ShareChat
click to see wallet page
search
இன்றைய வெளிப்படுத்தின விசேஷ தியானம் : 01/07/2026 வெளிப்படுத்தின விசேஷம் விளக்கம் POST - 311 வெளிப்படுத்தல் 14-ம் அதிகாரம் : XII 1)“பின்பு, வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக் கண்டேன்; அவன் பூமியில் வாசம் பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து,” (வெளி 14:6) (Part - 1) அன்பான கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அப்.யோவான் வெளி 14-ம் அதிகாரத்தில் காணும் இரண்டாவது தரிசனம் 6,7 வசனங்களில் சொல்லப்படுகிறது. சகல ஜாதிகளுக்கும், கோத்திரங்களுக் கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் (உலகத்தில் உள்ள சகல ஜனங்களுக்கும்) அறிவிக்க வேண்டிய நித்திய சுவிசேஷத்தை உடைய தேவ தூதன் வானத்தின் மத்தியிலே பறந்து கொண்டிருப்பதை அப்.யோவான் காண்கிறார். இந்த அதிகாரத்தில் மட்டும் ஐந்து தூதர்கள் கடைசி காலத்துக்குரிய செய்திகளை உலகத்தாருக்குக் கொண்டு வருகிறார்கள். ஆகையால் உலகத்தார் அத்தனை பேரும் விளங்கிக் கொள்ளும் விதத்தில் ஒரு பொதுவான பாஷையில் இந்த தூதன் தன் செய்தியை அறிவிப்பான் என்று சில வேத பண்டிதர்கள் எண்ணுகிறார்கள். நித்திய சுவிசேஷம் (Everlasting Gospel) என்ற வார்த்தை வேதாகமத்தில் இந்த ஒரு இடத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. தேவாதி தேவன் நித்தியவாசியானபடியால் அவருடைய சுவிசேஷமும் நித்தியமானது. அதற்கு ஆரம்பமும் முடிவும் இல்லை. “நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமையை அடையும் பொருட்டாக எங்கள் சுவிசேஷத்தினாலே அந்த இரட்சிப்புக்கு அவர் உங்களை அழைத்தார்." (2 தெச 2:14). "நித்தியானந்த தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிற ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடையாயிருக்கிற மற்றெந்தச் செய்கைக்கும் விரோதமாய் விதிக்கப்பட்டிருக்கிறது." (I தீமோ 1:11). ஆகையால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்து இயேசுவினால் உண்டான இரட்சிப்பை நித்திய மகிமையோடே பெற்றுக்கொள்ளும்படி சகலத்தையும் அவர்கள் நிமித்தமாகச் சகிக்கிறேன்." (2 தீமோ 2:10). நித்திய ஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்." (யோவா 2:25). "நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள்." (அப் 13:48). “அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன்." (யோவா 12:50). "ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு றிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்." (யோவா 17:3) மேற்காணும் கர்த்தருடைய திருவசனங்களெல்லாம் நித்திய ஜீவனை அடைவதற்குரிய வாக்குத்தத்தங்களாகவே காண முடிகிறது. நித்திய சுவிசேஷம் என்றாலே, "நித்தியானந்த தேவனுடைய மகிமையையும்" (I தீமோ 1:11): "கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமையையும்" (2 தெச 2:14) அடைந்து கொள்வதற்குரிய நற்செய்தியே நித்திய சுவிசேஷம் என்று இவ்வசனங்கள் போதிக்கின்றது. தேவனுடைய மகிமையின் மறுரூபத்தை அடைந்தாலே நித்திய ஜீவன் ( கொரி 15:51,52; 2 பேது 1:3) என்பதினால் வெளி 14:6,7 மூலம் தூதனால் அறிவிக்கப்பட்ட நித்திய சுவிசேஷமாவது, மனுக்குலம் நித்திய மகிமையை அடைந்துகொள்ள அறிவித்த அழைப்பின் சுவிசேஷமே என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. சுவிசேஷத்தை அறிவிக்கும் பொறுப்பினை தேவனாகிய கர்த்தர் ஆதி முதற்கொண்டு மனிதர்களாகிய பரிசுத்தவான்களுக்கு மட்டுமே வழங்கி வருகிறார். பழைய ஏற்பாட்டிலானாலும், புதிய ஏற்பாட்டிலானாலும் தேவ தூதர்கள் மனித இனத்துக்கு பரலோகத்திலிருந்து பல செய்திகளைக் கொண்டு வந்தார்கள் என்றாலும், இரட்சிப்பின் சுவிசேஷத்தை அவர்கள் ஒரு போதும் அறிவித்ததில்லை. "தங்கள் நிமித்தமல்ல, நமது நித்தமே இவைகளைத் தெரிவித்தார்களென்று அவர்களுக்கு வெளியாக்கப்பட்டது; பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியினாலே உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவர்களைக் கொண்டு