#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ்
*வரலாற்றில் ஓர் ஏடு-05*
*ஸி(z)ன்னீரா (ரலி-அன்ஹா) அவர்கள்,* ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பெண்மணிகளில் ஒருவர்.
பனூ மக்ஸூமீ அல்லது பனூ அப்துத் தார் கோத்திரத்தார்களிடையே அடிமை ஊழியம் செய்து வந்தார்கள்.
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்காக கடும் துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். விரும்பிய போதெல்லாம் அபூஜஹ்ல் கொடுமை செய்து வந்தான்.
இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிற போது அவர்களுக்கு கண் பார்வை இல்லாமல் இருந்தது.
அப்போது மக்கா முஷ்ரிக்குகள் ஸி(z)ன்னீரா (ரலி) அவர்களிடம் வந்து, *"நீ லாத் உஸ்ஸாவை நிராகரித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதால் தான் லாத்தும் உஸ்ஸாவும் உம் கண்களை குருடாக்கி விட்டனர்"* என்றார்கள்.
அது கேட்ட ஸி(z)ன்னீரா (ரலி) அவர்கள், *"எனக்கு ஏற்பட்ட இந்த திடீர் பாதிப்பு வானில் உள்ளோனின் நாட்டமாகும். என் பார்வை மீண்டும் திருப்பித் தருவதற்கு என் இறைவன் மிகவும் ஆற்றல் உடையவன் ஆவான்"* என்றார்கள்.
மறுநாளே அவர்களுக்கு கண் பார்வை கிடைத்துவிட்டது. இந்தச் செய்தியை கேள்விப்பட்டு, பார்த்துச் சென்ற மக்கா முஷ்ரிக்குகள் *"சத்தியமாக! இது முஹம்மதின் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின்) சூனியம் தான்!"* என்று கூறினார்கள்.
*இறுதியில் அபூபக்கர் (ரலி) அவர்கள், அம்மையாரை விலைக்கு வாங்கி உரிமை விட்டார்கள்.*
(நூல்: உஸ்துல் காபா)
*زِنِّيْرَةُ الرومية*
زنيرة الرومية. كانت من السابقات إلى الإسلام، أسلمت في أول الإسلام، وعذبها المشركون. قيل: كانت مولاة بني مخزوم، فكان أبو جهل يعذبها. وقيل: كانت مولاة بني عَبْد الدار، فلما أسلمت عَمِيت، فقال المشركون: أعمتها اللات والعزى لكفرها بهما! فقالت: وما يدري اللات والعزى من يعَبْدهما، إنما هذا من السماء، وربي قادر على رد بصري، فأصبحت من الغد ورد الله بصرها، فقالت قريش: هذا من سحر مُحَمَّد. ولما رأى أبو بكر رضي الله عنه ما ينالها من العذاب، اشتراها فأعتقها، وهي أحد السبعة الذين أعتقهم أبو بكر.
(الكتب أسد الغابة - ابن الأثير - ج ٥ - الصفحة ٤٦٢)



