய்வுக்கூடத்தில் அவருக்கு உதவும் வாய்ப்பு கிடைத்ததால் உயிரி வேதியியலில் ஆர்வம் பிறந்தது. அப்போது, ரஷ்யாவில் யூத எதிர்ப்பு அதிகரித்ததாலும், பல இடங்களில் இனப்படுகொலை நடந்ததாலும், இவரது குடும்பத்தினரும் அங்கிருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறினர். பிறகு, மருத்துவப் படிப்பை முடிப்பதற்காக ரஷ்யா சென்றவர், பட்டம் பெற்றதும் மீண்டும் அமெரிக்கா திரும்பினார். நியூயார்க் நகரில் மருத்துவராக வாழ்க்கையைத் தொடங்கினார். ஓய்வுநேரத்தில், உயிரி வேதியியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். சர்க்கரைகளின் வேதியியல் கட்டமைப்பு குறித்து ஆராய்ந்து கட்டுரைகள் வெளியிட்டார். நியூயார்க் மாநில மருத்துவமனையின் நோயியல் அமைப்பில் இணை ஆய்வாளராக நியமனம் பெற்றார். காசநோயால் பாதிக்கப்பட்டதால் பணியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால், இந்தக் காலகட்டத்தில் ஆல்பிரெட் கொஸல், எமில் ஃபிஷர் உள்ளிட்ட உலகப்புகழ் பெற்ற வேதியியலாளர்களுடன் இணைந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். நன்றாக உடல்நலம் தேறியவர், மருத்துவ ஆராய்ச்சிகளுக்கான ராக்ஃபெல்லர் நிறுவனத்தில் உயிரி வேதியியல் ஆய்வுக்கூடத் தலைவராக 1905-ல் நியமிக்கப்பட்டார். இறுதிவரை அங்கு பணியாற்றினார். நியூக்ளிக் அமிலம் குறித்த தனது பெரும்பாலான ஆய்வுகளை இங்குதான் இவர் மேற்கொண்டார். டிஎன்ஏ-வின் கூறுகள் குறித்து ஆராய்ந்து, அவற்றை அடையாளம் கண்டார். அனைத்து உயிரினங்களிலும் அடிப்படையான வேதிப்பொருளான ரைபோஸை 1909-ல் கண்டறிந்தார். டி.என்ஏ ஆர்என்ஏ இடையிலான வேறுபாடுகளை விளக்கினார். இவைதான் உயிரினத்தை தக்கவைக்கும் முதன்மைக் கூறுகள் என்பதையும் கண்டறிந்தார். நியூக்ளிக் அமிலங்களின் அமைப்பு, செயல்முறை பற்றி ஆய்வு மேற்கொண்டார். டிஎன்ஏ கூறுகளைக் கண்டறிந்ததோடு, இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளதையும் எடுத்துக் கூறினார். இவற்றை ‘நியூக்ளியோடைடு’ என்று குறிப்பிட்டார். இவற்றை தனியே பிரித்தெடுத்தார். டிஎன்ஏ கட்டமைப்பு குறித்த இவரது கூற்று பின்னாளில் தவறு என நிரூபிக்கப்பட்டாலும், டிஎன்ஏவின் கட்டமைப்பு குறித்து தீர்மானிக்க இவரது கூற்றுதான் அடிப்படையாக இர #life #lifes
#பிப்ரவரி_24, 1914- வரலாற்றில் இன்று பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கி இன்றுடன் 107 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆங்கிலேயர்கள் நமக்கு விட்டுச் சென்ற வரலாற்று பொக்கிஷம் என்றால் மிகையாகது. 2,340 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபத்தையும் கடலுக்குள் அமைந்து இருக்கும் பாம்பன் தீவையும் இணைக்கிறது பாம்பன் ரயில் பாலம் நூறு ஆண்டுகளை கடந்தும் இப்போதும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.
இந்த புதிய ரயில்வே தூக்குப்பாலத்தை கட்டுவதற்கான முதற்கட்டப் பணிகள் 1902-ம் ஆண்டு தொடங்கப்பட்டன.
பல்வேறு இயற்கை சீற்றங்கள், தடைகளை கடந்து 11 ஆண்டுகளாக ரயில்வே தூக்குப்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. பாம்பன் பாலத்தில் 1914-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந்தேதி முதன் முதலாக ரெயில் போக்குவரத்து தொடங்கியது.
பாம்பன் ரெயில் பாதை அமைக்கப்பட்ட நாள் முதல் மீட்டர்கேஜ் பாதையாகவே இருந்தது. 2007 ஆகஸ்டு மாதம் முதல் அகலப்பாதையில் ரயில் போக்குவரத்து தொடங்கியது. #life #lifes
வரலாற்றில் இன்று #பிப்ரவரி_23, 1947 – அனைத்துலக தரநிர்ணய தாபனம் (ISO) ஆரம்பிக்கப்பட்டது.
