ShareChat
click to see wallet page
search
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Sambo Mahadeva 🙏🔱⚜️ பிணிகளின் தன்மையினை உடைய சாதல் பிறத்தல் ஆகியன நீங்க, எக்காலத்தும் நீங்காத பேரின்பத்தோடு கூடிய அழகிய தன்மை வாய்ந்த, மேலுலகங்களை நீவிர் அடைய விரும்பினால், விடையேற்றை ஊர்தியாகவும், கொடியாகவும் உடையவனும், நீலமணி போன்ற கண்டத்தினைக் கொண்டவனும் ஆகிய சிவபிரான் மலைமகளும் தானுமாய் மகிழ்ந்து வாழும், தெளிந்த நீரை உடைய கடந்தையில் ஒளியோடு கூடிய திருத்தூங்கானைமாடக் கோயிலை அறிந்து தொழுவீராக. உங்கட்கு யாதும் குறைவில்லை. -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம்.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - @ நமசிவாய [0 பிணிநீரசாதல் பிறத்தலிவை பிரியப் பிரியாத பேரின்பத்தோ டணிநீரமேலுலக மெய்தலுறில் அறிமின் குறைவில்லை யானேறுடை மணிநீல கண்டமுடையபிரான் மலைமகளுந்தானு மகிழ்ந்துவாழும் துணிநீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே. @ நமசிவாய [0 பிணிநீரசாதல் பிறத்தலிவை பிரியப் பிரியாத பேரின்பத்தோ டணிநீரமேலுலக மெய்தலுறில் அறிமின் குறைவில்லை யானேறுடை மணிநீல கண்டமுடையபிரான் மலைமகளுந்தானு மகிழ்ந்துவாழும் துணிநீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே. - ShareChat