ஈரானின் புதிய சமாதானத் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்துள்ள நிலையில், பிராந்தியத்தில் பதற்றம் மீண்டும் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
அமெரிக்காவின் அச்சுறுத்தும் அணுகுமுறை மாறாத வரை அமைதி சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ள ஈரான், தனது ராணுவம் எந்தவொரு தாக்குதலையும் எதிர்கொள்ள முழு தயார் நிலையில் இருப்பதாகக் கூறியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் மற்றும் பொருளாதாரத் தடைகளால் ஏற்கனவே ஸ்தம்பித்துள்ள சர்வதேசச் சூழலில், இந்த அறிவிப்பு உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. #🏏எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்😍


