ShareChat
click to see wallet page
search
#பத்தி #ஆன்மீக #தெரிந்து கொள்வோம் இடத்தில் மனமும் பிரபஞ்சமும் இணைகிறதோ* அங்கு தான் ஆன்மிகம் பிறக்கிறது"* நமக்கு தெளிவான மனநிலை இல்லாத போது தான் நாம் அடுத்தவரை பார்த்து விமர்சனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளோம். தெளிவு வந்து விட்டால் நம்மை நாமே உள்ளுணர்ந்து சிரித்துக்கொள்வோம். தண்ணீரில் தூசியும் மனதில் ஆசையும் வந்துவிட்டால் அது தெளிவற்ற நிலைக்கு சென்றுவிடும். அதை தெளிவடைய செய்வது தான் தியானம். எது உங்களை நல்லவிதமாக உணரவைக்குமோ எதன் மூலம் உங்கள் மனம் பேரானந்த நிலைக்கு ஆட்படுகிறதோ எதன் மூலம் ஐம்புலன்களும் அடங்குகிறதோ எது உங்களை பிரபஞ்சத்துடன் இணைக்கிறதோ அதுவே தியானம். நீங்கள் அழுதாலும் சரி அல்லது சிரித்தாலும் சரி உணவு உண்டாலும் சரி உறங்கினாலும் சரி வேலை செய்தாலும் சரி அத்தனையுமே தியானம் தான். தன்னை மறப்பது பரவசநிலைக்கு செல்வது தான் தியானம். எண்ணங்களற்ற நிலைக்கு மாற வேண்டும். எண்ணங்கள் அற்ற நிலையில் தான் மனம் முழுமை அடைந்து நிற்கும். முழுமை என்றால் அசைவற்ற நிலை. இன்னும் தெளிவாக சொல்வதனால் உடலுறவின் போது உச்சக்கட்ட நிலையின் போது மனம் அடைகின்றதே அந்த நிலைதான். மனம் அந்த நேரத்தில் தான் அசைவின்றி நிற்கும். அதாவது உச்சக்கட்ட பேரானந்த நிலையின்போது அனைத்துவிதமான மனதின் எண்ணங்கள் அனைத்தும் ஸ்தம்பிக்கின்றன. ஒவ்வொரு கணத்திலும் நீங்கள் முழுமை அடையலாம். அது உங்கள் அணுகுமுறையில் தான் இருக்கிறது. இந்த அற்புத நிலையை அடைய நீங்கள் எதையும் இழக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. எந்த இடத்தில் மனமும் பிரபஞ்சமும் இணைகிறதோ அங்கு தான் ஆன்மிகம் பிறக்கிறது. அது மதம் இனம் கடந்த நிலை. எந்த கணத்திலும் எதுவும் அழியலாம். சும்மா தத்துவங்களை மட்டுமே பேசி பொழுதை கழிப்பதும் வீணே. வாழும் வாழ்க்கையின் உள்ளே புகுந்து நடக்கும் விசயங்களை தோண்டி துருவி ஆராய்வது தான் சிறந்தது. ஆனால் அதற்கு மனதில் துணிவு வேண்டும். வேதங்கள் சாஸ்திரங்கள் மட்டும் படித்துக்கொண்டு இருந்தால் அனுபவம் வந்து விடாது. அதை தூக்கி எறிந்துவிட்டு அனுபவப்படுங்கள். அது மட்டுமே உங்களக்கு ஞானத்தை கொடுக்கும். நீங்கள் தேடும் அந்த பேரானந்த நிலை என்பது நீங்கள் படிக்கும் நூல்களிலோ அல்லது புரியாத தத்துவங்களிலோ இல்லை. நீங்கள் சுயம் கற்று தெளிவதிலே தான் இருக்கிறது. சித்தர்கள் மீது பக்தி கொண்டாடுவதை விட அவர்களை அவர்களின் ஆசீர்வாதத்தோடு பின்தொடர முயல்வதே சிறந்தது. பக்தியில் ஆசீர்வாதம் மட்டுமே கிடைக்கும். ஆனால் அவர்கள் அரவணைப்பு மட்டுமே நமக்கு ஞானத்தை கொடுக்கும். 🙏🌺🙏
பத்தி - Hce2se 5 Hce2se 5 - ShareChat