More like this
- A.s#🙏ஞாயிறு பக்தி ஸ்பெஷல் #🙏🪔 இன்று ஆனி திருமஞ்சனம் 🪔🙏 #🔱🪔ஸ்ரீ அண்ணாமலையானே துணை🪔🔱 #🙏நமசிவாய ஓம்✨ #இனிய ஞாயிற்றுக்கிழமை காலை வணக்கம்1416
- ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️இன்று ஆனி மாத அமாவாசை. சிவன் வழிபாட்டிற்கு மிக உகந்த தினம். இந்த அமாவாசை தினத்தில் முன்னோர்களை வழிபட்டு, சிவனையும் வழிபட்டால் வாழ்க்கை சுபிட்சமாகும்.... அதே சமயம் மாதந்தோறும் அமாவாசை தினத்தில் பித்ரு காரியங்களைச் செய்பவர்கள், அமாவாசை தினங்களில் உங்கள் வீட்டில் மறந்தும் இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க. அமாவாசை தினத்தில் நாம் சரியாக செய்யாவிட்டாலும் கூட பரவாயில்லை ஆனால் தவறாக சில விஷயங்களை எல்லாம் செய்யவே செய்யாதீங்க. அது எதிர்மறையாக சென்றுவிடும். அமாவாசை தினத்தில் விரதம் இருந்து, படைத்து, எள் தண்ணீர் இறைப்பது நமது பித்ருக்களை திருப்திபடுத்தும். ஆனால் அமாவாசையன்று சில காரியங்களைச் செய்ய கூடாது என்பதும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. மாதத்தின் அனைத்து நாட்களுமே அதிகாலையில் வீட்டைச் சுத்தம் செய்து, வாசலில் கோலமிட்டு, விளக்கேற்றி வழிபடுவது சிறப்பான பலன்களை தரும். ஆனால் அமாவாசையன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது என்கின்றனர் பெரியோர்கள்..... அமாவாசை தினத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து காகங்களுக்கு அன்னமிட்ட பின் வாசலில் கோலமிடுவதில் தவறில்லை. அல்லது அன்றைய தினம் முழுவதுமே வாசலில் கோலம் போடாமல் இருக்கலாம்.... விநாயகருக்கு சதுர்த்தி. முருகருக்கு சஷ்டி. பெருமாளுக்கு ஏகாதசி. பைரவருக்கு அஷ்டமி. அம்பிகைக்கு பௌர்ணமி என்பதைப் போலவே பித்ருக்களுக்கு அமாவாசை. அதனால் தான் தினமும் இல்லாவிட்டாலும், அமாவாசை திதி அன்று மட்டுமாவது தான தருமங்களைச் செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அமாவாசையில் செய்கின்ற தர்ப்பணம் மற்றும் தானங்களால் முன்னோர்களின் தாகமும், பசியும் நிவர்த்தியாவதுடன் குலம் செழிக்கும். நம் இருப்பிடத்தைத் தேடி வரும் முன்னோர்கள் பசி, தாகம் தீர எள்ளு கலந்த நீரினால் தர்ப்பணம், சிராத்தம் செய்யும் போது, ஏற்றுக்கொண்டு நம்மை ஆசிர்வதிக்கிறார்கள்... அமாவாசையில் வாசலில் கோலம் போடுவது, பூஜையறையில் இருக்கும் மணி எழுப்பும் ஒலி, இரும்புப் பாத்திரத்தின் ஒலி இவற்றால் பித்ருக்களின் வருகை தடைபடும். இதனால் தர்ப்பணம் முடிந்து காகத்திற்கு அன்னமிடும் வரை அதாவது வீட்டுக்கு பித்ருக்கள் வந்து நம்மை ஆசிர்வதித்து செல்லும் வரை, வீட்டு வாசல் மற்றும் பூஜை அறையிலோ கோலம் போடுவதையும், மணியடித்து ஒலி எழுப்பி பூஜைகள் செய்வதையும் தவிர்க்க வேண்டும் என்கின்றனர்.... #🙏ஆன்மீகம் #🙏🪔 இன்று ஆனி திருமஞ்சனம் 🪔🙏 #🙏ஆனி அமாவாசை🌚 #ஆனி மாதம் அமாவாசை105
