🙏🪔 இன்று ஆனி திருமஞ்சனம் 🪔🙏

59 Posts • 361K views
இன்று ஆனி மாத அமாவாசை. சிவன் வழிபாட்டிற்கு மிக உகந்த தினம். இந்த அமாவாசை தினத்தில் முன்னோர்களை வழிபட்டு, சிவனையும் வழிபட்டால் வாழ்க்கை சுபிட்சமாகும்.... அதே சமயம் மாதந்தோறும் அமாவாசை தினத்தில் பித்ரு காரியங்களைச் செய்பவர்கள், அமாவாசை தினங்களில் உங்கள் வீட்டில் மறந்தும் இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க. அமாவாசை தினத்தில் நாம் சரியாக செய்யாவிட்டாலும் கூட பரவாயில்லை ஆனால் தவறாக சில விஷயங்களை எல்லாம் செய்யவே செய்யாதீங்க. அது எதிர்மறையாக சென்றுவிடும். அமாவாசை தினத்தில் விரதம் இருந்து, படைத்து, எள் தண்ணீர் இறைப்பது நமது பித்ருக்களை திருப்திபடுத்தும். ஆனால் அமாவாசையன்று சில காரியங்களைச் செய்ய கூடாது என்பதும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. மாதத்தின் அனைத்து நாட்களுமே அதிகாலையில் வீட்டைச் சுத்தம் செய்து, வாசலில் கோலமிட்டு, விளக்கேற்றி வழிபடுவது சிறப்பான பலன்களை தரும். ஆனால் அமாவாசையன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது என்கின்றனர் பெரியோர்கள்..... அமாவாசை தினத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து காகங்களுக்கு அன்னமிட்ட பின் வாசலில் கோலமிடுவதில் தவறில்லை. அல்லது அன்றைய தினம் முழுவதுமே வாசலில் கோலம் போடாமல் இருக்கலாம்.... விநாயகருக்கு சதுர்த்தி. முருகருக்கு சஷ்டி. பெருமாளுக்கு ஏகாதசி. பைரவருக்கு அஷ்டமி. அம்பிகைக்கு பௌர்ணமி என்பதைப் போலவே பித்ருக்களுக்கு அமாவாசை. அதனால் தான் தினமும் இல்லாவிட்டாலும், அமாவாசை திதி அன்று மட்டுமாவது தான தருமங்களைச் செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அமாவாசையில் செய்கின்ற தர்ப்பணம் மற்றும் தானங்களால் முன்னோர்களின் தாகமும், பசியும் நிவர்த்தியாவதுடன் குலம் செழிக்கும். நம் இருப்பிடத்தைத் தேடி வரும் முன்னோர்கள் பசி, தாகம் தீர எள்ளு கலந்த நீரினால் தர்ப்பணம், சிராத்தம் செய்யும் போது, ஏற்றுக்கொண்டு நம்மை ஆசிர்வதிக்கிறார்கள்... அமாவாசையில் வாசலில் கோலம் போடுவது, பூஜையறையில் இருக்கும் மணி எழுப்பும் ஒலி, இரும்புப் பாத்திரத்தின் ஒலி இவற்றால் பித்ருக்களின் வருகை தடைபடும். இதனால் தர்ப்பணம் முடிந்து காகத்திற்கு அன்னமிடும் வரை அதாவது வீட்டுக்கு பித்ருக்கள் வந்து நம்மை ஆசிர்வதித்து செல்லும் வரை, வீட்டு வாசல் மற்றும் பூஜை அறையிலோ கோலம் போடுவதையும், மணியடித்து ஒலி எழுப்பி பூஜைகள் செய்வதையும் தவிர்க்க வேண்டும் என்கின்றனர்.... #🙏ஆன்மீகம் #🙏🪔 இன்று ஆனி திருமஞ்சனம் 🪔🙏 #🙏ஆனி அமாவாசை🌚 #ஆனி மாதம் அமாவாசை
