ShareChat
click to see wallet page
search
#பத்திஸ்டேட்ஸ் *🙏 * மாங்காடு காமாட்சியம்மன்* ஆலயம் ஓர் அற்புதமான திருத்தலமாகும். வேண்டும் வரங்களை தரும் தாயாகவும், திருமண வரம் அருளும் தெய்வமாகவும் அன்னை காமாட்சி இங்கே அருள்பாலிக்கிறாள். முற்காலத்தில் இங்கே மாமரங்கள் நிறைந்த மாமரக்காடாக இத்தலம் விளங்கியமையால் #மாங்காடு என்னும் பெயரை இத்தலம் பெற்றது. அன்னை சக்தி, சிவபெருமானுடன் மீண்டும் இணைவதற்காக தவமிருந்த தலம் இந்த "மாங்காடு திருத்தலம்". கயிலை மலையில் இருந்த போது, பார்வதி, சிவபெருமானின் கண்ணை விளையாட்டாக மூடியதால் உலகமே இருண்டது. இதனால் கோபமடைந்த சிவபெருமான், சக்தியைப் பூமிக்குச் சென்று தவம் புரிய கூறினார். அன்னை பார்வதி மாங்காடு வந்து நெருப்பின் மீது தவமிருந்தாள். மாங்காட்டிலே காமாட்சியாய் அவதரித்த அன்னை பார்வதி தேவி, ஈஸ்வரனை வேண்டி நீண்ட காலங்கள் காத்திருந்தாள். சிவபெருமானை உடனே காண வேண்டும் என்று ஐந்து குண்டங்களில் அக்னி வளர்த்து நடு குண்டத்தில் ஊசி முனையில் ஒற்றைக் காலில் சிவனாரை நோக்கிக் கடுந்தவம் புரிந்தாள் சக்தி தேவி. இதனால் அம்மை இத்தலத்திலே #தபசு_காமாட்சி. என்று அழைக்கப்படுகின்றாள். மாங்காட்டில் கடுந்தவம் செய்து கொண்டிருந்தப் பார்வதி தேவியின் மீது கருணை கொண்ட சிவபெருமான், அம்மைக்கு அருள் செய்ய வந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே அதே தலத்தில் தன்னை வழிபஞ வந்த சுக்ராச்சாரியாருக்கு முதலில் சிவனார் காட்சி தந்தார். அதோடு, அன்னையிடம் அசரீரியாக, காஞ்சிக்கு செல்லும்படியும், அங்கு வந்து மணம் புரிந்து கொள்வதாகவும் கூறினார். தவத்தில் ஆழ்ந்திருந்த அன்னை பார்வதிதேவி, சிவனாரின் சொல்லைக் கேட்டு, அவரை அடைய காஞ்சி மாநகருக்கு சென்றாள். அங்கு மணலால் சிவலிங்கம் அமைத்து வழிபாடு செய்து வந்தாள். அப்போது கம்பாநதியை பெருகிவரச் செய்து, பங்குனி உத்திர நன்னாளில் அம்மையை மணம் செய்தருளினார் சிவபெருமான். சிவபெருமானை மணந்து கொள்ளும் ஆர்வத்தில் ஏற்பட்ட அவசரத்தால், தான் தவத்திற்காக வளர்த்த குண்டங்களை அணைக்காமல் மாங்காட்டில் இருந்து காஞ்சி சென்று விட்டாள் அன்னை. அதனால் அந்தத் தீயின் வெப்பம் தாங்காமல் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த மக்கள் தவித்தனர். உயிரினங்கள் துன்பத்தில் துவண்டன. பார்வதி தேவியார் இந்த இடத்தை விட்டு சென்றாலும், நெருப்பு மட்டும் அணையவில்லை. #ஆதிசங்கரர் இங்கு வந்து #அர்த்தமேரு_சக்கரத்தை நிறுவினார். இதன் மூலம் மாங்காடு குளிர்ந்தது. இக்கோயில் சோழர் காலக் கட்டிடக்கலையை எடுத்துக் காட்டுகிறது. தற்பொழுது இராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. நுழைவு வாசலுக்கு அருகே விநாயகர் சிலை உள்ளது. கோவிலின் நடுவில் "அர்த்த மேரு மகா சக்கரம்" உள்ளது. இங்கு மாங்காடு #அன்னை_காமாட்சி வீற்றிருக்கிறாள். செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் இந்தக் கோவிலில் விசேஷ நாட்கள் ஆகும் பக்தர் கூட்டம் பெருகும் நாட்களாகும். #சுக்ரன்_வழிபட்ட_தலம் என்பதால், திருமணத்தடை, குழந்தைப் பேறு ஆகியவற்றுக்கு இந்த மாங்காட்டிற்கு வந்து வழிபடும் பக்தர்கள் ஏராளம். #ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு வளையல் சாத்தி, வழிபாடுகள் செய்வது இங்கு மிகவும் விசேஷமாகும். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மற்றும் பிரதி மாதம் பௌர்ணமி நாளில் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் இங்கே நடைபெறுகிறது. மாங்காடு காமாட்சி அம்மனுக்கு ஆறு வாரங்கள் தொடர்ந்து இரண்டு எலுமிச்சைப் பழங்கள் வாங்கி வந்து அர்ச்சனை செய்து வழிபட்டால், நினைத்த காரியம் நிறைவேறும் என்பதே பக்தர்களின் நம்பிக்கை. இங்கு நேர்த்திக்கடனாகப் பக்தர்கள் அம்பாளுக்குப் புடவையைச் சார்த்தி வழிபடுகிறார்கள். மாங்காடு திருக்கோவிலில் ஸ்ரீசக்கரத்திற்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. இதற்கு செய்யப்படும் #குங்கும_அர்ச்சனை மிகவும் விசேஷமானது. பஞ்சலோகத்தினால் ஆன ஆதி காமாட்சி அம்மனுக்கு அபிஷேக அலங்காரங்கள் சிறப்பாக செய்யப்படுகின்றன. இங்கு தல விருட்சமாக #மாமரம் உள்ளது. சிவனாருக்கே வல்லமை அளிக்கும் அன்னையை மகேஸ்வரியே! பிரபஞ்ச நாயகி நாயகியே! ஆதிபராசக்தியே! சிவனாருக்கே வல்லமைருளும் ஆதிசக்தியே! மாங்காடு கருமாரியம்மா! காத்தருள்வாயே அனைவரையும். #ஓம்சக்தி_ ஜெயசக்தி. 🙏🙏🙏🙏🙏
பத்திஸ்டேட்ஸ் - ShareChat