- ரவிசங்கர் ராஜா, ஆரணி*இன்று*(22-6-2026) *ஆனித்திருமஞ்சனம்* *தொடர்பான அரிய* *ஆன்மீகத்தகவல்கள்* சிவ பெருமானுக்கு ஆனித் திருமஞ்சனம் நடைபெறுவது ஏன் தெரியுமா? சிவபெருமான் திருவாதிரை நட்சத்திரத்திற்கு உரியவர். இந்த நட்சத்திரம் அதிக உஷ்ணத்தைத் தரும். மேலும் சிவன் ஆலகால விஷத்தை உண்டபோது அதை கண்டத்தில் நிறுத்தியதால் நீலகண்டனாகி அவர் தேகம் உஷ்ணத்தால் பாதிக்கப்பட்டது. மேலும், வெம்மையுள்ள சுடலையின் சூடான சாம்பலைத் திருமேனியில் தரித்து, எப்போதும் திருக்கரத்தில் அக்னியை ஏந்திக் கொண்டிருப்பதால் சிவபெருமான் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்படுகிறார். இந்த வெப்பத்தைத் தணிக்க வருடத்திற்கு ஆறுமுறை மிகச் சிறப்பாக அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன. இதில் ஆனித் திருமஞ்சனம் மாலை வேளையில் தேவர்களால் நடத்தப்படுகிறது. அதனையொட்டி சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உத்தராயண காலம். இந்தக் காலத்தில் சூரியன் வடக்கு நோக்கிப் பயணிக்கிறான். அடுத்து வருவது தட்சிணாயன காலம். அப்போது தன் பாதையை சூரியன் மாற்றிக்கொள்கிறான். கோடை முடிந்து மழைக்காலம் தொடங்கும் காலம் ஆரம்பம். இதையே "*ஆனி இலை* *அசங்க*' என்பார்கள். கடுமையான வெயிலின் தாக்கம் குறைந்து இதமான நாட்கள் தொடங்கும் மாதம் ஆனி. தேவர்களின் பகல்பொழுதின் கடைசி மாதம் ஆனி. இந்த மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று தேவர்கள் இறைவனுக்கு மாலை நேர பூஜை செய்வதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதனை ஆனித் திருமஞ்சனம் என்று சொல்வர். தேவர்களுக்கு வைகறை மார்கழி மாதம்; காலைப்பொழுது மாசி மாதம்; உச்சிக் காலம் சித்திரை; மாலைப்பொழுது ஆனி; இரவு ஆவணி; அர்த்த சாமம் புரட்டாசி என்பர். வைகறை பூஜை மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்திலும்; காலைச்சந்தி பூஜை மாசி மாத வளர்பிறை சதுர்த்தியிலும்; உச்சிக்கால பூஜை சித்திரை திருவோணத்திலும்; மாலை (சாயரட்சை) பூஜை ஆனி மாத உத்திர நட்சத்திரத்திலும்; இரண்டாம் கால பூஜை ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியிலும்; அர்த்தஜாம பூஜை புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியிலும் நடைபெறுகிறது. ஆனித் திருமஞ்சனத்தையொட்டி ஸ்ரீநடராஜப் பெருமான் எழுந்தருளியுள்ள அனைத்து கோவில்களிலும் ஆனி மாத உத்திர நட்சத்திரத்தன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. சில ஆலயங்களில் இந்த ஆனி மாத திருமஞ்சனத்தை விழாவாகவும் கொண்டாடுகிறார்கள். இது நடராஜப் பெருமானுக்குரிய நாளாகப் போற்றப்படுவதால், சிதம்பரம் திருத்தலத்தில் பத்து நாட்கள் விழா கொண்டாடப்படுகிறது. மேலும் திருவாரூர், உத்தரகோசமங்கை, ஆவுடையார் கோவில் போன்ற திருத்தலங்களிலும் ஆனித் திருமஞ்சனம் வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. "அநந்த நவரத்ன விலசத் கடக கிங்கிணி சலஞ்சல சலஞ்சல அரவம்! முந்த விதி ஹஸ்தக தமத்தல லய த்வநி திமித்திமி நர்த்தந பதம்! சகுந்தரத பர்ஹிரத நந்திமுக தந்திமுக ப்ருங்கிரிடிஸங்க நிகடம்! ஸநந்த ஸநக ப்ரமுக