#தன்னையே #நேசித்தாள்...
உலகம் தேடிய அன்பை
எல்லாம் உள்ளுக்குள்
தேடத் தொடங்கினாள்
பிறர் முகம் பார்த்துக்
காத்திருந்தவள்
தன் பிம்பம் பார்த்து
புன்னகைத்தாள்
அவள் கண்ணீருக்கு அவளே
அணையாக மாறினாள்
அவள் காயங்களுக்கு அவளே
மருந்தாகத் தெரிந்தாள்
யாரோ தரும் அங்கீகாரத்தை விட
தன் ஆன்மாவின் அமைதி
பெரிதென்றாள்
அவள் அழகானவள்
அவள் வலிமையானவள் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
என உணர்ந்த நொடி
உலகம் அவளுக்கு அழகானது
எப்போது தன்னை
முழுமையாய் நேசித்தாளோ
அப்போது தான் அவளது உலகம்
அவள் வசப்பட்டுப் போனது
வாழ்க்கையும் இனிமையாய்
மாறியது .....