5 likes
10 shares
ரவிசங்கர் ராஜா, ஆரணி
2K views 1 months ago AI indicator
இன்று(22-6-2026) ஆனித்திருமஞ்சனம் சிறப்பு பதிவு! மஞ்சனம் என்றால் நீராடல் என்பது பொருள். இறைவனின் நீராடலைத் திருமஞ்சனம் என்று குறிப்பிடுவர். ஒவ்வொரு ஆண்டும் ஆனிமாத உத்திர நட்சத்திர நாளில் இவ்விழா நடத்தப்படுகிறது. இதையொட்டி முக்கிய சிவாலயங்களில் பத்துநாள் விழா நடக்கும். ஒன்பதாம் நாள் விநாயகர், சுப்பிரமணியர், நடராஜர், சிவகாமி,சண்டிகேஸ்வரர் தேர்களில் வலம் வருவர். பத்தாம் நாள் நடராஜருக்கு திருமஞ்சனம் என்னும் சிறப்பு நீராடல் விழா நடக்கும். அபிஷேகத்துக்குப் பின் ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு பூஜை நடைபெறும். உச்சிவேளையில் (மதியம்) நடராஜர் ஆனந்த நடனம் ஆடியபடியே சித்சபையில் எழுந்தருள்வார். அவருடன் சிவகாமி அம்மையும் இருப்பாள். பின் மகாதீபாராதனை நடக்கும். அன்று இரவு கொடி இறக்கப்படும். உதயத்திற்கு முன்பே. தினமும் நடைபெறும் பூஜைக்கு நித்தியம் என்றும், விசேஷ கால பூஜைக்கு நைமித்திகம் என்றும் பெயர். நித்திய பூஜையில் உண்டாகும் குறைகள் நைமித்திக பூஜையில் நீங்குவதாக ஐதீகம். நடராஜப்பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறுமுறை விசேஷ அபிஷேகம் நடக்கும். இதில் இரண்டு அபிஷேகம் திருவிழாவாக நடத்தப்படுகிறது. அவை மார்கழி திருவாதிரை, ஆனி உத்திர திருமஞ்சனம். இந்த இரு நாட்களிலும் சூரியோதயத்திற்கு முன்பே நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறும். நடராஜருக்கு ஆனி உத்திர நாளில் அபிஷேகம் நடைபெற்றஆனி உத்திர திருமஞ்சனம் "தோடுடைய செவி என் விடையேறியோர் தூவெண்மதி சூடி"என்ற பாடல் பின்னணியில் ஒலிக்கும் காணொளிக்காட்சி உங்களுக்காக கீழே!👇🏻🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #ஓம் நமசிவாய #🙏🪔 இன்று ஆனி திருமஞ்சனம் 🪔🙏 #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐
14 likes
19 shares
ரவிசங்கர் ராஜா, ஆரணி
3K views 1 months ago AI indicator
*ஆனி திருமஞ்சனமும்* *பெருமழையும்* நன்றி:ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன் அவர்களின் முகநூல் பக்கத்தில் படித்த நகல் பதிவு! இன்று(22-6-2026) ஆனி திருமஞ்சனம். நம் முன்னோர்கள் காலத்தையும், கோள்களின் நகர்வையும் வைத்து இயற்கையுடன் இணைத்துப் பார்த்த அற்புதம் இந்த ஆனி திருமஞ்சனம். சித்திரை மாதம் முதல் வெயில் கொளுத்தி எடுக்கும் இந்த வேளையில், "இனி எப்போ மழை வரும்?" என்ற கேள்விக்கான விடையே ஆனி