#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
வேலூர் மாவட்டம், கொணவட்டம் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை அருகில் 32 வது வார்டு சார்பாக மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வர் சி.ஜோசப் விஜய் அவர்களின் 52 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம், எழுதுகோல், பென்சில் போன்றவை வழங்கப்பட்டது. மேலும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள். இதில் சிறப்பாக அழைப்பாளராக வேலூர் மாவட்ட செயலாளர் வேல்முருகன் மற்றும் ஜனனி சதீஷ்குமார் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சி ஆனது வட்டச் செயலாளர் வி.பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. மேலும் வேலூர் மாவட்ட கொள்கை பரப்பு அமைப்பாளர் ஜே.கிருஷ்ணமூர்த்தி, மற்றும் வேலூர் மேற்கு மாவட்ட பகுதி செயலாளர் எஸ்.வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சி ஏற்பாட்டினை வட்டச் செயலாளர் வி.பிரபாகரன் செய்திருந்தார்.


