ShareChat
click to see wallet page
search
#🙏🙏💥💥om namachivaaya💥💥🙏🙏 திருப்பதிகம்🌷...! *🌷நான்காம் திருமுறை 11 வது திருப்பதிகம்🌷...!* *🌷அருளிச்செய்தவர்: திருநாவுக்கரசு சுவாமிகள்...🌷* 〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️ 🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶 *பாடல் :04...!* இடுக்கண் பட்டிருக்கினும் இரந்து யாரையும் விடுக்கில் பிரான் என்று வினவுவோம் அல்லோம் அடுக்கல் கீழ் கிடக்கினும் அருளின் நாம் உற்ற நடுக்கத்தை கெடுப்பது நமச்சிவாயவே. *விளக்கம்:* எந்த வகையான இடுக்கண் தன்னை எதிர் நோக்கினும். அந்த இடுக்கண்களிலிருந்து நீர் என்னை விடுவிக்க வேண்டும் என்று எவரையும் இறைஞ்சும் நிலையில் நான் இல்லை. அருளின் வயமாகிய சிவபிரானின் நாமமாகிய நமச்சிவாய மந்திரம், மலையின் கீழ் மாட்டிக் கொண்டு எழமாட்டாத நிலையில் இருந்தாலும், அதனால் எனக்கு ஏற்படும் நடுக்கத்தை கெடுத்து காப்பாற்றும். *தொடரும்...* 🟧🌹🟧🌹🟧🌹🟧🌹🟧🌹🟧🟧🌹🟧🌹🟧🌹🟧🌹🟧🌹🟧
🙏🙏💥💥om namachivaaya💥💥🙏🙏 - ShareChat