ரவிசங்கர் ராஜா, ஆரணி
2K views 2 months ago AI indicator
*ஸ்ரீபாத ஸப்ததி* புதிய தொடர் பதிவு! *ஸ்ரீபாத ஸப்ததி* *ஸ்லோகம்:15* ஸம்பிராந்திஸ்தவ தேவி ஸா விஜயதே மானாவனம்ரே சிவே த்வத் பாதாம்புருகப்ரஹாரமுதிதே மந்தம் ஸமுத்தாயினி ஸாக்ஷாராக ரஸாருணம் நிபதிதம் கங்காபயச்சீகரம் த்ருஷ்ட்வா சோணிதசங்கயா தரவிதா காந்தம் யதாலம்பதா: தேவியே! உனக்கும் ஸ்ரீபரமேஸ்வரனுக்கும் பொறாமையினால் கோபம் ஏற்பட்டு ஸ்ரீபரமேஸ்வரன் உன் ஸ்ரீபாதங்களில் தலை வணங்கும் போது உன் ஸ்ரீபாத கமலத்தை அவருடைய சிரஸின் மீது நீ வீழ்த்தி அதனால் அவர் சந்தோஷமடைந்து மெதுவாக தலையைத் தூக்கி எழுந்திருக்கிறார். அப்போது ஸ்ரீபரமேஸ்வரனுடைய சிரஸின் மீதுள்ள கங்கையின் சில ஜலத்துளிகள் கீழே விழுகின்றன. உன் ஸ்ரீபாதத்தின் ஸாக்ஷாரஸத்தின் செந்நிறம் அந்த ஜலத்துளிகளில் சேர்ந்து ரத்தம் போன்று தோன்றுகிறது. ரத்தாம் தானோ என்ற பயத்தில் மனங்கலங்கி நீ உன் மணாளனை ஆலிங்கனம் செய்து கொள்கிறாய். அப்போது உன் புத்தி மயக்கமானது வெற்றி பெறுகிறது.* * அதாவது புத்தி மயக்கம் வேறு எந்த கட்டத்திலும் ஏற்படாத உனக்கு இந்த ஒரு தடவை ஏற்பட்டு விட்டதே என்று புத்தி மயக்கத்திற்குக் கொண்டாட்டம் என்பது தாத்பரியம். மேற்கண்ட ஸ்ரீபாத ஸப்ததி ஸ்லோகம் 15ன் ஒலி வடிவ காணொளிக்காட்சி கீழே!👇👇🚩🕉🪷🙏🏼 #🙏அம்மன் துணை🔱 #மந்திரங்கள் #சுலோகம் மற்றும் மந்திரங்கள் #அம்மன் பக்தி பாடல்கள் #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐
6 likes
16 shares

More like this