🌿 இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள். 07.07.2026 (செவ்வாய்) துயர்நிறை மறையுண்மைகள். முதலாவது. கெத்சமணித் தோட்டத்தில் ஆண்டவர் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து, இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில், "பேய்பிடித்துப் பேச்சிழந்த ஒருவரைச் சிலர் ஆண்டவர் இயேசுவிடம் கொண்டு வந்தனர். பேயை அவர் ஓட்டியதும் பேச இயலாத அவர் பேசினார்." என நாம் வாசித்தோம். தீய ஆவிகளின் பிடியில் சிக்குண்டு துன்புறும் மக்களை இறைவன் தொட்டுக் குணமாக்கிட வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம். இரண்டாவது. ஆண்டவர் இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து, இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில், "அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்." என நமதாண்டவர் இயேசு கிறிஸ்து கூறியதைக் கண்டோம். கத்தோலிக்கக் குடும்பங்களில் இறை அழைத்தல் பெருக வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். மூன்றாவது. ஆண்டவர் இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து, ஆண்டவர் இயேசுவின் திரு இரத்தத்திற்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட இந்த ஜூலை மாதத்தில் இயேசுவின் திரு இரத்தம் நம் அனைவரின் பாவங்களையும் சுத்திகரித்து நம்மைத் தூய்மையாக்க வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். நான்காவது. ஆண்டவர் இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து, இந்த ஆண்டு நமக்கு விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தேவையான நல்ல பருவ மழையை இறைவன் தந்தருள வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். ஐந்தாவது. ஆண்டவர் இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து, அந்தோணியாருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட செவ்வாய் கிழமையான இன்று குடும்பங்களில் தீய ஆவியின் தொல்லைகள் நீங்க வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். ஆமென் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #அன்னை வேளாங்கண்ணி மாதா,இயேசு ஆண்டவர்,புனித அந்தோணியார்,குழைந்தை இயேசு,இயேசு மரியாள் சூசை, #புனித அந்தோணியார்
101 likes
2 comments 104 shares

More like this