#✡️ஜோதிட பரிகாரங்கள் குறையொன்றுமில்லை - முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார்
நரசிம்ஹ அவதாரத்துக்குத் தனியான ஏற்றம் தருவது அவருடைய அத்யத்புத ரூபம்.
"ஸ்தம்பே ந த்ருச்யதே" (ஸ்தம்பத்திலே, தூணிலே தெரியலையே) என்று ஹிரண்யகசிபு கேட்டபோது,
"ஸ்தம்பேந த்ருச்யதே" (ஸ்தம்பத்திலேதான் தெரிகிறான்) என்று பதில் சொல்கிறான் குழந்தை பிரஹலாதன்.
"எனக்கு தெரியாமல் உனக்குத் தெரிகிறானா? இரு! இதோ உன் தலை வேறு, உடம்பு வேறுன்னு துண்டிக்கிறேன். அது பிரிஞ்சு போய்த் துடிக்கறச்சே தைப்பானா பார்ப்போம்" என்கிறான் அசுரன்.
"அந்த காரியம் அவன் பண்ண மாட்டான்" என்கிறான் பிரஹலாதன்.
"அவன் பண்ணமாட்டான் என்றால் நீ ஏன் அவனை ஆச்ரயிக்கிறாய்"?
"அங்கே ஸ்தம்பத்திலேஇருக்கிறவன் என்ன அவ்வளவு கடினாத்மாவா?. நீ கத்தி எடுத்து வெட்டறேன்னு சொல்றியே. அந்தக் கத்தியைக் கழுத்தருகே கொண்டு வர முடியுமா உன்னாலே. அது வரை அவன் பார்த்துக் கொண்டிருப்பானா?" என்கிறான் பிரஹலாதன்.
அவ்வளவு விச்வாசம் பகவானிடத்திலே!
அந்த மாதிரி பூரண விச்வாசம் வைத்தால்தான், "என்னை ரட்சிக்க வேண்டிய பொறுப்பு உன்னுடையது" என்று பகவானிடத்திலே உரிமை கொண்டாடலாம்.
விச்வாசம் பண்ணுவதற்கு முன்னே சரணாகதி பண்ணினால் எடுபடுமா?
யாகம் பண்ண ஒருவர் திரவிய உதவி செய்கிறார். நம்பிக்கை இல்லாமலேதான் செய்கிறார். ஆனால் யாகம் செய்து மழை பெய்த பிறகு அவருக்கு நம்பிக்கை வருகிறது. சரணாகதி விஷயம் அப்படி இல்லை. விச்வாசம் இல்லாமல் சரணாகதி பண்ணினால் பலிக்காது.
எம்பார் அவர்கள் காலட்சேப கோஷ்டியிலே இருந்த தமது சீடர்களுக்கு சொல்லுவார் "கர்ம, ஞான, பக்தி யோகம் எல்லாம் பண்ணுவது கஷ்டம். அதெல்லாம் பண்ணி அவஸ்தைப்படாமல் சரணாகதியை சுலபமாகப் பண்ணிவிடலாம் என்று எண்ணிக் கொள்ளக் கூடாது. ஏனென்றால் சரணாகதிக்கு முன்னாடி மகாவிச்வாசம் என்று ஒன்று இருக்கே. அது சுலபத்திலே வருவதில்லை. அக்கம்பக்கத்திலே உள்ளவர்களிடம் ஏற்படும் விச்வாசம் கூட நமக்கு பகவானிடத்திலே வருவதில்லை" என்பார்.tks nalini gopalan
#👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏பெருமாள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞


