ShareChat
click to see wallet page
search
சைவம், வைணவம், சாக்தம், காணாபத்யம், கவுமாரம், சவுரம் என்ற ஆறு மதப் பிரிவுகள் முன்பு இருந்தன. இவர்கள் சிவன், விஷ்ணு, சக்தி, கணபதி, முருகன், சூரியன் ஆகியோரை முதல் கடவுளாக கருதி வழிபட்டனர். இந்த ஆறு மதங்களையும் ஒன்றிணைத்து, சனாதான தர்மத்தை, உருவாக்கினார் ஆதிசங்கர பெருமான். இந்த மாபெரும் சகாப்தத்தை உருவாக்கிய மகானின் போதனைகள் அனைவராலும் ஏற்கத்தக்கவை. "பொருளின் மீது உள்ள பேராசையை விட வேண்டும். உழைப்பால் அடைந்ததை வைத்து திருப்தி அடைய வேண்டும். இரவுக்கு பின் பகலும், காலைக்குப் பின் மாலையும், குளிர்காலத்திற்கு பின் வசந்தமும் மாறி மாறி வருகின்றன. காலம் விளையாடல் புரிகின்றது. ஆயுள் தேய்ந்து கொண்டே வருகின்றது. அப்படி இருந்தும் வீண் ஆசைகள் மட்டும் நம்மை விட்டு அகல மறுக்கிறது. வாழ்வின் உண்மைத்தன்மையை அறிந்து வீணான ஆசைகளை விட்டு நியாயமாக கிடைப்பதைக் கொண்டு வாழ வேண்டும். ஜடை தரித்தல், மொட்டை அடித்தல், காவி ஆடை அணிதல் ஆகிய வேடங்களால் எந்த பலனும் கிடைக்காது. கடவுளுக்கு பயந்து அவருக்கு பிடித்தமானதை செய்யாமல் இவ்வாறான வேடங்களை அணிபவன் போலியாகவே இருக்கிறான். இவனைப் போன்ற முட்டாள்களை நம்பக்கூடாது. எல்லாரிடமும் அன்பை காட்டுங்கள். அப்படியானால் தான் இறைவனின் தன்மையையும், அருளையும் உணர முடியும். எல்லாருடனும் சமநோக்குடன் பழகுங்கள்" என்கிறார் ஆதிசங்கரர். இந்த அருமையான போதனைகளை தந்த அந்த மகானை அன்புடன் நினைவு கூர்வோம். நமசிவாய🙏 #🙏ஆன்மீகம்
🙏ஆன்மீகம் - 85856 இன்றைய ஆன்மீகம் சிந்தனை : ஜூன் 1 சனாதனம் உருவானது எப்படி தெரியுமா ?. சைவம் வைணவம் 3 காணாபத்யம் சாக்தம் சபதன தரமம் கவுமாரம் சவுரம் தி செல்லப்பா 85856 இன்றைய ஆன்மீகம் சிந்தனை : ஜூன் 1 சனாதனம் உருவானது எப்படி தெரியுமா ?. சைவம் வைணவம் 3 காணாபத்யம் சாக்தம் சபதன தரமம் கவுமாரம் சவுரம் தி செல்லப்பா - ShareChat