நற்கருணை மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வணக்கமாதம்*
ஏப்ரல்-5
அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே, எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும். எங்கள் சர்வேசுரா, பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே. -ஆமென்.
அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா,
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்.
ஏனெனில், அவர் நல்லவர். என்றென்றும் உள்ளது, அவரது இரக்கம். அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா.
அளவில்லாத கிருபையும், பொறுமையுமுடைத்தான சர்வேசுரனாகிய இயேசுவே! மிகுந்த பக்தி சிரவணத்தடனே, தேவரீரை ஆராதிக்கிறேன். தேவரீருக்கு மிகவும் அருவருப்பான எங்கள் கோபம், வர்மம், பழி முதலிய சகல அக்கிரமக்களுக்கும் பரிகாரமாக, பத்திராசனருடைய மாறாத சமாதானத்தையும், சாது அமரிக்கையையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி.
பரிசுத்த ஆவிக்கு மன்றாட்டு:
திவ்ய இஸ்பிரீத்துசாந்துவே! தேவரீர் எழுந்தருளி வாரும். பரலோகத்திலே நின்று, உம்முடைய திவ்விய பிரகாசத்தின் கதிர்களை வரவிடும்.
தரித்திரர்களுடய பிதாவே, கொடைகளைக் கொடுக்கிறவரே, இருதயங்களின் பிரகாசமே, எழுந்தருளி வாரும். உத்தம ஆறுதலானவரே, ஆத்துமங்களுக்கு மதுரமான விருந்தாடியே, பேரின்ப இரசமுள்ள இளைப்பாற்றியே, பிரயாசத்தில் சுகமே, வெயிலில் குளிர்ச்சியே, அழுகையில் தேற்றரவே, எழுந்தருளி வாரும்.
வெகு ஆனந்தத்தோடே கூடியிருக்கிற பிரகாசமே, உமது விசுவாசிகளுடைய இருதயங்களின் உற்பனங்களை நிரப்பும். உம்முடைய தெய்வீகமன்றியே, மனிதரிடத்தில் குற்றமில்லாதது ஒன்றுமில்லை.
அசுத்தமாயிருக்கிறதைச் சுத்தம் பண்ணும். உலர்ந்ததை நனையும். நோவாயிருக்கிரதைக் குணமாக்கும். வணங்காதை வணங்கப் பண்ணும். குளிரோடிருக்கிரதைக் குளிர்போக்கும். தவறினதைச் செவ்வனே நடத்தும்.
உம்மை நம்பின உம்முடைய விசுவாசிகளுக்கு, உம்முடைய திருக்கொடைகள் ஏழையும் கொடுத்தருளும். புண்ணியத்தின் பேறுகளையும், நல்ல மரணத்தையும், நித்திய மோட்சானந்த சந்தோஷத்தையும், எங்களுக்குத் தந்தருளும் சுவாமி!
ஆமென்.
நிலையான புகழுக்குரிய, தூய்மைமிகு நற்கருணைக்கு, எல்லா காலமும் ஆராதனையும், புகழும் மாட்சிமையும் உண்டாகக்கடவது.
இயேசுவுக்கே புகழ் ! மரியே வாழ்க ! #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன்


