அங்காளி
பார்த்து கொள்ளவாள்
பார்த்துக்கொண்டே உள்ளார்
சுடுகாட்டில் சிவன் ஏன்..? ¿
சிவன் பித்தனென்றும் சுடுகாட்டில் ஆடும் சடையன் என்றும் பலர் தானும் குழம்பி மற்றவரையும் குழப்பி மெய் உணராமல் பிதற்றுவர். அவர்களுக்கு மெய் உணர்த்தவே இந்த பதிவு!
சுடுகாடு:
உயிராகிய மெய், தான் தங்கிய கூடாகிய உடலை விட்டு பிரிந்த பின், அப்பயனற்ற கூட்டை நெருப்பு கொண்டு எரிக்கும் இடம் சுடுகாடு .
சுடுகாட்டில் உயிரின் நிலை
உயிர் உடல் என்னும் கூட்டில் இருக்கும் வரை, உயிரினம். உயிரற்ற உடல் பிணம் ( சவம் ) 50 – 60 ஆண்டு காலம் வாழ்ந்த கூடாகிய உடலை விட்டு உயிர் பிரியும் போது தான் இத்தனை ஆண்டுகள் இருந்த கூட்டில் மீண்டும் நுழைய முடியாமல் பரிதவிக்கும்...
(1 ஆண்டு வசித்தாலும் ஒரு வீட்டை விட்டு பிரியும் போது ஏற்படும் உணர்வு போல – 50 – 60 ஆண்டு காலம் இருந்த கூடு அல்லவா?)
தமக்கு என்றும் நிரந்தரம் என நினைத்த உறவுகள் அனைத்தும் உடலை எரித்துவிட்டு திரும்பிக் கூட பார்க்காமல் சென்றுவிட்டனர் . இன்புற சேர்த்த சொத்து அனைத்தும் தமக்கு இல்லை என்று மெய்யை உயிர் உணர்ந்து பரிதவிக்கும் போது மாபெரும் கருணையாளன் நம்பெருமான் ஈசன் கருணையுடன் உயிரை தன்னுள்ளே ஒடுக்கி அபயம் அளிக்கிறார்.
இதை உணர்த்தவே அப்பர் பெருமான்
திருஅங்கமாலை தேவாரத்தில்
‘உற்றார் ஆருளரோ – உயிர் கொண்டு போகும் பொழுது குற்றாலத் துறை கூத்தனல்லால் நமக்குற்றா ராருளரோ...! மிக தெளிவாக கூறியுள்ளார்.
யார் உதவியும் ஆறுதலும் கிட்டாது அல்லல்பட்டு பரிதவிக்கும் நேரத்தில் கருணையுடன் அடைக்கலம் தந்து அருளும் மாபெரும் கருணையை உணராமல் சுடுகாட்டில் ஆடும் கடவுள் என்று கூறுவது எவ்வளவு சிறுமை என்று உணருங்கள்.
சுடுகாட்டில் மட்டும் ஆடிக்கொண்டு இருக்கும் கடவுள் இல்லை அகிலத்தையே ஆட்டுவிக்கும் ஆண்டவன் நம் உயிரின் பரிதவிப்பை பொறுக்காமல் அந்த உயிருக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டி சுடுகாட்டிலும் எழுந்தருளி மாபெரும் கருணையோடு காக்கிறான் என்று உணர்த்தவே ஈசன் திருவருளால் இப்பதிவு.
ஓம் நமச்சிவாய ! 🌹🙏🌹
சிவசிவ.
#திருநாவுக்கரசு #சுவாமிகள் #தேவாரம்.
#திருப்பந்தனைநல்லூர்.
#ஆறாம் #திருமுறை #பதிகம்
#பாடல்
கடமன்னு களியானை யுரிவை போர்த்தார்
கானப்பேர் காதலார் காதல் செய்து
மடமன்னு மடியார்தம் மனத்தி னுள்ளார்
மானுரிதோல் மிசைத்தோளார் மங்கை காண
நடமன்னி யாடுவார் நாகம் பூண்டார்
நான்மறையோ டாறங்கம் நவின்ற நாவார்
படமன்னு திருமுடியார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.
#பொழிப்புரை
கானப்பேர் என்ற திருத்தலத்தை விரும்புபவரும் , உமாதேவி காண இடையறாது நடம் ஆடுபவரும் ஆகிய பந்தணை நல்லூர்ப் பெருமான் , மத யானைத் தோலைப் போர்த்தவர் . எம் பெருமான் அருளியவாறன்றித் தாமாக ஒன்றும் அறியாராகிய அடியவர் உள்ளத்தில் உகந்து நிலையாக இருப்பவர் . மான் தோலைத் தோளில் அணிந்து , நாகத்தைத் திருமேனியிற் பூண்டு , முடியிலும் பாம்பினைச் சூடி , நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் ஓது கின்ற நாவினை உடையவர் . அவர் பைங்கண் ஏறு ஊர்ந்து பலி ஏற்றவராவர் .