இவைகள் இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது, இவைகளை உற்றுப்பார்க்கத் தேவ தூதரும் ஆசையாயிருக்கிறார்கள்." (I பேது 1:12) “தெயோப்பிலுவே, இயேசுவானவர் தாம் தெரிந்து கொண்ட அப்போஸ்தலருக்குப் பரிசுத்த ஆவியினாலே கட்டளையிட்ட பின்பு, அவர் எடுத்துக்கொள்ளப்பட்ட நாள் வரைக்கும் செய்யவும் உபதேசிக்கவும் தொடங்கின எல்லாவற்றையுங் குறித்து, முதலாம் பிரபந்தத்தை உண்டு பண்ணினேன்." (அப் 1:1,2). "அதற்காக அவர்கள் ஒரு நாளைக் குறித்து, அநேகம் பேர் அவன் தங்கியிருந்த வீட்டிற்கு அவனிடத்தில் வந்தார்கள். அவன் காலமே தொடங்கிச் சாயங்கால மட்டும் மோசேயின் நியாயப் பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் இருந்து இயேசுவுக்கடுத்த விசேஷங்களை அவர்களுக்குப் போதித்து. தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துச் சாட்சி கொடுத்து விஸ்தரித்துப் பேசினான்." (அப் 28:23). "மிகுந்த தைரியத்துடனே தடையில்லாமல் தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றிய விசேஷங்களை உபதேசித்துக் கொண்டிருந்தான்." (அப் 28:31). “இதோ நான் உங்களுக்குள்ளே சஞ்சரித்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கம் பண்ணினதைக் கேட்டவர்களாகிய நீங்களெல்லாரும் இனி என் முகத்தைப் பார்க்க மாட்டீர்களென்று அறிந்திருக்கிறேன்." (அப் 20:25). “பவுல் ஜெப ஆலயத்தில் பிரவேசித்து, தைரியமாய் பிரசங்கித்து, மூன்று மாதமளவும் தேவனுடைய ராஜ்யத்துக்கடுத்தவைகளைக் குறித்துச் சம்பாஷணை பண்ணி, புத்தி சொல்லிக் கொண்டு வந்தான்". (அப் 19:8). "பவுலும் பர்னபாவும் அந்நியோகியாவிலே சஞ்சரித்து, வேறே அநேகரோடுங் கூடக் கர்த்தருடைய வசனத்தை உபதேசித்துப் பிரசங்கித்துக் 'கொண்டிருந்தார்கள்". (அப் 15:35). “இந்த நிருபம் பரிசுத்தமான சகோதரர் யாவருக்கும் வாசிக்கப்படும்படி செய்ய வேண்டுமென்று - கர்த்தர் பேரில் ஆணையிட்டு உங்களுக்குச் சொல்லுகிறேன்." (தெச 5:27). "இந்த நிருபம் உங்களிடத்தில் வாசிக்கப்பட்ட பின்பு இது - லவோதிக்கேயா சபையிலும் வாசிக்கப்படும்படி செய்யுங்கள்: வோதிக்கேயாவிலிருந்து வரும் நிருபத்தை நீங்களும் வாசியுங்கள். பவுலாகிய நான் என் கையினால் எழுதி, உங்களை வாழ்த்துகிறேன். நான் கட்டப்பட்டிருக்கிறதை நினைத்துக் கொள்ளுங்கள். கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென்" (கொலோ 4:16,18) (தொடரும்) கிறிஸ்துவின் ஊழியப்பாதையிலே அப்போஸ்தலர், I. ஆசீர்வாதம் "பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை" மதுரை, இந்தியா, (தினந்தோறும் எங்களது Whatsapp Channel - மூலமாக வசனம் மற்றும் சத்தியங்களை அறிந்துக்கொள்ள இணையுங்கள். ஜெப தொடர்பிற்கு Pr.Arulnatharaj 8682882815, Pr Sam Gunaraj 8682882805) Follow the பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaNA8Y66BIEhjWAI0K3n. #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #🙏கோவில்
🙏ஆன்மீகம் - ன்றைய வெளிப்படுத்தின் விசேஷதியானம் 01/07 /2026 3.வெளிப்படுத்தல் 14-ம் அதிகாரம்  வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக் கண்டேன்; பின்பு, XII 1) வாசம் பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பூமியில்  அவன் பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நீத்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து , ' (oھ6f 14:6) (Part 1) பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை ன்றைய வெளிப்படுத்தின் விசேஷதியானம் 01/07 /2026 3.வெளிப்படுத்தல் 14-ம் அதிகாரம்  வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக் கண்டேன்; பின்பு, XII 1) வாசம் பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பூமியில்  அவன் பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நீத்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து , ' (oھ6f 14:6) (Part 1) பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை - ShareChat