ShareChat
click to see wallet page
search
*சிவபெருமானின் வலது* *பாத தரிசனத்தை எல்லா* *நாட்களிலும் காண* *வேண்டுமா*? பன்றியாக உருவெடுத்து சிவனின் அடிமுடியைத் தேடிச் சென்ற திருமால் காண முடியாத சிவனின் திருவடிகளை  'குஞ்சிதபாதம்'  என்பார்கள். சிதம்பரம் நடராஜர் கோவில் (தில்லை): பன்றியாக உருவெடுத்து சிவனின் அடிமுடியைத் தேடிச் சென்ற திருமால், சிவனின் திருவடியைக் காணமுடியாமல் திகைத்தார். பின்னர் திருமால் தவம் கிடக்க, கூத்தபிரானாகிய சிவபெருமான் தமது இடது காலை உயர்த்திய நிலையில் நடனம் ஆடி, திருமாலுக்கு தமது இடது பாத தரிசனத்தை அருளினார். இந்த குஞ்சித பாத தரிசனம் தினமும் சிதம்பரத்தில் பக்தர்களுக்குக் கிடைக்கிறது.  காணக்கிடைக்காத சிவபெருமானின் 'வலது பாத தரிசனம்' என்பது மிகவும் அபூர்வமான ஆன்மீக அனுபவமாகும். சிவபெருமானின் வலது பாத தரிசனம் உணர்த்தும் ஆன்மீக தத்துவம்: சிவபெருமானின் தூக்கிய இடது பாதம் 'ஆனந்தம்' (அருள்) மற்றும் முக்தியைக் குறிக்கிறது. சிவபெருமானின் தூக்கிய வலது பாதம் அறியாமையை அடக்கும் அடக்குமுறையைக் குறிக்கிறது. மேலும், வலது பாத தரிசனம் என்பது இறைவனின் பரிபூரண அருளையும், பக்தர்களின் அகந்தை அழிவதையும் உணர்த்தும் நிலையாகும். சிவபெருமானின் தூக்கிய வலது பாதம் தரிசனத்திற்கான வழிபாட்டு பலன்:  வலது பாத நடராஜரை மனமுருகி வழிபடுவதால் தொழில் வளர்ச்சி, குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் நிலையான நல்வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். பொதுவாக சிவன் கோயில்களில் நடராஜர் இடது காலைத் தூக்கி ஆடிக்கொண்டிருப்பார். ஆனால், ஒரு சில சிவத்தலங்களில் சிவபெருமானின் வலது பாத தரிசனம் என்பது மிகவும் பிரசித்தி பெற்றது.  சிவபெருமானின் வலது பாத தரிசனம் காண்பதற்கான முக்கியமான சிவத்தலங்கள்: திருவாரூர்: தியாகராஜர் கோயிலில் பங்குனி உத்திரத்தன்று பெருமானின் வலது திருப்பாத தரிசனம் கிடைப்பது சிறப்பு. விளமர்: திருவாரூர் அருகே உள்ள விளமர் அக்னீஸ்வரர் கோயிலில் தியாகேசரின் வலது பாத தரிசனம் கிடைக்கிறது. மதுரை: மீனாட்சி அம்மன் கோயிலில் மட்டும் சிவபெருமான் இடது காலை ஊன்றி, வலது காலைத் தூக்கி ஆடிய காட்சியை (வெள்ளியம்பலத்தில்) எப்போதும் தரிசிக்கலாம்.  அதே போன்று எப்போதும் வலது பாத தரிசனம் அருளும் கீழ்வேளூர் நடராஜர்! பொதுவாகவே சிவன் கோவில்களில் மூலவரை விட நடராஜருக்கு தனிச்சிறப்பு உண்டு. அதிலும் கீழ்வேளூர் தலத்தில் இறைவன் வலது பாதத்தைக் காட்டி அருளுவதால், இந்த தரிசனம் காண்பது மிகவும் அரிதான ஒன்றாகும். நடராஜர் தன் வலது காலைத் தூக்கி ஆடும் அபூர்வக் காட்சியை நாம் மதுரை மற்றும் கீவளூரில் மட்டுமே எப்போதும் தரிசிக்க முடியும். அகத்திய முனிவர் இறைவனின் வலது பாத தரிசனம் கிடைக்க வேண்டினார். அதற்கு சிவபெருமான், அகத்திய முனிவரை தென் பத்ரிகாரண்யத் தலத்தில் (கீவளூரின் புராணக் காலப் பெயர்) தன்னை பூஜை செய்து வழிபடும்படியும், அங்கு அவருக்கு தன் விக்ஷேச வலது பாத தரிசனத்தைத் தருவதாகவும் அருளினார். அகத்திய முனிவர் கீவளூர் தலத்துக்கு வந்து சிவபெருமானை வழிபடலானார். சிவபெருமான், ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று அகத்திய முனிவருக்கு கால் மாறி ஆடி, தன் வலது பாத தரிசனத்தைக் காட்டி அருளினார். அப்போது நடராஜப் பெருமானும், சிவகாமி அம்மையும் தாணடவமாட அதற்கு விநாயகரும், முருகப்பெருமானும் பாட்டுப் பாட, பிரம்மா தாளம் போட, சரஸ்வதி வீணை வாசிக்க, விஷ்ணு மத்தளம் வாசிக்க, மகாலஷ்மி கர தாளம் போட, இந்திரன் புல்லாங்குழல் வாசிக்க, வியாக்ரபாத முனிவர், பதஞ்சலி முனிவர் உடனிருக்க அகத்திய முனிவருக்குக் காட்சி தந்தார். கிருபா சமுத்திரம், சுமுகம், த்ரிநேத்ரம், ஜடாதாரம், பார்வதி வாம பாகம், சதாசிவம், ருத்ரமானந்த ரூபம், சிதம்பரேஷம் ஹர்தி பாவாயாமி. மேற்கண்ட சிதம்பரேசுவர ஸ்தோத்திரம் பின்னணியில் ஒலிக்க கீழ் வேலூர் வலது பாத நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறும் காணொளிகாட்சி கீழே!👇👇🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐
🙏🏼ஓம் நமசிவாய - ShareChat
01:18