உலகின் பல நாடுகளின் நாடளாவிய சீர்தர (நியமங்கள்) நிறுவனங்களை உறுப்பினராகக் கொண்ட, சீர்தரங்களை உருவாக்கும் உலக நிறுவனமே சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் (International Organisation for Standardization) ஆகும்.ISO எனப் பொதுவாகக் குறிப்பிடப்படும் இது ஒரு அரசு சார்பற்ற நிறுவனம் ஆகும். எனினும் இது உருவாக்கும் தரங்கள் (நியமங்கள்), நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் மூலமோ அல்லது நாட்டுத் தரங்கள் (தேசிய நியமங்கள்) மூலமாகவோ சட்டமாகும் வாய்ப்புகள் இருப்பதால், அரசு நிறுவனங்களைவிடவும் இது சக்தி வாய்ந்ததாக விளங்குகிறது !. சமம் எனப் பொருள் தரும் isos என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து பெறப்பட்ட ISO (ஐஎஸ்ஓ) என்ற பெயரைப் பயன்படுத்தி வருகிறார்கள். #life #lifes
#உலக_சிந்தனை_தினம்
#பிப்ரவரி22
சிந்தனை நாள் வரலாறு
உலகெங்கிலும் உள்ள பெண் வழிகாட்டிகள் மற்றும் பெண் சாரணர்கள் ஒருவருக்கொருவர் பாராட்டுக்களைக் காட்ட சிந்தனை நாள் அனுமதிக்கிறது. இந்த நாள் பெண் வழிகாட்டிகள் மற்றும் பெண் சாரணர்களை உலகின் மற்ற அனைத்து பெண் வழிகாட்டிகள் மற்றும் பெண் சாரணர்களைப் பற்றி சிந்திக்க ஊக்குவிக்கிறது. நன்றி தெரிவிக்க இது அவர்களை ஊக்குவிக்கிறது. இந்த நாள் இளம் பெண்களைப் பாதிக்கும் பிரச்சினைகளையும் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான பெண் வழிகாட்டிகள் மற்றும் பெண் சாரணர்களுக்கான நிதி திரட்டலை ஏற்பாடு செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
சிந்தனை நாள் 1926 இல் நான்காவது பெண் சாரணர் சர்வதேச மாநாட்டில் நிறுவப்பட்டது. பாய் ஸ்கவுட் இயக்கத்தின் நிறுவனர் லார்ட் பேடன்-பவல் மற்றும் உலக தலைமை வழிகாட்டியாக இருந்த அவரது மனைவி ஓலேவ் ஆகியோரின் நினைவாக பிப்ரவரி 22 தேர்வு செய்யப்பட்டது. இது ஆண்டுதோறும் பிப்ரவரி 22 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. #life #lifes
#சர்வதேச_தாய்_மொழி_தினம்
#பிப்ரவரி21
சர்வதேச தாய் மொழி தினம் என்பது பிப்ரவரி 21 அன்று மொழியியல் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கும் பன்மொழி அறிவை ஊக்குவிப்பதற்கும் உலகளாவிய வருடாந்திர அனுசரிப்பு ஆகும். நவம்பர் 17, 1999 அன்று யுனெஸ்கோவால் முதன்முதலில் அறிவிக்கப்பட்டது, இது ஐ.நா. பொதுச் சபையால் 2002 இல் ஐ.நா. தீர்மானம் 56/262 ஐ ஏற்றுக்கொண்டது. முறையாக அங்கீகரிக்கப்பட்டது. அன்னை மொழி தினம் ஒரு பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் "அனைத்து மொழிகளின் பாதுகாப்பையும் பாதுகாப்பையும் ஊக்குவிக்கும் உலக மக்களால் பயன்படுத்தப்படுகிறது "ஐ.நா. பொதுச் சபை 16 மே 2007 அன்று ஐ.நா. தீர்மானம் 61/266 இல் ஏற்றுக்கொண்டது, இது 2008 ஐ சர்வதேச மொழிகளின் ஆண்டாகவும் நிறுவியது. சர்வதேச தாய் மொழி தினத்தை கொண்டாடும் யோசனை பங்களாதேஷின் முன்முயற்சியாகும். பங்களாதேஷில், பிப்ரவரி 21, பங்களாதேஷ் மக்கள் (அப்போதைய கிழக்கு பாகிஸ்தான்) பங்களா மொழிக்கான அங்கீகாரத்திற்காக போராடிய நாளின் ஆண்டுவிழா. இது இந்தியாவின் மேற்கு வங்கத்திலும் கொண்டாடப்படுகிறது. #life #lifes
#உலக_சமூக_நீதி_தினம்
#பிப்ரவரி_20
சமூக நீதிக்கான உலக நாள் அல்லது உலக நீதி நாள் (World Day of Social Justice) என்பது உலக நாடுகள் முழுவதும் ஆண்டுதோறும் பிப்ரவரி 20 ஆம் நாளன்று கடைப்பிடிக்கப்படும் நாளாகும். வறுமையைப் போக்கவும், வேலையின்மையின் பிரச்சினைகளைக் கையாளும் முயற்சிகளை ஊக்குவிக்கவும், இந்நாள் அங்கீகரிக்கப்படுகிறது. மேலும் இந்நாளில், ஐக்கிய நாடுகள் அவை, மற்றும் சர்வதேச தொழிலாளர் அலுவலகம் உட்பட, பல அமைப்புக்கள் மக்கள் சமூக நீதி முக்கியத்துவம் பற்றிய அறிக்கைகளை தயாரிக்க அமைக்கப் பெற்றுள்ளது. #life #lifes
#பிப்ரவரி_19,
வரலாற்றில் இன்று.
