ShareChat
click to see wallet page
search
viduthalai.in *கல்வியாளர் நெ.து.சுந்தரவடிவேலு நினைவு நாள் பதிவு* ( *12.4.1993* ) - நெ.து.சுந்தரவடிவேலு 12.10.1912இல் பிறந்தார். காஞ்சிபுரத்தையடுத்த நெய்யாடுபாக்கம் கிராமத்தில் பிறந்த இவரால் தமிழ்நாட்டில் பள்ளிக்கல் வித்துறையில் மாபெரும் புரட்சிகர மான திட்டங்கள் செயல்படுத்தப்பட் டன. கல்வி வள்ளல் காமராசர் முதல மைச்சராக இருந்தபோது அவரு டைய கருத்துகளுக்கு செயல்வடிவம் கொடுத்தவர். கல்வியாளர் நெ.து. சுந்தரவடிவேலு அரசின் கல்வி ஆலோசகராகவும், பொதுக்கல்வி இயக்குநராகவும் பல காலம் சிறப் பாகப் பணியாற்றியவர். பள்ளிக்கல்வி சிறந்தோங்கி விளங்கவும், சமுதாயத் தில் அடித்தட்டு மக்களின், ஒடுக்கப் பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்புக ளைச் சேர்ந்த கிராமப்புற பிள்ளைக ளுக்கு கல்வி பெற்றிட சமூக அக் கறையுடன் செயல்பட்டவர். தமிழ்நாட்டில் இலவசக்கல்வி, இலவச சீருடைத்திட்டங்கள், இலவச மதிய உணவுத்திட்டம் உள்ளிட்ட மாணவர்களுக்கான சமூக நலத் திட்டங்கள் இவர் பணியிலிருந்த போது நடைமுறைக்கு வந்தன. எல்லா ஊர்களிலும் தொடக்கப் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வி பெரு கியது. ஆயிரக்கணக்கான பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்தப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை எப்படிப் பணியமர்த் துவது என்ற கேள்வி எழுந்தது. இதற்கு அந்நாள் முதலமைச்சரும் பொதுக்கல்வி இயக்குநரும் இணைந்து எடுத்த முடிவின் காரண மாக தமிழ்நாட்டிலே படித்துவிட்டு வேலை கிடைக்காமல் துயருற்ற பலருக்கும் வேலை கிடைக்கச் செய் தது. ஆயிரக்கணக்கானோர் ஓராசிரி யர் பள்ளிகளுக்கு ஆசிரியர்களாகப் பணியமர்த்தப்பட்டனர். நெ.து.சுந்தரவடிவேலு, 1954 ஆம் ஆண்டு பொதுக்கல்வி இயக்குநராகப் பதவியேற்றபோது பொது நூலக இயக்குநராகவும் பொறுப்பு ஏற்றார். நூலகத்தின் தேவையை உணர்ந்து தமிழ்நாடு முழுவதும் 400-க்கும் மேலான கிளை நூலகங்களை ஏற்படுத்தினார் தமிழ்நாட்டில் சென்னைப் பல் கலைக்கழகத்தின் துணைவேந்தராக இரு முறை (1969 முதல் 1972 வரையும் 1973 முதல் 1975 வரையும்) பொறுப்பு வகித்தவர். பள்ளிப்படிப்புடன் நிறுத்திவிட்டுக் கல்லூரிப் படிப்பைத் தொடர முடியாமல் வேலைக்குச் செல்வோர் உயர்கல்வி பெறுவதற் காகக் கல்லூரிகளில் மாலை நேரக் கல்லூரிகளை அறிமுகப்படுத்தினார். கல்லூரி ஆசிரியர்களுக்கு மறு பயிற்சி எனப்படும் படிப்பைக் கொண்டு வந்தார். பெரியவர்களுக்காக 30 நூல் களை எழுதியுள்ளார். சிறுவர்களுக் காக 13 நூல்களை வள்ளுவர் வரிசை என்னும் தலைப்பில் எழுதி உள்ளார். “புரட்சியாளர் பெரியார்” எனும் தலைப்பில் தந்தை பெரியார் பற்றிய அரிய நூலொன்றையும் எழுதி வெளி யிட்டுள்ளார். அவருடைய வாழ்க்கை வரலாற்றை மூன்று தொகுதிகளாக எழுதி வெளியிட்டுள்ளார். தந்தை பெரியாரின் சீடரான இவர் கல்வியாளராக, பேச்சாளராக, எழுத்தாளராக, இலக்கிய ஆசிரியராக சமுதாயத்துக்கு தம்முடைய பங்க ளிப்பை வழங்கியவர் பத்மசிறீ முனை வர் நெ.து.சுந்தரவடிவேலு ஆவார். - ------------ *பதிவு* - *ஆ அ நாகராசன் ஆர் கே பேட்டை 631303* #வரலாற்றில் இன்று #வரலாற்றில் உண்மை தெரிந்துகொள்வோமா #இந்திய வரலாற்றில் இன்று
வரலாற்றில் இன்று - நெது சுந்தரவடிவேலு LIIOLI நெது சுந்தரவடிவேலு LIIOLI - ShareChat