வந்தித பதம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜே!” கொம்பெழுத்தோ, காலெழுத்தோ இல்லாமல் பதஞ்சலி பதம் பாட, பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் தாளம் போட, நந்தி, தந்திமுகன், ப்ருங்கிமுனிவர், சனகாதிமுனிவர்கள், தேவாதிதேவர்கள் என அனைவரும் கூடி நின்று பார்க்க, சலங்கை “ஜல் ஜல்” என ஒலிக்க ஆனந்த நடனம் ஆடுகிறார் நடராஜன். தில்லையில் ஆனி உத்திரத்தன்று சூரிய உதய வேளையில், யானைகள் இழுக்கும் தேர்போல அமைக்கப்பட்டுள்ள ராஜசபையின் முன்மண்டபத்தில், ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கும் அன்னை சிவகாமசுந்தரிக்கும் வெகுசிறப்பாக ஆனித் திருமஞ்சனம் நடைபெறும். பின்னர், சர்வ அலங்காரத்துடன் ஸ்ரீநடராஜப் பெருமான் ராஜசபையில் அருள்பாலிக்கிறார். இதேபோல் திருவாரூரில் அருள்புரியும் ஸ்ரீதியாகராஜருக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். ஆனி மாதத்தில் ஒரே நாளில் சிதம்பரமும் திருவாரூரும் திருவிழாக் கோலம் காணும். அந்நாளில் நடராஜப் பெருமானுக்கும் தியாகராஜப் பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இருவரும் அன்று தேரில் பவனி வருவார்கள். திருவீதி உலா முடிந்ததும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள்வார்கள். ஆனித் திருமஞ்சனத்தின்போது அளிக்க வேண்டிய அபிஷேக ஆராதனைப் பொருட்களும்,அதன் பலனகளும் ஆனித் திருமஞ்சனத்தின்போது நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டால் பேறுகள் பல பெறலாம். அபிஷேகத்திற்கு பக்தர்கள் அளிக்கும் பொருட்களால் அவர்கள் குடும்பத்திற்கு நல்ல பலன் கிட்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. கங்கை தீர்த்தம் அளித்தால் நம் பாவங்கள் நசியும்; எண்ணெய் அளித்தால் சுகம் கிட்டும்; மாப்பொடி அளித்தல் கடனைப் போக்கும்; நெல்லி முள்ளி பொடி அளித்தால் நோய் நீங்கும்; பஞ்சகவ்யம் அளித்தால் மனதில் தூய்மை உண்டாகும்; இளநீர் அளித்தால் சுகமான வாழ்வு கிட்டும்; தேன் அளித்தால் மகிழ்ச்சி உண்டாகும்; பால் அளித்தால் ஆயுள் வளரும்; தயிர் அளித்தால் குழந்தைச் செல்வம் கிட்டும்; நெய் அளித்தால் மோட்சம் கிடைக்கும்; கரும்புச்சாறு அளித்தால் உடல்பிணியைப் போக்கும்; சந்தனம் அளித்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்; பன்னீர் அளித்தால் பணத் தட்டுப்பாடு இருக்காது; பஞ்சாமிர்தம் தயாரிக்க பழங்கள் அளித்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் என்று ஞான நூல்கள் சொல்கின்றன. ஆனித்திருமஞ்சன சிவ வழிபாட்டின் பலன்: பொதுவாக சிவபெருமானை வழிபட்டால் நமக்கு நல்லறிவு கிட்டும். இதனால் எது நல்லது- எது தவறு என்பதைப் பகுத்தறியலாம். உடலில் பதட்டம் இருக்காது. அமைதியான வாழ்வுக்கும் முன்னேற்றத்துக்கும் சிவதரிசனம் சிறந்ததாகப் போற்றப்படுகிறது. அதுவும் ஆனித் திருமஞ்சனம் போன்ற விழா சமயங்களில் கோவிலுக்குச் சென்று அபிஷேக, ஆராதனைகளில் கலந்துகொண்டால் அஷ்ட ஐஸ்வர்யங்கள் நிறைந்து பெருகும் என்று அருளாளர்கள் சொல்கிறார்கள். 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #ஓம் நமசிவாய #🙏🪔 இன்று ஆனி திருமஞ்சனம் 🪔🙏 #🙏ஆன்மீகம் #தெய்வீக சிந்தனைகள்715
