ShareChat
click to see wallet page
search
பத்தாம் திருமுறை திருமூலர் அருளிய திருமந்திரம் நூற் சிறப்பு பாடல் எண் : 19 இருந்தேன் இக் காயத்தே எண்ணிலி கோடி இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே இருந்தேன் என் நந்தி இணையடிக் கீழே . பொழிப்புரை: இங்கும் இவ்வுடம்பிலே பல்லாண்டுகள் இருந்தேன். அங்ஙனம் இருந்த காலம் முழுவதும் சிவஞானப் பேரொளியில்தான் இருந்தேன். அது தேவராலும் வணங்கப்படும் எங்கள் நந்தி பெருமானது திருவடி நிழலேயன்றி வேறில்லை. #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏கோவில்
🙏🏼ஓம் நமசிவாய - அருமுல தேவநாயனாம் அருமுல தேவநாயனாம் - ShareChat