#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் கோயிலில் 4-ம் ஆண்டு தேர்த்திருவிழா:
வேலூர் அடுத்த இரத்தினகிரியில் ஸ்ரீபாலமுருகன் திருக்கோயில் உள்ளது. இதன் 4-ம் ஆண்டு பிரம்மோத்சவ விழா கடந்த 22-ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
முக்கிய நிகழ்வான வைகாசி விசாக திருத்தேர் 30-ம் தேதி காலையாகசாலை பூஜை முடிந்து வசந்தகால மண்டபத்தில் உத்சவமூர்த்தி (பாலமுருகன் வள்ளிதெய்வானையுடன்) தங்க கவச அலங்காரத்துடன் திருத்தேர் மலையை சுற்றிவளம் வந்தது. ஏரளமான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர். நிலைக்கு வந்தபின் பக்தர்கள் வழிப்பாடு செய்தனர்.
ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை சுவாமிகள், செயல் அலுவலர் பரந்தாமகண்ணன் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