- ரவிசங்கர் ராஜா, ஆரணிஇன்று(22-6-2026) ஆனித்திருமஞ்சனம் சிறப்பு பதிவு! மஞ்சனம் என்றால் நீராடல் என்பது பொருள். இறைவனின் நீராடலைத் திருமஞ்சனம் என்று குறிப்பிடுவர். ஒவ்வொரு ஆண்டும் ஆனிமாத உத்திர நட்சத்திர நாளில் இவ்விழா நடத்தப்படுகிறது. இதையொட்டி முக்கிய சிவாலயங்களில் பத்துநாள் விழா நடக்கும். ஒன்பதாம் நாள் விநாயகர், சுப்பிரமணியர், நடராஜர், சிவகாமி,சண்டிகேஸ்வரர் தேர்களில் வலம் வருவர். பத்தாம் நாள் நடராஜருக்கு திருமஞ்சனம் என்னும் சிறப்பு நீராடல் விழா நடக்கும். அபிஷேகத்துக்குப் பின் ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு பூஜை நடைபெறும். உச்சிவேளையில் (மதியம்) நடராஜர் ஆனந்த நடனம் ஆடியபடியே சித்சபையில் எழுந்தருள்வார். அவருடன் சிவகாமி அம்மையும் இருப்பாள். பின் மகாதீபாராதனை நடக்கும். அன்று இரவு கொடி இறக்கப்படும். உதயத்திற்கு முன்பே. தினமும் நடைபெறும் பூஜைக்கு நித்தியம் என்றும், விசேஷ கால பூஜைக்கு நைமித்திகம் என்றும் பெயர். நித்திய பூஜையில் உண்டாகும் குறைகள் நைமித்திக பூஜையில் நீங்குவதாக ஐதீகம். நடராஜப்பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறுமுறை விசேஷ அபிஷேகம் நடக்கும். இதில் இரண்டு அபிஷேகம் திருவிழாவாக நடத்தப்படுகிறது. அவை மார்கழி திருவாதிரை, ஆனி உத்திர திருமஞ்சனம். இந்த இரு நாட்களிலும் சூரியோதயத்திற்கு முன்பே நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறும். நடராஜருக்கு ஆனி உத்திர நாளில் அபிஷேகம் நடைபெற்றஆனி உத்திர திருமஞ்சனம் "தோடுடைய செவி என் விடையேறியோர் தூவெண்மதி சூடி"என்ற பாடல் பின்னணியில் ஒலிக்கும் காணொளிக்காட்சி உங்களுக்காக கீழே!👇🏻🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #ஓம் நமசிவாய #🙏🪔 இன்று ஆனி திருமஞ்சனம் 🪔🙏 #🙇♀️பக்தி வீடியோஸ்🛐1914
- ரவிசங்கர் ராஜா, ஆரணி*ஆனி திருமஞ்சனமும்* *பெருமழையும்* நன்றி:ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன் அவர்களின் முகநூல் பக்கத்தில் படித்த நகல் பதிவு! இன்று(22-6-2026) ஆனி திருமஞ்சனம். நம் முன்னோர்கள் காலத்தையும், கோள்களின் நகர்வையும் வைத்து இயற்கையுடன் இணைத்துப் பார்த்த அற்புதம் இந்த ஆனி திருமஞ்சனம். சித்திரை மாதம் முதல் வெயில் கொளுத்தி எடுக்கும் இந்த வேளையில், "இனி எப்போ மழை வரும்?" என்ற கேள்விக்கான விடையே ஆனி திருமஞ்சனம் தான். ஜோதிடம், வானியல் மற்றும் ஆன்மீகம் மூன்றும் ஒன்றோடொன்று கலந்த அதிசயத்தை இந்த 2026ம் வருடம் ஜூன் 22ஆம் தேதி (திங்கள் கிழமை) காணவிருக்கிறோம். இதன் பின்னணி என்ன தெரியுமா? வாருங்கள் பார்க்கலாம். விண்மீன்களின் சங்கமம் வானில் உத்திர பல்குனி நட்சத்திரம் தெரியும் நாளே ஆனி திருமஞ்சனம் ஆகும். இந்த ஆனி திருமஞ்சனம் நாளின் சிறப்பம்சம் என்னவென்றால், வானில் உத்திரம் தெரியும் அதே