கோபர்நிகஸ் பிறந்த தினம் இன்று.
உலகப் புகழ்பெற்ற முன்னோடி வானியலாளர் நிகோலஸ் கோபர்நிகஸ் 1473ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி போலந்து நாட்டின் தோர்ன் நகரில் பிறந்தார்.
எந்த தொலைநோக்கி கருவியும் இல்லாமலேயே இவரது ஆராய்ச்சிகள் நடைபெற்றன. வானியல் குறித்து அதுவரை ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்த புவி மையக் கோட்பாட்டை மறுத்து சூரியனை மையமாகக் கொண்டே பூமி உள்ளிட்ட கோள்கள் சுற்றி வருகின்றன என்கிற சூரிய மையக் கோட்பாட்டை வகுத்தார். கோள்களின் பின்னோக்கிய நகர்வு அவற்றின் ஒளி வேறுபாடுகள் ஆகியவற்றையும் விளக்கினார். விண்மீன்கள் அமைந்துள்ள இடங்களை வரையறுத்துக் கூறினார்.
ஆன் தி ரெவல்யூஷன் ஆஃப் தி ஹெவன்லி ஸ்பியர்ஸ் என்ற நூலில் தனது ஆய்வுகள் குறித்து எழுதியுள்ளார். இதில் பூமி தனது அச்சில் சுழல்கிறது என்பதையும் பூமியை சந்திரன் சுற்றி வருகிறது என்றும் துல்லியமாக குறிப்பிட்டிருந்தார்.
வானியல் ஆய்வாளராக மட்டுமல்லாமல் சட்ட நிபுணர், மருத்துவர், பழங்கலை அறிஞர், மதகுரு, ஆளுநர், அரசு தூதர் என பல துறைகளில் தனது பங்களிப்பை வழங்கிய நிகோலஸ் கோபர்நிகஸ் தனது 70ஆவது வயதில் (1543) காலமானார்.
‘வானுலகக் கோள்களின் சுழற்சிபற்றிய’ தனது கண்டுபிடிப்பை 36 ஆண்டுகளுக்கு முன்பே நூலாக எழுதியும், கத்தோலிக்க கிறிஸ்தவ பழமை வாத திருச்சபையின் கொலை வெறிக்குப் பயந்துபோன கோப்பர்நிகஸ் இறுதியில் தனது மரணப்படுக்கையில் இருந்துதான் அதனை வெளியிட்டார். #life #lifes
வரலாற்றில் இன்று #பிப்ரவரி_18, 1911 - முதலாவது அதிகாரப்பூர்வமான விமான அஞ்சல் சேவை இந்தியாவின் அலகாபாத்தில் ஆரம்பமானது
அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்தது பிரிட்டிஷார், விமானப் பயண சாகசத்தை சாத்தியமாக்கியது அமெரிக்கர்கள் என்றாலும் விமானத்தில் அஞ்சல் சேவையைத் தொடங்கியவர்கள் இந்தியர்கள் என்றால் வியப்பாக இல்லையா? இப்போதைய உத்தரப் பிரதேசத்தின் அலாகாபாத் நகரில்தான் அந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது. அலகாபாத் புறநகரில் உருவாக்கப்பட்டிருந்த கண்காட்சித் திடலிலிருந்து, 1911-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதியன்று மாலை 5.30 மணிக்கு 6500 கடிதங்கள் அடங்கிய அஞ்சல் பைகளுடன் விமானம் புறப்பட்டது. ஜவஹர்லால் நேருவின் தந்தை மோதிலால் நேரு நைனிடாலில் படித்துக் கொண்டிருந்த இருந்த தனது மகன் ஜவஹர்லாலுக்கு எழுதிய ஒரு கடிதமும் அதில் ஒன்று ஆகும். ஆயிரக்கணக்கான மக்கள் வியப்பும் மகிழ்ச்சியும் முகங்களில் ஒருசேர அந்த விமானம் தரையிலிருந்து புறப்பட்டதையும் விண்ணில் ஏறிப் பறப்பதையும் கண்கொட்டாமல் கண்ணுக்கெட்டிய தூரம்வரை பார்த்துக்கொண்டே நின்றனர். அந்த விமானம் யமுனைமீது பறந்து நைனி சந்திப்பு அருகே தரையிறங்கியது. அலாகாபாதுக்கு புறத்தில் இருந்த அந்த இடத்தில்தான் நைனி மத்திய சிறைச் சாலையும் இருந்தது. 12 கிலோ மீட்டர் தொலைவுள்ள அந்தப் பயணத்துக்கு வெறும் 13 நிமிஷங்களே பிடித்தன. அங்கே தரையிறங்கியதும் அஞ்சல் பை எடுக்கப்பட்டு அதிலிருந்தவை தரை, கடல், ரயில் என்று எல்லா வழிகளிலும் உரியவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. #life #lifes













