||📍இக்கோவில் திருநெல்வேலி மாவட்டம் கரைசுத்து உவரியில் உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி சிவன் கோவில் ஆகும்...✨️முதன்மைக் கடவுளான சிவன் இங்கு சுயம்புமூர்த்தியாக லிங்கவடிவில் இருப்பதால் இப்பெயர் பெற்றது...🪷இக்கோவில் இயற்கை எழில் கொஞ்சும் கடல்கரை அருகே அமைந்துள்ளது...🌊இது கடற்கரை அருகே அமைந்திருந்தாலும் இக்கோவிலை சுற்றி நான்கு நன்னீர் ஊற்றுகள் உள்ளது... இங்கு நடைபெறும் வைகாசி விசாக திருவிழாவில் மகர மீனுக்கு சுவாமி காட்சி தருதல் முக்கிய நிகழ்வாக கருதப்படுகின்றது...💫பக்தர்கள் தன் வேண்டுதலுக்காக கடற்கரை மண்ணை 11 அல்லது 41 ஓலைப்பெட்டியில் சுமந்து கொண்டுவந்து போட்டு வழிபடுதல் இங்கு விசேஷமான வழிபாடு ஆகும்...⚡ இங்கு மிகவும் சிறப்பு என்னவென்றால் மார்கழி மாதம் முழுவதும் (காலை 6.35-7.00 மணிக்குள்) சுமார் 10 நிமிடங்கள் சூரியஒளி மூலவர் மீது நேரடியாக விழும்...❤️🔥💥||
#🏞இயற்கை காட்சி #🏞நம்ம ஊர் சுற்றுலா #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #🤳மொபைல் போட்டோகிராபி #🏕இயற்கை ஓவியங்கள்
00:27