நேரத்தில், சூரிய பகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் சஞ்சரித்து கொண்டிருப்பார். சூரியனும் சிவனும் சூரியன் என்பது நம் ஆன்மாவின் ஒளியான சிவபெருமானைக் குறிக்கும். சிவபெருமானை அதிதேவதையாகக் கொண்ட நட்சத்திரமே திருவாதிரை. இங்கே ஒரு அழகான தமிழ்ச் சொல் விளையாட்டு உள்ளது. "திரு ஆதிரை" என்றால் என்ன பொருள்? "நீர்த்துளி" என்பதே அதன் நேரடிப் பொருளாகும். அதாவது, சூரியன் மிதுன ராசியில் நீர்த்துளியைக் குறிக்கும் திருவாதிரை நட்சத்திரத்தில் பயணிக்கும் காலமே இந்த ஆனித் திருமஞ்சன நாளாகும். இதனால்தான் ஆனி திருமஞ்சன நாளன்று தில்லை நடராஜருக்கு மிகச் சிறப்பான சல்லடை அபிஷேகம் நடைபெறுகிறது. சிவபெருமானுக்கு ஆனி திருமஞ்சன நாளில் நடைபெறும் சல்லடை அபிஷேகத்தின் பின்னால் உள்ள அறிவியல் . வெயில் உச்சத்தில் இருக்க, சுட்டெரிக்கும் சூரியனை நீர்த்துளியாகிய திருவாதிரையில் நிலை கொள்ளச் செய்து, சல்லடையின் மூலம் மெல்லிய துளிகளாக நீர் விழச் செய்யும் இந்த தத்துவம், வெப்பத்தைத் தணித்து மழையை வரவழைக்கும் பிரபஞ்ச பிரார்த்தனையே ஆகும். ஆனி திருமஞ்சனம் நாளிலிருந்து நீர்த்துளி ஆதாவது மழைத்துளி பூமியில் வர ஆரம்பிக்கும். அன்றிலிருந்து தமிழகத்திற்கு மழையை எதிர்பார்க்கலாம். அன்றிலிருந்து 14 நாட்களுக்குள், கடலில் காற்றழுத்தம் அல்லது பல இடங்களில் வெப்ப சலனம் உண்டாகி மழை தரும். ஆனி திருமஞ்சன நாளில் தொடங்கி, தமிழகத்திற்கு படிப்படியாக மழை கிடைக்கும். முக்கியமாக, இந்த ஆனி திருமஞ்சன நாளிலிருந்து 14 நாட்களுக்குள் கடலில் காற்றழுத்தம் உண்டாகி, அல்லது உள்மாவட்டங்களில் வெப்பச் சலனம் அதிகரித்து, கோடை மழை பொழிவதற்கான வாய்ப்புகள் வலுவடைகின்றன. நம் வேளாண் முன்னோர்கள் இதைத்தான் சொல்லி வைத்துள்ளனர். இந்த ஜூன் 22ஆம் தேதி, அம்பலத்தில் ஆடும் அண்ணலின் திருநடனத்தையும், விரைவில் சொட்டவிருக்கும் மழைத் துளிகளையும் மனதில் இருத்தி வழிபடுவோம். இயற்கையின் நியதியை வணங்குவோம். 🚩🪷🕉🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #ஓம் நமசிவாய #🙏🪔 இன்று ஆனி திருமஞ்சனம் 🪔🙏 #🙏ஆன்மீகம் #தெய்வீக சிந்தனைகள்4220
- Sriee Tc#🙏🪔 இன்று ஆனி திருமஞ்சனம் 🪔🙏 #🐚 இன்று ஆனி திருமஞ்சனம் 🐚 #ஆனி திருமஞ்சனம் ஓம் தில்லை அம்பல நடராஜா போற்றி போற்றி #ஆனி திருமஞ்சனம் கொடியேற்றம்🙏 #இன்று ஆனி உத்திரம் ஆனி திருமஞ்சனம்814
- Sriee Tc#🙏🪔 இன்று ஆனி திருமஞ்சனம் 🪔🙏 #🐚 இன்று ஆனி திருமஞ்சனம் 🐚 #ஆனி திருமஞ்சனம் கொடியேற்றம்🙏 #ஆனி திருமஞ்சனம் ஓம் தில்லை அம்பல நடராஜா போற்றி போற்றி #இன்று ஆனி உத்திரம் ஆனி திருமஞ்சனம்1611
- Sriee Tc#🙏🪔 இன்று ஆனி திருமஞ்சனம் 🪔🙏 #🐚 இன்று ஆனி திருமஞ்சனம் 🐚 #ஆனி திருமஞ்சனம் ஓம் தில்லை அம்பல நடராஜா போற்றி போற்றி #ஆனி திருமஞ்சனம் கொடியேற்றம்🙏 #இன்று ஆனி உத்திரம் ஆனி திருமஞ்சனம்1119
- சிவன்மகள் 😍VJ😍#நடராஜ பெருமான் 🙏🕉️ #திருச்சிற்றம்பலம் #🙏🪔 இன்று ஆனி திருமஞ்சனம் 🪔🙏204260