ShareChat
click to see wallet page
search
#சர்வதேச_செவிலியர்_தினம் #மே_12 பொதுமக்களுக்கு செவிலியர்கள் (நர்ஸ்) ஆற்றி வரும் உன்னத தொண்டை உலகிற்கு உணர்த்தும் வகையில், சர்வதேச செவிலியர் தினம் (International Nurses Day ) ஆண்டுதோறும் மே 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. 1974-ம் ஆண்டு ஜனவரி மாதம் நவீன செவிலியர் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale) பிறந்த நாளான மே 12 ஆம் தேதி, சர்வதேச செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டுவருகிறது. இந்தத் தினத்தில் பிளாரன்ஸ் நைட்டிங்கேலை நினைவு கூறும் அதே நேரத்தில், உலகெங்கிலும் சேவை புரியும் செவிலியர்களின் மகத்தான பணிகளை போற்றுவது மிக அவசியம். புனிதமான தொழில்களில் முதன்மையானது செவிலியர் பணி. ஐ.சி.வார்டில், அபாயகட்டத்தில் உள்ள நோயாளிக்குக் கவனிப்பு; ஸ்பாஞ்சை வைத்து நோயாளிகளைக் குளிப்பாட்டுதல். காயங்களைச் சுத்தப்படுத்தி மருந்து போடுதல், கட்டுகள் போடுதல் அவர்களுக்கு உணவூட்டுதல் உள்பட பல வேலைகளை மிகுந்த அர்ப்பணிப்புடன் செய்பவர்கள் செவிலியர்கள் என்னும் நர்ஸ்கள்!. இதுபோல் மனம் கோணாது நோயாளிகளின் சேவையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் செவிலியரை இன்னொரு தாய் என்று சொல்வது சரியாக இருக்கும்!இந்த கொரோனா தொற்று காலத்தில் முதலாவது முன்கள பணியாளர்களாக தங்கள் உயிரையும் பணயம் வைத்து நோயாளிகளுக்கு சேவை செய்துவருகிறார்கள் அத்தகைய அர்ப்பணிப்புடன் பணியாற்றும் செவிலியர்களை இன்று போற்றுவோம். #life #lifes
life - 12 MAY 90% INTERNATIONAL DAY 12 MAY 90% INTERNATIONAL DAY - ShareChat