ShareChat
click to see wallet page
search
ஆ.ராசாவின் சரவெடி பத்திரிக்கையாளர் சந்திப்பு அபாரம்! எந்த ஒரு விவகாரத்தையும் அவர் அணுகும் முறை, அதை வெளிப்படுத்தும் விதம், தடங்கலின்றி பேசிச் செல்லும் வேகம்.. ஆகியவற்றை பார்க்கும் போது திமுகவிற்கு கிடைத்த ஒரு அரிய பொக்கிஷம் தான் ஆ.ராசா…! நேற்றைய தினம் விஜய் குறித்தும், இந்த ஆட்சி குறித்தும் அவர் வைத்த விமர்சனங்கள் சில ஏற்கத்தக்கவையே! தோல்வி குறித்து துவண்டிருந்த திமுக தொண்டர்களை சுறுசுறுப்படைய வைத்தது அவரது பேச்சு. இது போன்ற மடை திறந்த வெள்ளமென வார்த்தைகள் வந்து விழும் ஒரு நேர்காணலை இன்றைய திமுக தலைவர் ஸ்டாலினாலோ, உதயநிதியாலோ நினைத்துக் கூட பார்க்க முடியாது. இன்றைக்கு திமுகவை அதன் பழைய வீரியத்திற்கு மீட்டெடுக்க உண்மையிலேயே அதன் தலைமை விரும்பினால் ஆ.ராசா அவர்களை பொதுச் செயலாளர் ஆக்கலாம். ஏன், திமுகவின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராகவும் அவரை முன் மொழியதக்க ஆற்றல் கொண்டவரே அவர். ஏனென்றால் மிகப் பெரிய பூகம்பமாக எழுந்த 2ஜீ விவகாரத்தில் அவரிடத்தில் வேறு யார் இருந்தாலும் தடயமின்றி அழிந்திருப்பார்கள். ஆனால், ஆ.ராசாவோ தன்னந்தனியாக அதை எதிர்கொண்டு வென்று ஒரு பீனிக்ஸ் பறவை போல வெளி வந்தார். அமேசிங்! இந்த பேராற்றலுக்கு இணை சொல்ல இந்திய அளவில் கூட சமகாலத்தில் நான் பார்த்த அளவில் இன்னொருவரில்லை. மேலும், அவர் மத்திய அமைச்சராக இருந்த வகையில் டெல்லி அரசியல்வாதிகளை எப்படி டீல் பண்ணுவது என்பதிலும் கைதேர்ந்தவர். ஆகவே, சோனியா காந்தி செய்ததைப் போல – மன்மோகன் சிங்கை பிரதமராக்கி கட்சித் தலைவராக அவர் இருந்ததைப் போல - ஸ்டாலின் அவர்களும் யோசிக்க வேண்டும். தலைவராக ஸ்டாலின் அவர்களே இறுதி வரை தொடரட்டும். கட்சியின் அனைத்து சொத்து யாவற்றுக்கும் கூட அவர் உதயநிதியை வாரிசாக்கிக் கொள்ளட்டும். அதே சமயம் திமுக என்ற திராவிட இயக்கத்தை வலுப்படுத்த அந்த சித்தாந்தத்தை ஆழமாக உள்வாங்கிய ஆ.ராசாவுக்கு உரிய அங்கீகாரம் தந்தால், அந்தக் கட்சி உயிர்ப்போடு மீண்டும் தலையெடுக்கும். சாவித்திரி கண்ணன் #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - நம்பி நம்பி - ShareChat