திருமஞ்சனம் தான். ஜோதிடம், வானியல் மற்றும் ஆன்மீகம் மூன்றும் ஒன்றோடொன்று கலந்த அதிசயத்தை இந்த 2026ம் வருடம் ஜூன் 22ஆம் தேதி (திங்கள் கிழமை) காணவிருக்கிறோம். இதன் பின்னணி என்ன தெரியுமா? வாருங்கள் பார்க்கலாம். விண்மீன்களின் சங்கமம் வானில் உத்திர பல்குனி நட்சத்திரம் தெரியும் நாளே ஆனி திருமஞ்சனம் ஆகும். இந்த ஆனி திருமஞ்சனம் நாளின் சிறப்பம்சம் என்னவென்றால், வானில் உத்திரம் தெரியும் அதே நேரத்தில், சூரிய பகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் சஞ்சரித்து கொண்டிருப்பார். சூரியனும் சிவனும் சூரியன் என்பது நம் ஆன்மாவின் ஒளியான சிவபெருமானைக் குறிக்கும். சிவபெருமானை அதிதேவதையாகக் கொண்ட நட்சத்திரமே திருவாதிரை. இங்கே ஒரு அழகான தமிழ்ச் சொல் விளையாட்டு உள்ளது. "திரு ஆதிரை" என்றால் என்ன பொருள்? "நீர்த்துளி" என்பதே அதன் நேரடிப் பொருளாகும். அதாவது, சூரியன் மிதுன ராசியில் நீர்த்துளியைக் குறிக்கும் திருவாதிரை நட்சத்திரத்தில் பயணிக்கும் காலமே இந்த ஆனித் திருமஞ்சன நாளாகும். இதனால்தான் ஆனி திருமஞ்சன நாளன்று தில்லை நடராஜருக்கு மிகச் சிறப்பான சல்லடை அபிஷேகம் நடைபெறுகிறது. சிவபெருமானுக்கு ஆனி திருமஞ்சன நாளில் நடைபெறும் சல்லடை அபிஷேகத்தின் பின்னால் உள்ள அறிவியல் . வெயில் உச்சத்தில் இருக்க, சுட்டெரிக்கும் சூரியனை நீர்த்துளியாகிய திருவாதிரையில் நிலை கொள்ளச் செய்து, சல்லடையின் மூலம் மெல்லிய துளிகளாக நீர் விழச் செய்யும் இந்த தத்துவம், வெப்பத்தைத் தணித்து மழையை வரவழைக்கும் பிரபஞ்ச பிரார்த்தனையே ஆகும். ஆனி திருமஞ்சனம் நாளிலிருந்து நீர்த்துளி ஆதாவது மழைத்துளி பூமியில் வர ஆரம்பிக்கும். அன்றிலிருந்து தமிழகத்திற்கு மழையை எதிர்பார்க்கலாம். அன்றிலிருந்து 14 நாட்களுக்குள், கடலில் காற்றழுத்தம் அல்லது பல இடங்களில் வெப்ப சலனம் உண்டாகி மழை தரும். ஆனி திருமஞ்சன நாளில் தொடங்கி, தமிழகத்திற்கு படிப்படியாக மழை கிடைக்கும். முக்கியமாக, இந்த ஆனி திருமஞ்சன நாளிலிருந்து 14 நாட்களுக்குள் கடலில் காற்றழுத்தம் உண்டாகி, அல்லது உள்மாவட்டங்களில் வெப்பச் சலனம் அதிகரித்து, கோடை மழை பொழிவதற்கான வாய்ப்புகள் வலுவடைகின்றன. நம் வேளாண் முன்னோர்கள் இதைத்தான் சொல்லி வைத்துள்ளனர். இந்த ஜூன் 22ஆம் தேதி, அம்பலத்தில் ஆடும் அண்ணலின் திருநடனத்தையும், விரைவில் சொட்டவிருக்கும் மழைத் துளிகளையும் மனதில் இருத்தி வழிபடுவோம். இயற்கையின் நியதியை வணங்குவோம். 🚩🪷🕉🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #ஓம் நமசிவாய #🙏🪔 இன்று ஆனி திருமஞ்சனம் 🪔🙏 #🙏ஆன்மீகம் #தெய்வீக சிந்தனைகள்
20 likes
42 shares