#திருச்சிற்றம்பலம்
சொன்ன ஓவ்வொரு வார்த்தைகள் உன்னை திரும்ப காண வரும் போது தெரியும்
செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு நல்லவர் போல் நடித்து வருகிறார் எல்லாத்தையும் தெய்வம் பார்த்து கொண்டு தான் இருக்கிறது தக்க சமயத்தில் அதற்கு உண்டான தண்டனை கண்முன்னே தந்துவிட்டார் தெய்வம் அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் எத்தனையோ பெரிய சகாப்தம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை அன்னதானம் செய்தலும் தீராது எத்தனை தீர்த்தில் குளித்தாலும் தீராது எத்தனை உதவிகள் செய்தாலும் தீராது எத்தனையோ யாகம் செய்தாலும் ஆலயங்களுக்கு சென்றாலும் தீராது எத்தனை முறை கங்கையில் நீராடினால் தீராது உனது பாவத்திற்கு பரிகாரம் இல்லை நிம்மதியும் மகிழ்ச்சியும் சந்தோஷம் குலம் இல்லாமல் போகும் ஏழ் ஏழு தலைமுறை சாகப்தம் இல்லாமல் போகும்
சிவவாக்கியம் 🔱🔱🔱
பாடல் எண்: 415
சென்றுசென் றிடந்தொறும் சிறந்தசெம்பொன் னம்பலம்
அன்றுமின்று நின்றதோ ரனாதியான தம்பலம்
என்றுமென்று மிருப்பதோ ருறுதியான வம்பல
மொன்றியொன்றி நின்றது ளொழிந்ததே சிவாயமே. -சிவவாக்கியர்
விளக்கம்;
ஆலயங்கள் இல்லாவிடினும் நாம் செல்லுமிடங்களில் எல்லாம் சிறந்த பொன்னம்பலமாக விளங்குவது கண்கள். அன்றும் இன்றும் எப்பொழுதும் இருக்கும் அநாதியான, உறுதியான ஆலயம். அதன் உள்ளே சென்று சோதியில் நினைவை ஒன்றித் தவம் செய்யவேண்டும். அச்சோதியில் ஒளிந்திருப்பது சிவாயமே.
ஐந்தெழுத்தின் மேன்மை🙏
திருமுறை 4 பதிகம் 94 பாடல் 5 திருப்பாதிரிப்புலியூர்
வைத்த பொருள் நமக்காம் என்று
சொல்லி மனத்தடைத்துச்
சித்தம் ஒருக்கிச் சிவாய
நமவென்று இருக்கினல்லால்
மொய்த்த கதிர்மதி போல்வார்
அவர்பா திரிப்புலியூர்
அத்த னருள்பெற லாமோ
அறிவிலாப் பேதைநெஞ்சே.
அறியாமையை உடைய மனமே !நமக்கு சேமவைப்பாக உள்ள பொருள் சிவபெருமானே என்று சொல்லி மனத்தில் தியானித்து மனத்தை ஒருவழிப்படுத்திச் சிவாய நம என்று திருவைந்தெழுத்தை எப்பொழுதும் ஓதிக் கொண்டிருந்தால் அல்லாது, திருப்பாதிரிப் புலியூரிலுள்ள தலைவனுடைய அருளைப் பெறுதல் இயலுமோ ?
வார்த்தைகளால் தினமும் ஒருவரை காவு வாங்கும் உன் நாக்கிற்கு தெரியாது....... கத்தி வெட்டிய காயம் ஆறிவிடும்.....ஆனால் வார்த்தை வெட்டிய மனம் அமைதியாக தினமும் ரத்தம் சிந்தும்......
பாம்பு கொத்திய,
முட்டைகளுக்காக,
நீதிகேட்டு போன,
குருவியின் மீது,
இச்சமுகம் போட்டது,
வழக்கு ஒன்று,
கூடுகட்ட குச்சிகள்,
திருடிய குற்றத்திற்காக.
தேவைக்கேற்ப தன்னை,
மாற்றிக் கொள்ள,
தெரியாத மனிதன்தான்,
இன்றளவிலும்,
துன்பப்பட்டு கொண்டு,
இருக்கின்றான்,
உடலாலும் மனதாலும்,
நித்தமும் தன்வாழ்வில்..
மனிதனின் கோபமும் சரி கடலின் புயலும் சரி....
ஒரே மாதிரி தான்
அவை அடங்கிய பிறகுதான்....
அடைந்த நஷ்டம் எவ்வளவு என்பது தெரியும்....
சந்தோசம் என்பது பிரச்சனைகள் இல்லாமல் வாழ்வது மட்டுமல்ல.....
எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் சமாளித்து வாழ்வதே.....
🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #தெய்வீக சிந்தனைகள் #ஓம் நமசிவாய



